பண்ணிசை விழா 2022, வட அமெரிக்காவில் இணைய வழியில்
புரட்டாசி 21, 2053 / 08.10.2022 தலைமையுரை: தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார்
ஊனுருக்கி விளக்கேற்றிய திலீபன்! – தோழர் தியாகு
ஊனுருக்கி விளக்கேற்றிய திலீபன்! தமிழ்நாட்டில் 1980களின் இறுதியிலும், 90களிலும் பிறந்த ஏராளமான குழந்தைகளுக்குத் திலீபன் என்று பெயர் சூட்டப்பட்டது. (1988 பிப்பிரவரி முதல் நாள் பிறந்த என் மகளுக்குத் திலீபா என்று பெயர் சூட்டினேன்.) சொட்டு நீரும் அருந்தாமல் திலீபன் நடத்திய பட்டினி வேள்வியும், அவரது ஈடிணையற்ற உயிர்த் தியாகமும் தமிழ் மக்களின் உள்ளத்தில் ஏற்படுத்திய ஆழமான பெருந்தாக்கத்துக்கு இது ஒரு சான்று. ஆனால் திலீபனின் போராட்டத்த்துக்கும் ஈகத்துக்கும் இதையும் கடந்த ஒரு வரலாற்றுச் சிறப்பு உண்டு என்பதை நாம் போதிய அளவு உணர்ந்து…
திலீபன் சாகவில்லை! – யோ புரட்சி
திலீபன் சாகவில்லை! பசி வந்தால் பற்று பறக்காது பசி வந்தால் பத்தும் பறந்திடுமெனும் பழமொழியை பார்த்தீபன் பொய்யாக்கினான். தேசம் பசித்திருக்கலாகாதென தேகம் பசித்திருந்தான். திருவிழா காணும் நல்லூர் தியாக விழா கண்டதே. ஆலய பூசை மறந்து உறவுகள் அண்ணா உன்முன் திரண்டதே. காந்தி அன்று இருந்திருந்தால் உன் காலடிக்கே வந்திருப்பார். திலீபன் உன் செய்கை கண்டு கிரீடம் தந்திருப்பார். தியாகத்தை பருகியதால்தானா சிறுதுளி நீர் பருகவில்லை. மெழுகாய் உருகியதால்தானா உணவு கேட்டு உருகவில்லை. மரணத்துக்கு போகையில் யாரும் மாலை சூடுவரோ.. இறக்கப் போகுமுன் எனக்குப்…
மணமக்கள் தமிழ்நடைப்பாவை – மார்க்கு இணையர் வாழ்கவே!
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் பேத்தி தொல்தமிழ் எழுத்துருக்கள், சேது பிழை திருத்தர், பேராசிரியர் இலக்கணப் பேராசான், கலைஞர் அகரமுதலி எனப் பல முன்னோடி தமிழ்க் கணினிச் செயலிகளை உருவாக்கிய கணிஞர் வா.மு.சே. கவிஅரசன் – முத்துமாரி இணையர் திருமகள் தமிழ்நடைப்பாவைக்கும் திருநிறை செல்வன் மார்க்கு என்பாருக்கும் வரும் ஆவணி 24இல் (9-9-2022) நடைபெறும் திருமண நிகழ்விற்குப் பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் – பேரா.சுபத்திரா ஆகியோரின் வாழ்த்து திருமணம், முன்னதான வரவேற்பு ஆகியவற்றை இணைய வழியில்காண: சேது காணொலி இணையக் காட்சி : SethuWebTV- YouTube-Live https://www.youtube.com/channel/UCPFM6TRrAeu8GOFik0jY8Ewநேரலை நேரம் : திருமணம் :…
தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ? – கவிவாணர் ஐ.உலகநாதன்
தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ? வஞ்ச மனத்துடன் வந்து புகுந்தவர் வாலை யறுத்திட வாராயோ-வரும் வெஞ்ச மருக்கிது வேளை பொருட்குவை மேலும் குவித்துடன் தாராயோ சேரு மலேசிய சீர்மிகு நாட்டினை சேரு மிடைப்பகை தீராயோ-உனை வாரியணைத்தவள் வாழ்வு சிறந்திட வாரி நிதிக் குவை தாராயோ ஆறு மலைத்தொடர் அன்பு மனத்தொடர் ஆர்ந்த கலைத்தொடர் தாய்நிலமே-உனை வேறு நிலத்தவர் வெல்ல முனைந்திடின் வேட்டி லவர்தலை போய்விழுமே! வீடு விளங்கிட பெற்ற குழந்தையை நாடு விளங்கிடத் தாராயோ-அவர் பீடு விளங்கிடக் கேடு களாந்திடப் பிள்ளையைப் பெற்றவர் வாரீரோ! தங்க…
தமிழ்க் கவிதை – கவிஞர் க.பெருமாள்
தமிழ்க் கவிதை எதுகையென்ன? மோனையென்ன? கவிதை என்றால்எழுத்தசையும் சீர்த்தளையும் தேடி சோர்ந்தபதுங்குவதா? பிதுங்குவதா விழிகள்? இல்லை!பாவேந்தர் பேரனென்ற ஊக்கத் தோடமெது மெதுவாய்ப் பயின்றேன்காண் கவிதைப் பாடமமெய்மறந்தேன் அதன் சுவையில் ஒன்றிப் போனேன்!இதுவரையில் இலக்கியத்தின் சுவையை நாடயான்பெற்ற இன்பங்கள் கோடி கோடி! வாழ்வுமெங்கள் வளமுஉயர் தமிழே என்றவழங்காத வாயுண்டோ தமிழர் தம்மில்!ஆழ்கடலில் முத்தெடுத்த களிப்புப் பொங்கஅருந்தமிழர் நாமணக்கும் அமுதப் பாட்டாயசூழ்புரியும் பாவேந்தர் வரிகள் என்றும்சுடர்ந்திருக்கும் உண்மையதை மறுப்பாருண்டோ!யாழ்குழலின் இசையெல்லாம் இணைத்து வார்க்கும்இன்சுவையின் எல்லைவரை கவிதை செல்லும்! துறைதோறும் கவிதைகளே இன்பம் சேர்க்குமதொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும்நிறைவான…
இலக்கியத்தில் நகைச்சுவையும் பழிப்புரையும் – தேமொழி
இலக்கியத்தில் நகைச்சுவையும் பழிப்புரையும் வெளிப்படையாகவோ குறிப்பாகவோ, தனிமனிதர் ஒருவர் அல்லது சமூகத்தின் குறையை, அவர்கள் உணருமாறு அவர்களுக்கு உறுத்தவேண்டும் என்று வசையாகவும், அதே நேரம் நயத்துடனும் நகைச்சுவையுடனும் சொல்வது அங்கதம் எனப்படும். அதாவது, ஒருவரது கீழ்மை குணத்தை நகைச்சுவை தோன்ற நயமாகப் பழித்துரைப்பதுதான் அங்கதம். இந்த இலக்கிய முறையை ஆங்கிலத்தில் ‘சட்டயர்’ (Satire) என்பர். நடுவுநிலைமை, நகைச்சுவை உணர்வு, சமுதாய அக்கறை என்பனவற்றை நோக்கமாகக் கொண்டு நகைப்பு, இகழ்ச்சி, நன்னோக்கம் ஆகிய மூன்றும் இயைந்து வரும் சிறப்பு கொண்டது அங்கதம். தாக்குதலும் நகையும் இணைந்தே…
இணையத்தில் ஏமாந்துவிடாதீர்கள் உறவுகளே! – யாழ்ப்பாவாணன்
இணையத்தில் ஏமாந்துவிடாதீர்கள் உறவுகளே! இணைய வழித் தொடர்புகள் அடிக்கடி வந்து சேரும் அதில் வந்துள்ள மடல்களில் தன்னைக் கட்டு, தன் பிள்ளையைக் கட்டு, அழகான அக்காவைக் கட்டு, தங்கச்சியைக் கட்டு என்றவாறு விண்ணப்பங்கள் பல… ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று எனக்கும் மனைவி இருக்கென்றேன்! மனைவிக்கும் இவற்றைக் காட்டி கதைத்துச் சிரித்து மகிழ்வேன்… இணையத்தில் இப்படிப் பல உங்களுக்கும் வந்து சேரும் ஒருபோதும் நம்பிவிடாதீர்கள்… அப்பிள் திறன்பேசி, அப்பிள் மடிக்கணினி அனுப்புவதாக ஒருத்தி கனடா விமான ஓட்டியாம் மனைவியும் உடன்பட்டாள் நானும் அனுப்பு…
பதினோராம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர், மே 2023
பதினோராம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர், மே 2023 பத்தாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படைத்த ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய முதல் தொகுப்பு சூலை 26, 2022 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. எளிமையாகவும் சீரிய முறையிலும் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் முனைவர் பொன்னவைக்கோ தலைமையில், மன்றத்தின் துணைத்தலைவர் திரு. முனைவர். சுந்தரமூர்த்தி, செயற்குழு அலுவலர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்கள் திரு.கோ.விசுவநாதன் (வேந்தர், வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்) ,தொழிலதிபர் திரு. வி.சி. சந்தோசம் ஆகியோர் வெளியிடச்…
‘வஃகியாய் வந்த வசந்தம்’ நூல் வெளியீட்டுக் காணொளி
வஃகியாய் வந்த வசந்தம்’ நூல் வெளியீட்டுக் காணொளி வஃகியாய் வந்த வசந்தம் – பொற்கிழிக் கவிஞர் இளையான்குடி மு. இதாயத்துல்லா அவர்களின் நான்காவது நூலாகும். நற்குணத் தாயகமாம் நபிகள் நாயகம் அவர்களுடைய வாழ்வும் வாக்கும் அவரது நாடி நரம்புகளிலெல்லாம், உணர்வுகளிலெல்லாம் இரண்டறக் கலந்து ஆளுமை செய்கிறதென்றே கூறலாம்.அதன் அடிப்படையில் உருவானதே இந்த நூல் ஆகும்.. இந்நூலின் வெளியீட்டு நிகழ்ச்சியின் காணொளி : https://www.youtube.com/watch?v=fsZGz0MXF0I நூலுக்கான இந்திய இணைப்பு : https://www.amazon.in/dp/B0B5GZPBKB நூலுக்கான பன்னாட்டு இணைப்பு : https://www.amazon.com/dp/B0B5GZPBKB முதுவை இதாயத்து துபாய் 00971 50…
நீ உயர - கவிஞர் சீனி நைனா முகமது
நீ உயர உயரத் துடிக்கிறாய் உரிய வழியெது உனக்குத் தெரியுமா தம்பி – கொஞ்சம் உட்கார்ந்து முதலில் சிந்தி உயர்வுத் தாழ்வுக்கோர் உண்மைக் காரணம் உள்ளத்தில் இருக்குது தம்பி – அதை ஒழுங்கு படுத்துநீ முந்தி வெள்ளத்தின் அளவே தாமரை மலருமே வெருங்குளமானால் அழியும் – புது வெள்ளத்தில் மீண்டும் தழையும் உள்ளத்தில் உயர்ந்தால் உயர்ந்திடும் வாழ்க்கை உன்வச மாகிடும் உலகம் – இதை உணரத் திருக்குறள் உதவும் நல்லதை நினைத்து நல்லதை உரைத்தால் நல்லவை வந்துனை சேரும் – நீ நடந்தால் வாழ்த்துகள்…
தமிழன்னைக்குப் பெருமை சேர்க்க வருகிறாள் தமிழணங்கு
உலகத் தமிழர்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்தும் முயற்சி நடைபெறுவதால் ‘தமிழராய் இணைவோம்‘ என்ற இலக்குடன் தமிழணங்கு மாத இதழ் தொடங்கப்பட்டுள்ளது. இணையத்திலும் அச்சிலும் வெளிவருகிறது. தமிழ் மரபு, பண்பாடு, சமயம், வரலாறு, மொழி இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. rajetamiljuly1@gmail.com க்கு கட்டுரைகளை அனுப்புங்கள். முதல் இதழ் 134 பக்கங்களுடன் வெளிவந்துள்ளது. விலை உரூ120/- ஆசிரியர்: முனைவர் செ. இராசேசுவரி amazon.in amazon.com தளங்களில் வாங்கலாம்.
