குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 3.பெரியாரின் தமிழ்ப்பற்றும் தமிழ்ப்பழிப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 2. இந்து மதத்தை மட்டும்தான் பெரியார் எதிர்த்தாரா? – தொடர்ச்சி) குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 3.பெரியாரின் தமிழ்ப்பற்றும் தமிழ்ப்பழிப்பும் பெற்றோர் தம் குழந்தையிடம் “வெளியே போனால் காலை உடைத்து விடுவேன்” என்று சொன்னால் வெறுப்பில் சொல்லும் சொற்களா இவை. அவர்கள் தம் பிள்ளையிடம் முட்டாளே என்று சொன்னால் உண்மையிலேயே அவ்வாறு கருதுகிறீர்கள் என்ற பொருளா? உண்மையிலேயே முட்டாளாக இருந்தாலும் அறிவாளியாக எண்ணுவதுதானே பெற்றோர் இயல்பு. அதுபோல்தான் சில நேரங்களில் பெரியார் தமிழைப்பற்றியும் தமிழர்களைப்பற்றியும் சொன்னவையும். எனினும் சில…
வெருளி நோய்கள் 851-855: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 846-850: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 851-855 காழநீர்(காப்பி) முதலான குடிவகைகளுக்குப் பயன்படுத்தப்படும் நெகிழிக் குவளைகள் பற்றிய அளவுகடந்த பேரச்சம் நெகிழிக்குவளை வெருளி. சுருக்கமாகக் குவளை வெருளி எனலாம்.சூடான பானங்கள் நெகிழிக் குவளைகளில் ஊற்றப்படுவது உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும். என்றாலும் இது குறித்து மிகையான பேரச்சம் கொள்ளாமல் தவிர்க்க வேண்டும். இப்பொழுது அரசே நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளதால் இத்தகைய வெருளி குறையும், மறையும். (பேரச்சம் காழநீர் மீது என்றால் காழநீர் வெருளி என்றே சொல்லலாம்.)இப்பொழுது நெகிழி பயன்பாட்டிற்கே தடை…
வெருளி நோய்கள் 846-850: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 841-845: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 846-850 குருதி ஊசி காயம் தொடர்பான மிகையான பேரச்சம் குருதி ஊசி காய வெருளி.குருதியைக் கண்டும் ஊசி போடுவதாலும் ஊசி போடப்படுவதைப் பார்த்தாலும் காயம் வந்தாலும் பிறர் காயங்களைப் பார்த்தாலும் ஏற்படக்கூடிய அளவுகடந்த பேரச்சங்களை இது குறிக்கிறது.இதனைத் தனி ஒரு வெருளியாகக் குறிப்பிடாமல் குருதி வெருளி, ஊசி வெருளி(நுதி வெருளி/மருந்தூசி வெருளி), உடற்காய வெருளிவகைகளைக் குறிப்பிடும் பொதுச்சொல்லாகத்தான் கையாளுகின்றனர்.00 குருதியைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் குருதி வெருளிகுருதி என்பது தமிழ்ச்சொல்லல்ல என எண்ணிக்…
மொழிப்போர் வரலாறு அறிவோம்!-11 : மொழிப்போரில் மகளிர் பங்களிப்பு – 2 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-10 : மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 1: தொடர்ச்சி) மொழிப்போர் வரலாறு அறிவோம்!-11 மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 2 மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்களின் அளப்பரிய பங்கில் ஒரு பகுதிதான் பதிவுகளில் உள்ளன. அவற்றில் நாமறிந்த ஒரு பகுதியைத்தான் ‘பெண்களின் முதன்மைப் பங்கு’ என்னும் தலைப்பில் முன் கட்டுரையில் பார்த்தோம். எனவே, இன்னும் சொல்வதற்கு மிகுதியாக உள்ளன. எனினும் மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள் பெயர்களைப் பார்ப்போம். மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள்…
தொல்காப்பியமும் பாணினியமும் – 14 : இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள்-இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 13 : இடைச்செருகல்கள் – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 14 இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள் தொல்காப்பிய இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள் குறித்துப் பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் பின்வருமாறு தெரிவிக்கிறார்:- ”தொல்காப்பியர் இலக்கண முறைமைகளைத் தொடுத்துக் கூறும் அல்லது அடுக்கி வைக்கும் பாங்கு தொன்மைமிக்க தமிழின் இலக்கணச் சீர்மையை மட்டுமின்றி, நம் முன்னோரின் சிந்தனைப்போக்கின் முதிர்ச்சியையும் ஏரணவியலின் தொன்மையையும், அறிவியல் முறைமைப்படத் தரவுகளைத் தொகுத்து வழங்கும் ஆய்வுநெறிமுறைப் பயிற்சியையும் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது. தமிழைக் கணிணிமொழி என்று பெருமிதத்துடன் கொண்டாடிக் கொள்ளத் தூண்டுவது எழுத்துப்…
வெருளி நோய்கள் 841-845: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 836-840: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 841-845 குமுகாயச்சடங்குகள், நிகழ்வுகள், போக்குகள் தொடர்பிலான அளவுகடந்த பேரச்சம் குமுகாய வெருளி.ஒன்றுகூடல் நிகழ்வுகள், விருந்துக் கூட்டங்கள்,ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நண்பர்கள் உறவினர்களுடான சுற்றுலாக்கள் என எந்தப் பொது நிகழ்வாயினும் காரணமற்ற பேரச்சம் கொள்வர்.00 காரணமின்றிக் கூடும் கும்பல் பற்றிய அளவுகடந்த பேரச்சம் கும்பல் வெருளி.கூட்ட வெருளியைப் போன்றதுதான் இதுவும். ஆனால், அதனைவிட இதில் பேரச்சம் மிகுதி. கும்பல் கலவரத்தில் ஈடுபடலாம், கொலை, கொள்ளைகளில் ஈடுபடலாம் எனப் பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். demo என்னும் கிரேக்கச்…
விருதுகளுக்குத் தகுதியான இல.அம்பலவாணனின் புதினம்!
நூல் அறிமுகம்: ஆசைக்கோர் அளவில்லை! இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி என்பர். அவ்வகையில் குமுகாயத்தைப் படம் பிடித்துக் காட்டுவனவாகக் கதை இலக்கியங்கள் உள்ளன. அந்த வகையில் குமுக அவலங்களை நமக்குக் கண்முன் நிறுத்துபவராக எழுத்தாளர் முனைவர் இல.அம்பலவாணன் திகழ்கிறார். அவரது ஐந்தாவது புதினம் ‘ஆசைக்கோர் அளவில்லை’ என்பது. ஆசிரியர் அறிமுகம் புதின ஆசிரியரை அறிமுகப்படுத்துவதற்குக் காவியா சண்முகசுந்தரம் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ள பின்வரும் பகுதி சரியாக இருக்கும்: “அம்பலவாணன் நல்ல கதைசொல்லி. இயல்பாக – இனிதாக – இசைவாய்க் கதை சொல்பவர். பெயர்தல், பொட்டுவைத்த பொழுதில், தூய்மை,…
வெருளி நோய்கள் 831-835: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 826-830) வெருளி நோய்கள் 831-835 குப்பைத் தொட்டி(dumpster) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குப்பைத் தொட்டி வெருளி.குப்பைத்தொட்டியில் உள்ள குப்பை, கூளம், செத்தை, அழுகல் பொருள், கழிவு போன்றவற்றால் எற்படும் தீ நாற்றம் குறித்து அ்ருவருப்பு அடைந்து வெருளிக்கு ஆளாகின்றனர். குப்பைத் தொட்டி காலியாக இருந்தாலும் இவை குறித்த எண்ணத்தால் வெருளி கொள்வர்.காண்க: குப்பை வெருளி-Purgamentophobia00 குப்பை வாளி(trash can) குறித்த வரம்பற்ற பேரச்சம் குப்பை வாளி வெருளி.குப்பைத் தொட்டி வெருளி போன்றதுதான் குப்பை வாளி வெருளி. குப்பை வாளியில் உள்ள குப்பை,…
வெருளி நோய்கள் 826-830: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 821-825: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 826-830 பூச்சிகளின் கொடுக்கு அல்லது தாவரங்களின் முள்ளிழை முதலான குத்துமுனைகள் குறித்த அளவு கடந்த பேரச்சம் குத்துமுனை வெருளி.வெருளிக்குக் காரணமான ஒரு பகுதியைக மட்டும் கருத்தில் கொண்டு நேர் பொருளாகக் கொடுக்கு வெருளி(Cnidophobia) எனக் குறித்திருந்தேன். ஆனால் பூனைக்காஞ்சொறிச் செடி வகை செடி கொடிகளின் குத்தும் முள்ளிழைக்கும் நச்சுப் பூச்சிகளின் கொட்டுமுனைகளுக்கும் பொதுவான குத்து முனை என்பதை இப்பொழுது பயன்படுத்தி உள்ளேன்.00 குத்தப்படுவோம் எனப் பேரச்சம் கொள்வது குத்து வெருளி.grothia, gronthokopo, ஆகிய கிரேக்கச் சொற்களின்…
வெருளி நோய்கள் 821-825: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 816-820: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 821-825 குட்டையர் பற்றிய காரணமற்ற பேரச்சம் குட்டையர் வெருளி.“கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே” என்பது பழமொழி. குள்ள உருவத்தில் வாமனனாகத் தோற்றம் எடுத்து சேர மன்னனையே(மகாபலி) ஏமாற்றியவன் திருமால். எனவேதான் கள்ளத்தனம் செய்வோரை நம்பினாலும் குள்ளனை நம்பாதே எனப் பழமொழி வந்தது. ஆனால் இக்கதையைப் புரிந்து கொள்ளாமல் குட்டையாக இருப்பவர்கள்பற்றி அஞ்சுவோர் உள்ளனர்.00 தங்களைக் கவர்ச்சியாளர்களாக எண்ணிக்கொண்டுள்ள உண்மையில் பருத்த தோற்றம் உடைய அழகற்ற பெண்களைக் கண்டால் வரும் தேவையற்ற பேரச்சம் குண்டுப்பெண் வெருளி.குண்டுப் பெண்களில்…
சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 8: இலக்குவனார் திருவள்ளுவன்
(சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 7: தொடர்ச்சி) சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 8 திட்டத்தை மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு செய்யக்கூடியது ஒன்றிய அரசுடன் இணைந்து செய்யக்கூடியது ஒன்றிய அரசு செய்யக்கூடியது போன்ற மூவகை திட்டங்கள் போட்டுச் செய்ய வேண்டும். தன்னார்வலர்கள் முன் வந்து செய்யக்கூடியதும் வர வேண்டும். அது மட்டுமல்ல இங்கே சமற்கிருத கல்விக்கூடங்கள் எல்லாவற்றையும் கருதுநிலை பல்கலைக்கழகங்களாக அஃதாவது டீம்டு யுனிவர்சிட்டி (Deemed University) என்று ஆக்கினார்களோ, அதே போன்று உலகின் பல நாடுகளில் ,பல…
வெருளி நோய்கள் 816-820: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 811-815: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 816-820 குடும்ப மர வலைத்தளங்கள் குறித்தும் உருவாக்கநர் குறித்தும் அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் கொள்வது குடும்ப மர வெருளி.தடத்தள வெருளி(Oikoechophobia) என்பது குடும்பர மர உருவாக்கல் தொடர்பான குறிப்பிட்ட -குடும்பத்தடம் – வலைத்தளம் பற்றியது. இது பொதுவாகக் குடும்ப மரம்(Family Tree) குறித்த எல்லா வலைத்தளங்கள் பற்றியது.00 கண்ணாடிக் கொள்கலனில் வளர்க்கப்படும் பயிர்கள் குறித்த தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் குடுவைப்பயிர் வெருளி.கண்ணாடிக் குடுவைப் பயிர் என்னும் பொருள் கொண்ட terrarium என்ற சொல்லில் இருந்து Terraro…
