அரசியல் ஆத்திசூடி அல்லது தேர்தல் ஆத்திசூடி – இலக்குவனார் திருவள்ளுவன்

அரசியல் ஆத்திசூடி அல்லது தேர்தல் ஆத்திசூடி அறநெறி தவறுவோர்க்கு வாக்கு அளிக்காதீர்! ஆருயிர்த் தமிழைப் போற்றாதவர்க்கு வாக்களிக்காதீர்! இனப் பகைவருக்கு வாக்களிக்காதீர். ஈழத் தமிழர்களை அழித்தவர்க்கு வாக்களிக்காதீர்! உண்மை பேசாதவர்க்கு வாக்களிக்காதீர் ஊழலில் வாழ்பவர்க்கு வாக்களிக்காதீர்! எளிமையை மறந்தவர்க்கு வாக்களிக்காதீர் ஏய்த்துப் பிழைப்பவர்க்கு வாக்களிக்காதீர்! ஐயததிற்கு இடம் ஆனவர்களுக்கு வாக்களிக்காதீர்! ஒழுக்கக் கேடர்களுக்கு வாக்களிக்காதீர்! 11.ஓய்விலே சுவை காண்பவருக்கு வாக்களிக்காதீர்! ஔவியம் (அழுக்காறு) உடையவர்க்கு வாக்களிக்காதீர்! அஃகம் (முறைமை ) தவறுபவர்க்கு வாக்களிக்காதீர்! கயவருக்கு வாக்களிக்காதீர்! காலம் அறிந்து உதவாதவர்க்கு வாக்களிக்காதீர்! கிடைத்ததை எல்லாம்…

மீண்டும் மீண்டும் கூட்டமொன்று வரும் வரும் – ஏர்வாடி இராதாகிருட்டிணன்

மீண்டும் மீண்டும் கொடிகளோடு கூட்டமொன்று வரும் வரும்- தாம் கொண்டு வந்த பரிசுகளைத் தரும் தரும் கால்களிலே கைகளிலே விழும் விழும்- நம் கதவு தட்டிக் கைவணங்கித் தொழும் தொழும் அவ்வப்போது கொள்கைகளை விடும் விடும் – அது அரசியலில் இயல்பென்று கதை விடும். ஐந்தாண்டுக் கொருமுறைதான் தேர்தல் வரும்-பாவம் அன்று நமது அறிவில் இடி விழும் விழும். தவறு செய்து விட்டதாகத் தெளிவு வரும்- அந்தத் தவற்றை மீண்டும் செய்ய அடுத்த தேர்தல் வரும்…. ஏர்வாடி இராதாகிருட்டிணன்

பல்நிற வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைகள்

பல்நிற வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைகள்! பல்நிற வாக்காளர் அடையாள அட்டையைப் பெறுவதற்கான கட்டணம் உரூ.25-ஐ இணையத்தளத்திலும் செலுத்தலாம். இதன்படி விண்ணப்பிப்போருக்கு வீடு தேடி வாக்காளர் அட்டை வரும். நாட்டிலேயே முதல் முறையாக, இந்திய அரசு வங்கியுடன்(State Bank of India) தமிழகத் தேர்தல் ஆணையம் இதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  சென்னைத் தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் இராசேசு இலக்கானி இது குறித்து ச்,  செய்தியாளர்களிடம் 29.03.2016 அன்று கூறியதாவது:- பல்நிற வாக்காளர் அட்டையைப் பெறச் செலுத்த வேண்டிய உரூ.25/-…

வேட்பாளர்களும் வாக்காளர்களும் பங்கேற்க வேட்பாளர் மேடை

  வேட்பாளர்களும்  வாக்காளர்களும் பங்கேற்க வேட்பாளர் மேடை     வரும் சட்டமன்றத்தேர்தலில்(2016) தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ‘வேட்பாளர் மேடை’ என்னும் புதிய பகுதி (அகரமுதல மின்னிதழில்) தொடங்கப்படுகிறது.   வாக்காளர்களும் தங்கள் தொகுதிக்கு எத்தகைய வேட்பாளர் வரவேண்டும் என்று தங்கள் விருப்பத்தைத்தெரிவிக்கலாம்.   தத்தம் ஒளிப்படம், முகவரி, தொலை பேசி, அலைபேசி எண்கள் விவரங்கள், மின்னஞ்சல், சார்ந்துள்ள கட்சி அல்லது அமைப்பு அல்லது தற்சார்பு  (சுயேச்சை) விவரம், தொகுதி விவரம், தேர்தல் சின்னம் தெரிவிக்கப்படவேண்டும்.  …

பிற கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியுள்ள ம.ந.கூட்டணி விரிவு

பிற கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியுள்ள ம.ந.கூட்டணி விரிவு    விசயகாந்தைத் தங்கள் பக்கம் இழுக்க முயன்ற ஒவ்வொரு கட்சியும் அவர் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்ததும்   அவரையும்  வைகோவையும் தாழ்த்தியும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.   அப்படியானால்  இவர்கள் ஏன்,  விசயகாந்தைத் தங்கள் பக்கம் இழுக்கப் பலவாறாக முயன்றனர். விசயகாந்துடன் இணைந்ததால் ம.ந.கூட்டணியைத் தாழ்வாகக் கூறுகின்றனரே, அப்படியானால், தங்களைவிட இக்கூட்டணி உயர்வானது, அத்தகைய உயர்வான கூட்டணி ஏன் விசயகாந்துடன் இணைந்தது என்கின்றனரா?  தேர்தலில் கூட்டணி என்பது வெற்றிக்கான தொகுதி உடன்பாடேயன்றிக் கொள்கைக் கூட்டணியன்று. எனவே, வேறுவகையில்…

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!   வரும் தேர்தலில்  அஇஅதிமுக வெற்றி பெற்றுத் தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் வருவார் என ஆருடம் கூறவில்லை.   இன்றைக்கும் அவர்தான் முதல்வர் எனத் தேர்தல் தளம்  ஒன்று கூறுகிறது.   தேர்தல் ஆணையர் அறிவிப்புகளை அறிவதற்காகத் தேர்தல் ஆணையத் தளத்தைப் பார்வையிட முயன்றும் வழக்கம்போல் இயலவில்லை. பல முறை முயன்றாலும் ஒருமுறைதான் தளத்தைப் பார்க்க இயலும்.  தேர்தல் ஆணையத் தளத்தின் நிலை இதுதான். எனவே,  தனியார் தளம் (Elections.in  – India’s 1st Elections website)  ஒன்றில்…

கணையாழி / மோதிரம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குப் புதிய தேர்தல் முத்திரை

கணையாழி / மோதிரம் –  விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குப் புதிய தேர்தல்  முத்திரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, முதல்முறையாக 2004  நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோதும், 2006 சட்டசபைத் தேர்தலில்  நின்ற போதும் அம்பு  முத்திரையில் போட்டியிட்டது. ஆனால், கடந்த 2009  நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் புதிய சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது மக்கள் நலக் கூட்டணியில் ம.தி.மு.க. இ.பொ.க.,  மா.பொ.க. ஆகிய கட்சிகளுடனும் தே.தி.மு.க. தொகுதி உடன்பாட்டுடனும் போட்டியிடுகிறார்.   இத்தேர்தலில் தொல்.திருமாவளவன் வேண்டுகோளுக்கு இணங்க, விடுதலைச்சிறுத்ததைகள்கட்சிக்குக் கணையாழி…

வேட்பாளர் மாண்பு – முனைவர் க.தமிழமல்லன்

வேட்பாளர் மாண்பு தலைவர்: தகுதி என்ன? தலைமைக் கெவ்வளவு மிகுதியாய் நன்கொடை மேல்நீ தருவாய்? வேட்பாளர்: அம்மா வுக்கொன் றளித்துச் சின்ன அம்மா வுக்கும் அளித்து விட்டேன்! அடுத்தத் தலைவர்க் களிக்கும் பெட்டியும் அண்ணிக் கொன்றும் அணியம் ஐயா! தலைவர்: உன்றன் தாய்மொழி என்னவோ உரைப்பாய்? வேட்பாளர்: அன்புத் தமிழ்தான் அகத்தில் வேறு! தலைவர்: தமிழெனச் சொல்லு தமிழெனச் சொல்லு! வேட்பா- தமிழ்தான் தமிழ்தான் தாய்மொழி எனக்கு! தலைவர்: தொகுதி மதிப்பு மிகுதியாய் உண்டா? வேட்பாளர்: தொகுதி முழுவதும் மிகுதியாய் உள்ளவர், நம்சாதி மக்கள்!…

திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா!  தேர்தல் அரசியலுக்காகப் பெரும்பான்மைக் கட்சிகள் திராவிடக் கட்சிகளை ஒழிப்போம் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இப்போக்கு வரலாற்றை மறைப்பதாகும். குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (திருக்குறள் 504) எனத்   தெய்வப்புவலர் திருவள்ளுவர் நமக்கு வழிகாட்டியுள்ளார்.   எதிர்க்கும் கட்சிகளின் நிறைகளைக் கூறுவதற்கு மனம் வராதுதான். அதற்காக ஆற்றிய யாவும் தீமை என்பதுபோல் பேசக்கூடாதல்லவா? குறைந்தது குறைகளைப் பட்டியலிட்டு இத்தகைய குறைகளுக்காக இவற்றை ஆட்சிக்கு மீண்டும் வரச்செய்யக்கூடாது என்று சொல்லாம் அல்லவா?  …

சாதிகள் ஒழிந்தால் மக்களாட்சி வேரூன்றும்! – சி.இலக்குவனார்

சாதிகள் ஒழிந்தால் மக்களாட்சி வேரூன்றும்!   இன்னும் மக்களாட்சி முறைக்குரிய தேர்தலுக்கு வேட்பாளர் களை நிறுத்துவது சாதி அடிப்படையிலேயே நிகழ்கின்றது என்பதை யார்தாம் அறியார். வேட்பாளர் தகுதியறிந்து வாக்குகள் கொடாது சாதியறிந்துதானே கொடுக்கின்றனர் பெரும்பாலார். சாதிகள் வேண்டா என்று பறை சாற்றும் கட்சிகள்கூட இந்நிலையைப் புறக்கணிக்க முடியவில்லையே! ஆகவே சாதிகளின் பேரால் நிகழும் அனைத்தையும் தடுத்து நிறுத்தற்குச் சட்டத்தின் துணையை நாடல் முற்றிலும் பொருத்தமேயாகும். எம்முறையிலானும் சாதிகளை ஒழித்தல் வேண்டும். எவ்வளவு விரைவில் சாதிகன் ஒழிகின்றனவோ அவ்வாளவு விரைவில் நாட்டு நலம் காக்கப் பட்டதாகும்….

தேர்தல் நடத்தை நெறிமீறல் குறித்து முறையீடு அளிக்க பகிரழைப்பி(வாட்சு-ஆப்) எண்!

தேர்தல் நடத்தை நெறிமீறல் குறித்து முறையீடு அளிக்க  பகிரழைப்பி(வாட்சு-ஆப்) எண்! அறிவித்தது தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டுச் சட்டப்பேரவைத் தேர்தலில் நடத்தை நெறிமுறைகளை மீறி நடப்பவர் குறித்து முறையிட பகிரழைப்ப (வாட்சு-ஆப்) எண்களைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்துச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தத் தமிழகத் தேர்தல் ஆணையர் இராசேசு இலக்கானி, “தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள்   செயற்பாட்டில் உள்ளன. மாநிலம் முழுவதிலும் பறக்கும் படையினர் தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாக்குப் பொறிகளைச் சரி பார்க்கும் பணி 90% முடிந்து விட்டது. சட்டமன்றத்…

தேர்தல் – நினைத்தனவும் நிகழ்ந்தனவும் – இலக்குவனார் திருவள்ளுவன்

  அகரமுதல இதழின் சித்திரை 7, 2045 / ஏப்பிரல் 20, 2014 நாளிட்ட இதழுரையில் ‘வாக்கு யாருக்கு?’ என்னும் தலைப்பில்  தமிழ் நேயர்களின் எண்ணங்களை எதிரொலித்திருந்தோம். தேர்தல் முடிவு வந்துவிட்டது. 16ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். நம் எண்ணங்களின் சுருக்கத்தையும் அவை நிறைவேறியுள்ளனவா என்பதையும் பார்ப்போம். 1.) காங்கிரசுக் கட்சி இந்தியா, முழுவதும் விரட்டி யடிக்கப்பட வேண்டும். .. காங்கிரசு அடியோடு தோற்கடிக்கப்படுவது பிறருக்கும் பாடமாக அமையும்.  இந்தியா முழுமையும் காங். பரவலாக மண்ணைக் கவ்வி 44 இடங்களில் மட்டுமே வெற்றி…