உ.வே.சா.வின் என் சரித்திரம் 99 – இரட்டைத் தீபாவளி

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 98 : பிரிவில் வருத்தம்-தொடரும்) என் சரித்திரம் அத்தியாயம்—62 இரட்டைத் தீபாவளி எங்கே பார்த்தாலும் விசபேதியின் கொடுமை பரவியிருந்தது. திருவாவடுதுறையைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் அந்நோய்க்கு இரையானவர்கள் பலர். திருவாவடுதுறையிலும் சிலர் இறந்தனர். அதுகாறும் அத்தகைய நோயை அறியாத சனங்கள், “காலம் கெட்டுவிட்டது. கலி முற்றுகிறது. தருமம் அழிந்து வருகிறது. அதனால்தான் இக்கொள்ளை நோய் வந்திருக்கிறது” என்று சொன்னார்கள். “இரெயில் வந்தது. ஆசாரம் ஒழிந்தது, அதற்குக் தக்க பலன் இது” என்று சிலர் பேசினர். வேதநாயகம் பிள்ளை விண்ணப்பம் அரசாங்கத்தார் அந்நோய்…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 15, அரிதாகும் அவன் மார்பு!

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 14. மனமும் இனமும்-தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி 12. அரிதாகும் அவன் மார்பு! வேட்டுவக்குடியில் வந்த ஓர் இளைஞன் ஒருநாள் வழக்கம்போல் வேட்டைமேற் சென்றான். வேட்டைக்குத் துணைபுரியும் அவனுடைய வளர்ப்பு நாய் அவனைப் பின் தொடர்ந்து விரைந்து வந்து கொண்டிருந்தது. அன்று, அவன் தன்னை அழகிய மலர்களால் ஆன மாலையால் அணி செய்து கொண்டிருந்தான். நிறத்தைப் போலவே நாற்றத்தாலும், பற்பல வகை மலர்களைச் கொண்ட அம்மாலையின் மணம் செல்லும் வழியெங்கும் சென்று நெடுநேரம் கழிந்த பின்னரும் நாறிக் கொண்டிருந்தது….

உ.வே.சா.வின் என் சரித்திரம் 98 : பிரிவில் வருத்தம்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 97 : பிரசங்க சம்மானம்-தொடர்ச்சி) என் சரித்திரம் நான் பிள்ளையவர்களிடம் போக எண்ணி இருப்பதை அக்கூட்டத்தினருக்குத் தெரிவிக்க வேண்டுமென்பது என் கருத்து. பிரசங்கம் செய்யும்போதே பிள்ளையவர்களைப் பற்றிச் சொல்லுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள எண்ணினேன். இப்பாட்டு அச்சந்தர்ப்பத்தை அளித்தது. இப்பாடலுக்குப் பொருள் சொல்லிவிட்டு விசேட உரை சொல்லத் தொடங்கினேன். “வசிட்டாதி முனிவர்கள் என்று சொன்ன மாத்திரத்தில் எல்லா முனிவர்களும் அடங்கிவிடுவார்கள். அப்படி இருக்க, குறுமுனியை என்று அகத்திய முனிவரைத் தனியே ஆசிரியர் எடுத்துச் சொல்லியிருக்கிறார். வசிட்டருக்கு எவ்வளவு சிறப்பு…

தமிழுக்குவளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். அ. ஆந்திரிக்கசு அடிகளார்‌, ஆ. வீரமாமுனிவர்‌

தமிழுக்குவளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். 1. அச்சுக்கலைத்‌ தந்த ஆந்திரிக்கசு அடிகளார்‌ முன்னுரை : உலக மொழிகள்‌ மூவாயிரத்துக்கு மேற்பட்டவை. உலகின்‌ முதன்‌ மொழியாக ஒளியுடன்‌ மிளிர்வது தமிழ்‌. இரண்டாயிரத்துப்‌ பத்து மொழிகளில்‌ இடம்‌ பெற்றுள்ள விவிலியத்‌ திருநூல்‌, பாபேல்‌ கோபுரம்‌ கட்டப்பட்டபோது ஒரே மொழியாகத்‌ தமிழ்‌ திகழ்ந்ததைத்‌ தெளிவுறுத்துகிறது. தொடக்கநூலில்‌ (1:1-2)இரண்டு தொடர்கள்‌ இச்செய்தியை எடுத்துரைக்கின்றன. உலகம்‌ முழுவதும்‌ ஒரே மொழியும்‌ ஒரே வார்த்தையும்‌ இருந்தன. பாபேல்‌ கோபுரத்தை கட்டிய பெருமைக்குரியவர்‌ தமிழர்‌. கிழக்கே இருந்து சென்ற தமிழர்‌ சிநேயார்ச்சு‌ சமவெளியில்‌ தங்கி…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 97 : பிரசங்க சம்மானம்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 96 : அங்கே இல்லை- தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-61 பிரசங்க சம்மானம் காரைக்கு வந்தவுடன் திருவிளையாடற்புராணப் பிரசங்கத்தைப் பூர்த்தி செய்யும் விசயத்தில் எனக்கு வேகம் உண்டாயிற்று. “இன்னும் கொஞ்சநாள் பொறுத்தால் அதிகத் தொகை சேரும்” என்று சிலர் கூறினர். “கிடைத்தமட்டும் போதுமானது” என்று கிருட்ணசாமி ரெட்டியாரிடம் சொன்னேன். பிள்ளையவர்கள் தமக்கு எழுதிய கடிதத்தைக் கண்டு அவர் அளவற்ற ஆனந்தமடைந்தார். அவர் விசயமாக அப்புலவர் பிரான் எழுதியிருந்த பாட்டைப் படித்துப் படித்துப்பெறாத பேறு பெற்றவரைப் போலானார். “உங்களுடைய சம்பந்தத்தால் அம்மகா…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 95 : அத்தியாயம்-60 : அம்பரில் தீர்ந்த பசி

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 94 : அத்தியாயம்-59 : திருவிளையாடற் பிரசங்கம்-தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-60 அம்பரில் தீர்ந்த பசி செங்கணத்திலிருந்து காரைக்குப் புறப்படுகையில் விருத்தாசலரெட்டியாரிடம் பாகவதம், கம்பராமாயணம், திருக்கோவையார். திருக்குறள்ஆகிய புத்தகங்களை இரவலாக வாங்கிப் போயிருந்தேன். பாகவதம் மாத்திரம்ஏட்டுப் பிரதியாக இருந்தது. காரையில் பகல் வேளைகளில் அவற்றையும்என்னிடமிருந்த வேறு நூல்களையும் படித்து இன்புற்றேன். பாகவதம்படித்தபோது முதல் கந்தமும் தசம கந்தமும் என் மனத்தைக் கவர்ந்தன. .கிருட்டிணசாமி ரெட்டியார் தெலுங்கு பாகவதத்தைப் படித்து அதிலுள்ளவிசயங்களைச் சொல்வார். தமிழ்ப் பாகவதத்திலுள்ள சில சந்தேகங்களைஅவர் கூறிய செய்திகளால் நீக்கிக்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 94 : அத்தியாயம்-59 : திருவிளையாடற் பிரசங்கம்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 93 : அத்தியாயம்-58 : எனக்கு வந்த சுரம்-தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-59 திருவிளையாடற் பிரசங்கம் நானும் என் தந்தையாரும் நிச்சயித்தவாறே வைகாசி (1874சூன் மாதம்) மாத இறுதியில் என் பெற்றோர்களுடன் நான் செங்கணத்தைநோக்கிப் புறப்பட்டேன். முதலில் அரியிலூருக்குச் சென்றோம். அங்கே ஒருவேளை தங்கிச் சடகோபையங்காருடன் பேசினோம். பிள்ளையவர்களுடையவிசயங்களைப் பற்றி அவர் ஆவலுடன் விசாரித்தார். அரியிலூரில் முன்புபழகினவர்களெல்லாம் எங்கள் வரவை அறிந்து வந்து பார்த்துச் சென்றனர். செங்கண நிகழ்ச்சிகள் பிறகு நாங்கள் குன்னத்தின் வழியே செங்கணம் சென்றோம். அங்கேவிருத்தாசல ரெட்டியாரும் வேறு…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 93 : அத்தியாயம்-58 : எனக்கு வந்த சுரம்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 92 : அத்தியாயம்-57 : திருப்பெருந்துறை – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-58 எனக்கு வந்த சுரம் திருப்பெருந்துறையில் புராண அரங்கேற்றம் ஒரு நல்ல நாளில்ஆரம்பிக்கப்பெற்றது. சுப்பிரமணியத் தம்பிரான் அதன் பொருட்டு மிகவிரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அயலூர்களிலிருந்து கனவான்களும்வித்துவான்களும் சிவநேசச் செல்வர்களும் திரள் திரளாக வந்திருந்தனர். குதிரை சுவாமி மண்டபத்தில் அரங்கேற்றம் நடைபெறலாயிற்று.அப்போது நானே பாடல்களை இசையுடன் படித்து வந்தேன். பாடம்சொல்லும்போதும் மற்றச் சமயங்களிலும் தமிழ்ப்பாடல்களைப் படிக்கும்வழக்கம் எனக்கு இருப்பினும் அவ்வளவு பெருங்கூட்டத்தில் முதன்முறையாகஅன்றுதான் படிக்கத் தொடங்கினேன். கூட்டத்தைக் கண்டு…

ஆளுமையர் உரை 99 & 100 ; என்னூலரங்கம்-23.06.2024 காலை 10.00

தமிழே விழி!                                                                                 தமிழா விழி! செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள் – ௪௱௰௧ – 411) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : ஆனி 09, 2055  **** 23.06.2024  காலை 10.00 ஆளுமையர் உரை 99 & 100 ; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் பொதுமை…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 92 : அத்தியாயம்-57 : திருப்பெருந்துறை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 91 : அத்தியாயம்-56 : நான் இயற்றிய பாடல்கள்-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-57 திருப்பெருந்துறை மார்கழி மாதம் திருவாதிரைத் திருநாள் நெருங்கியது. திருவாதிரைத்தரிசனத்துக்குத் திருப்பெருந்துறைக்குச் சென்று புராண அரங்கேற்றத்தைமுடித்துக்கொண்டு திரும்பலாமென்று என் ஆசிரியர் நிச்சயம் செய்தார்.எல்லாரிடமும் விடை பெற்று அவர் (1873 திசம்பர்) புறப்பட்டார்.மாயூரத்திலிருந்து சவேரிநாத பிள்ளை எங்களுடன் வந்தார். வேறு சிலமாணாக்கர்களும் வந்தார்கள். சுப்பிரமணிய தேசிகர் மடத்துப் பிரதிநிதியாகப்பழநிக் குமாரத் தம்பிரானென்பவரை அனுப்பினர். புறப்பாடு எல்லாரும் சேர்ந்து புறப்பட்டோம். திருவிடைமருதூர் சென்று அங்கேதங்கி அப்பால் கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 91 : அத்தியாயம்-56 : நான் இயற்றிய பாடல்கள்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 90 : அத்தியாயம்-55 : சிறு பிரயாணங்கள்-தொடரச்சி) என் சரித்திரம்நான் இயற்றிய பாடல்கள் தஞ்சை மார்சல் கல்லூரி தமிழ்ப்பண்டிதரும் என் ஆசிரியருடைய மாணாக்கருமாகிய ஐயாசாமிப்பிள்ளையென்பவரும் இலக்கணம் இராமசாமி பிள்ளையென்பவரும் வேறு சிலரும் விரும்பியபடி ஆசிரியர் தஞ்சை சென்று அங்கே ஒரு மாதம் தங்கியிருந்தார். அக்காலத்தில் நான் அவருடைய உத்தரவின்படியே உத்தமதானபுரம் சென்று என் தாய் தந்தையரோடு இருந்து வரலானேன். என் சிறிய தகப்பனாருடைய வருவாய் போதாமையால் குடும்பம் மிக்க சிரமத்தோடு நடைபெற்று வந்தது.அக்குடும்ப நிலை திருந்தவேண்டுமாயின் என் தந்தையார் மீட்டும்…

ஆளுமையர் உரை 97 & 98 ; என்னூலரங்கம்-09.06.2024  காலை 10.00 – தமிழ்க்காப்புக் கழகம்

தமிழே விழி!                          தமிழா விழி! கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.( திருக்குறள், 414) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : வைகாசி 27, 2055  **** 09.06.2024  காலை 10.00 ஆளுமையர் உரை 97 & 98 ; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் தமிழ்ச்செம்மல் முனைவர் வேணு புருசோத்தமன் திருக்குறள் நம்பி ச.சிரீதர்…