புலர்வு

மாசி 30, 2046 – ஃசுகார்பரோ வணக்கம்.   அறிவகம் – கனடாத் தமிழ்க் கல்லூரி இணைந்து நடத்தும் புலர்வு நிகழ்வை ஊடகத்தினூடாக மக்களுக்கு அறியத்தந்து நிகழ்ச்சி வெற்றியடைய ஒத்துழைக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.   கனடா மண்ணில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பிக்க கடந்த பல ஆண்டுகளாக தம்மை ஒப்படைத்து அறிவகம், கனடாத் தமிழ் கல்லூரியில் பணியாற்றும் 200 இற்கு மேற்பட்ட தமிழாசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வாக இந்த விழா மிகப்பெரிய அளவில் நடைபெறவுள்ளது. இரவு விருந்துடன் இந்த நிகழ்வு நடைபெறும்.   நன்றி. உருக்சன்…

தமிழிசைப் பேரரங்க விழா, மலேசியா

தமிழிசையை மீட்க மலேசியாவில் ஓர் அரிய வரலாற்று நிகழ்வு ….தமிழிசைப் பேரரங்கம் …..தமிழியல் பாடகர் இரகுராமன் அவர்கள் முதன்முறையாகத் தமிழ் கீர்த்தனைப் பாடல்களைத் தமிழிசை முறைப்படி பாடவுள்ளார் ….தமிழ் நெறி ஞாயிறு பாவலர் அ.பு .திருமாலனார் அவர்களின் திருப்பாவிசை எனும் வண்ணப் பாடல்களையும் அவர்தம் மாணவர்களான திருமாவளவன் திருச்செல்வம் ஆகியோர் இயற்றிய தமிழியல் பாடல்களையும் தமிழ் மரபு வழுவாது இரகுராமன் அவர்கள் பாடவுள்ளார் . தலை நகர் சோமா அரங்கத்தில் மாசி 24, 2046 / மார்ச்சு 08, 2015 பிற்பகல் 2 மணிக்கு…

‘தமிழம் பண்பலை’ : பொள்ளாச்சி நசன் வேண்டுகோள்

‘தமிழம் பண்பலை’ தொடங்கும் பொள்ளாச்சி நசன் வேண்டுகோள் அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்   கடந்த 10 நாள்களாகத் தமிழம்.பண்பலையை வடிவமைப்பதிலேயே, என் முழு நேரமும் கழிந்தது. நேற்றுதான் அதற்கான இறுதிவடிவம் கொடுத்து முழுமைப்படுத்தி இணைத்து உள்ளேன். சிறு சிறு பிழைகள் இருக்கலாம், அவை வரும்காலத்தில் சரி செய்யப்படும்.   தமிழ் உணர்வுள்ள பாடல்களை வெளியிட்டு இருப்பவர்கள் அருள்கூர்ந்து அந்த இறுவட்டுகளை அனுப்பி வைக்கவும். தமிழம் வலையை தமிழம்.நெட் இணையதளத்திலும் கேட்கலாம். ஆன்டிராய்டு தொலைபேசி வைத்திருப்பவர்கள் அதற்கான மென்பொருளை இறக்கி நிறுவிக் கொண்டு தொடர்ந்து கேட்கலாம்….

மார்ச்சு மாத இற்றைத் திங்கள் நிகழ்வு, அகநாழிகை

வணக்கம் நண்பர்களே,  புது தில்லியி்ல் ஆம் ஆத்மியும் திருவரங்கத்தில் அஇஅதிமுகவும் பெற்ற வெற்றிகள் இரு வேறு பட்டறிவுகளையும் படிப்பினைகளையும் நமக்குத் தந்திருக்கின்றன.  போராட்ட அரசியல் செயல்பாட்டாளர்களில் பலர் அடுத்த கட்டமாகத் தேர்தலில் நின்று மக்கள் பகைவர்களைத் தோற்கடிப்பது குறித்தும், தேர்தல் முறையைத் தமது இறுதி இலக்குக்காகப் பயன்படுத்துவது குறித்தும் முன்பு எப்போதையும்விட அதிகமாக சிந்திக்கும் காலம் இது. அதே சமயம் இந்த தேர்தல் முறையில் அணுவளவேனும் நாம் சாதித்துவிடமுடியாது, எனவே இது போராட்ட அரசியலைப் பலவீனப்படுத்தும் என்று மாற்றுக் கருத்துகள் நிலவும் காலமும்கூட. பெருவாரியான…

வாய்க்கால் கரையோரம் – புதின வெளியீடு

மாசி 24, 2046 / மார்ச்சு 8, 2015 கிருட்டிணன்கோயில் அருகில் மதுரை இராசபாளையம் சாலை    ஈழ ஆசிரியர் மு.வே.யோகேசுவரன் அவர்கள் முகநூலில் எழுதிய “வாய்க்கால் கரையோரம்” புத்தக வடிவில் வெளியிடப்பட இருக்கின்றது… சிங்களவனின் இன வெறியினால் தமிழினம் அடைந்த பாதிப்புகளையும், எதிர்த்துப் போராட வேண்டிய  தேவையையும் உணர்த்திடும் புதினம் இது.

இலக்கிய வீதியின் “மறுவாசிப்பில் ஆர்.வி.”

அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இந்த மாதம் இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் , மாசி 15, 2046 / 27.02.2015  மாலை 06.30 மணிக்கு, “மறு வாசிப்பில் ஆர்.வி.” உறவும் , நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்..   என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்