தந்தை பெரியாரின் தமிழ்மொழியாராய்ச்சி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 36 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 37 7. தமிழ்ப்புலவர்கள் தமிழ் மொழியைப் பற்றியும், இலக்கியத்தைப் பற்றியும் ஆராய்ந்து பேசும், எழுதும் தமிழ்ப்புலவர்களைப் பற்றி தந்தை பெரியார் அவர்கட்கு நல்ல மதிப்பு இல்லை; குறைகள் மிகுந்தவர்கள், ஒழுங்கற்றவர்கள், யோக்கியதை இல்லாதவர்கள் என்றே கருதுகின்றார். புலவர்களைப் பற்றி ஐயா அவர்களின் சிந்தனைகள்: (1) நம்நாட்டில் எனக்குத் தெரிந்தவரையில் தமிழ்நாட்டுக்கோ, தமிழ் பண்பாட்டுக்கோ ஒரு பலனும் புலவர்களால் ஏற்பட்டதில்லை. தமிழ்ப்புலவர்கள் ஆரியப்பண்பாடு, பழக்கவழக்கங்களில் மூழ்கிப் போனவர்களாவார்கள். மேனாட்டுப் புலவர்கள் இப்படியல்லர்; அவர்கள்…
தந்தை பெரியாரின் தமிழ்மொழியாராய்ச்சி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 35 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 36 5. தமிழ்மொழியாராய்ச்சி மேலே காட்டியவாறு பெரியாரின் இந்தி எதிர்ப்புச் சிந்தனைகளைக் கண்டோம். தமிழ் மொழி ஆய்வுபற்றியும் சிந்தனைகளைச் செலுத்தியுள்ளார். அச்சிந்தனைகள் சிலவற்றை ஈண்டுக் காட்டுவேன். (1) ‘தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்பவை தமிழேயாகும்’. மலைநாட்டுப் பகுதியில் பேசும் தமிழ் மலையாளம் என்று சொல்லப்பெறுகின்றது, கருநாடகப் பகுதியில் பேசப்பெறும் தமிழ் கன்னடம் எனப்பெறுகின்றது. ஆந்திரப் பகுதியில் பேசப்பெறும் தமிழ் தெலுங்கு எனப்படுகின்றது. இந்த நால்வரும் பேசுவது தமிழ்தான். (2) திராவிடமொழிகள்…
தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 34 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 35 தன்வாழ்வைத் தொண்டாக்கித் தமிழ்நாட்டைவளமாக்கத் தகுஞ்செயல்கள்நன்றாற்றி நம்பெரியார் ஈ.வெ.ராமுதுமைதனைக் கண்ட போதில்தென்னாட்டில் தமிழகத்தில் இந்திஎனும்புன்மொழியைத் தேசப் பேரால்சென்னைமுதல் அமைச்சரவர் கட்டாயம்ஆக்கிவிடத் திட்டம் செய்தார்! (1) தாய்மீதில் விருப்பற்ற ஓரிளைஞன்தன்னுழைப்பைத் தாய்நாட்டிற்கேஈயென்றால் மதிப்பானா? எதிரிமொழிமதித்துயிரவைத் திருப்பான் பேடி!தூயதமிழ் நாட்டில்செந் தமிழ்மொழியைமன்றத்திந்தி தோன்றின் நாடேதாயென்ற நிலைபோகும்! தமிழ்சாகும்!இந்தியெனும் கனிமே லாகும்! (2) ஈதறிந்த ஈரோட்டுத் தத்தாதாம்ஓயாமல் எழுத்தி னாலும்மோதியுணர் வலையெழுப்பி மக்களைத்தம்வயப்படுத்தும் மொழியி னாலும்தீதுவரும் இந்தியினால்! முன்னேற்றம்தடையாகும்! தீந்த மிழ்க்கும்ஆதரவு கிடைக்காமல் அழிவுவரும்!இந்திஉயர் வாகும்…
தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 33 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 34 (எ) இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நம்நாட்டு மகளிர் மனத்தையும் கொள்ளை கொண்டது. அவர்களும் மொழிப்போரில் ஈடுபட்டனர். 1938 நவம்பர் 13-இல் சென்னையில் மகளிர் மாநாடு நடைபெற்றது. திருவாட்டி நீலாம்பிகை அம்மையார் (மறைமலையடிகளின் திருமகளார்) மாநாட்டுத்தலைவர். இம்மாநாட்டில் தந்தைபெரியார் ஆற்றிய சொற்பொழிவு தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்தது; உரிமை உணர்ச்சியை எழுப்பிவிட்டது. இம்மாநாட்டில்தான் ஈ. வெ. இராமசாமி பெயருக்கு முன் பெரியார் என்னும் அடைமொழி கொடுத்து அழைக்க வேண்டும் என முடிவு செய்தனர். (ஏ) பெரியார் மீது வழக்கு: இம்மாநாடு முடிந்தபின் பல பெண்கள் மறியல்…
133 மணிநேரக் குறளரங்கம், 4ஆம் நாள் நிகழ்வு, இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை
திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன்றம் அனைத்து இந்தியப் புத்தக ஆவணம், புதுச்சேரி 133 மணிநேரக் குறளரங்கம், 4ஆம் நாள் நிகழ்வு தலைமை: பேரா.வெ.அரங்கராசன் சிறப்புரை: திரு இலக்குவனார் திருவள்ளுவர் உரையாளர்கள் அழைப்பிதழில் உள்ளவாறு அன்புடன் முனைவர் இளைய ஒளவை தாமரை
133 மணிநேரத் திருக்குறள் தொடரரங்கம் + 3ஆம் நாள் நிகழ்வு
மூன்றாம் நாள் 15.01.2022அமர்வுகள் – நிகழ்ச்சி நிரல் 9.30 குறள் வாழ்த்து நல்லாசிரியர் இரத்னா.தே. தமயந்தி அவர்கள் வரவேற்புரை திருக்குறள் முனைவர் ஔவை தாமரை தலைமையுரை செம்மொழிக் கலைஞர் விருதாளர்அருள்திரு திருக்குறள் தூயர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு ஐயா அவர்கள் சிறப்புரை 1)தமிழாறு சாலமன் தங்கதுரை அவர்கள்கல்வியாளர்சத்தியம் ஆதாரக் கல்வி அறக்கட்டளைபொன்னேரி 2)பேராசிரியர் வெ.அரங்கராசன் அவர்கள் நன்றியுரை முனைவர் மா.பாப்பா உதவிப் பேராசிரியர், பாத்திமா கல்லூரி மதுரை அமர்வு 17 தலைமை முனைவர் சௌ.கீதாமுதல்வர்அ.ம.க.கல்லூரி, காரிமங்கலம் கட்டுரையாளர்கள் 1) செல்வி நா.சையதலி பாத்திமா 2)முனைவர்…
தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 32 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 33 4. இந்தி எதிர்ப்பு “உலக வாழ்க்கையில் ஓர் ஒடிந்து போன குண்டூசிக்கும் பயன்படாத மொழியாகிய இந்திக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்பெற்று வருகிறது. என்பது வெகுநாளாகத் தமிழ் மக்கள் கவனித்து வரும் சங்கதியாகும்” என்று எழுதிய ஐயா அவர்கள் இந்தி எதிர்ப்புக்காக மேற்கொண்ட பணி மிகப் பெரியது. இவற்றை விவரமாக ஈண்டு எடுத்துக்காட்டுவேன். 1926-ஆம் ஆண்டு முதலே பெரியார் தமிழ்நாட்டில் இந்தி நுழைக்கப்பபெறுவதை எதிர்த்து வருகின்றார். “இந்தியைப் பொதுமொழியாக்குவதால் நாட்டிற்கு நன்மை…
133 மணிநேரத் திருக்குறள் தொடர் இணைய ஆய்வரங்கம்
திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன்றம் அனைத்திந்திய புத்தக ஆவணம், புதுச்சேரி இணைந்து வழங்கும் வள்ளுவம் போற்றுவோம் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி 133 மணிநேர இணைய வழி உலக அருந்திறல் பன்னாட்டுத் திருக்குறள் ஆய்வரங்கம் தொடக்க விழா திருவள்ளுவர் ஆண்டு 2052 மாா்கழி 29 13.01.2022 வியாழன் காலை 9.30 முதல் தொடர்ந்து 133 மணிநேரம் 133 கட்டுரையாளர்களின் அருந்திறல் ஆய்வரங்கம் நடைபெறும். குத்துவிளக்கேற்றித் தலைமையுரை அருள்மிகு திருக்குறள் தூயர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு தொடக்கச் சிறப்புரை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் பொறி….
தந்தை பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 31 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 32 3. மொழிபற்றிய சிந்தனைகள் மொழி (தொடர்ச்சி) (ஈ) தமிழ் மக்கள் என்னும் குழந்தைக்குத் தாய்ப்பால் என்னும் தமிழானது முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளருவதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில், தாய்ப்பாலில் சக்தியும் சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்குத் தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைப் பருகும், குழந்தை உருப்படியாக முடியுமா! தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்குப் பால் ஊறும்?…
தந்தை பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 30 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 31 3. மொழிபற்றிய சிந்தனைகள் 3. மொழி மொழிபற்றிய தந்தை பெரியாரின் கருத்துகளை உங்கள்முன் வைக்கிறேன். (1) மொழி பற்றியவை: (அ) மொழி என்பது ஒருவர் கருத்தை மற்றவருக்கு அறிவிக்கப் பயன்படுவது என்பது தவிர வேறு எதற்குப் பயன்படுவது? இது தவிர மொழியில் வேறு என்ன இருக்கிறது? இதற்காகத் தாய்மொழி என்பதும், தகப்பன் மொழி என்பதும், நாட்டுமொழி என்பதும், மொழிப்பற்று என்பதும், முன்னோர் மொழி என்பதும் எதற்காக மொழிக்குப் பொருத்துவது என்பது எனக்குப் புரியவில்லை….
தந்தை பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 29 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 30 3. மொழிபற்றிய சிந்தனைகள் 2. மொழியின் தோற்றம் ‘மொழி’ என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலையாகும். மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்றதாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுதல்; அவள் முதலில் அடையும் பெருமகிழ்ச்சி, குழந்தையின் பேச்சைக் கேட்பதிலேயே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு ஒத்துவளர்ந்து வருவது மொழிவளர்ச்சியேயாகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது; மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின்…
தந்தை பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகள்: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 28 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 29 3. மொழிபற்றிய சிந்தனைகள் அன்பு நிறைந்த தலைவர் அவர்களே!அறிஞர் பெருமக்களே!மாணாக்கச் செல்வங்களே! இன்றைய மூன்றாவது பொழிவு பெரியாரின் ‘மொழி பற்றிய சிந்தனைகள்’ ஆகும். பேச்சைத் தொடங்குவதற்குமுன் வேறு சில செய்திகளை உங்கள் முன் வைக்கிறேன். இரண்டு சொற்பொழிவுகளில் தந்தைபெரியாரைப்பற்றி மின்வெட்டு போல சில குறிப்புகள் மட்டிலும் தான் உங்கட்குத் தெரிந்திருக்கும். இந்தப் பெரியார் யார்? என்பதை இன்றைய பொழிவில் விவரமாகச் சொல்வேன். (குறிப்பு 1) பெரியார் வாழ்க்கைக் குறிப்புகள் தந்தை பெரியார் பிறந்தது- அவதரித்தது…
