கலித்தொகையின் கவின்மிகு சிந்தனை – இ. சூசை

  இளங்காலைப் பொழுதில் சுறுசுறுப்புடன் இயங்கும் வானொலி நேயர்களே! வணக்கம். நம் முன்னோர்கள் காதல் இலக்கியங்களில் கூட அறம் உணர்த்திய ஆன்றோர்கள் ஆவர். கலித்தொகை என்ற கவின்மிகு இலக்கியத்தில் இதனை நுகர முடிகிறது. தலைவன் பொருளுக்காகப் பிரிந்து செல்கிறான். தலைவி வாடுகிறாள். அப்போது தோழி சொல்கிறாள். “இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இளிவு” ஒரு ஆண்மகனிடம், “இல்லை! ஈகை செய்யுங்கள்” எனக் கேட்கும்போது அவன் “இல்லை” என வறுமையில் வாடுவது அவனுக்கு இழிவு. உன் தலைவன் உழைத்துப் பொருள் ஈட்டட்டும் என்கிறாள். “இடன்…

கல்லாடம் கூறும் வாழ்வியல் நெறி – இ. சூசை

புலர்காலைப் பொழுதில் சிராப்பள்ளி வானொலியின் செவிநுகர் கனிகளைக் கேட்டுப் புத்தறிவு பெறும் நேயர்களே! வணக்கம். பதினோராம் நூற்றாண்டில் தமிழில் தோன்றிய ஒப்பற்ற அகநூல் கல்லாடம் சிவபெருமானின் பெருமைகளை, பாண்டிய மன்னனின் சிறப்புகளை இடைஇடையே நுட்பமாகச் செரித்துக் கூறும் இலக்கியம். வருணணை, உவமை, உருவகங்களில் வாழ்வியல் மெய்ம்மைகளைக் கல்லாடம் கூறுகிறது. ‘கல்லாடம் கற்றவரோடு சொல்லாடல் கொள்ளாதே! எனக் கற்றவரையே எச்சரிக்க வேண்டிய கருத்து வளம், உடையது கல்லாடம். கல்லாடம் என்பது ஊர்ப்பெயர், கல்லாடர் ஆசிரியர் பெயர் கல்லாடம் நூலுக்கு ஆகுபெயராக ஆயிற்று. நேயர்களே! நமக்கு உதவி…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 5: இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 106   கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி) 05   இந்நூற்பா மட்டுமல்ல, மற்றொரு நூற்பா மூலம் தமிழர் உலகிலேயே முதன்முறையாகத்திருமணப் பதிவு முறையைப்பின்பற்றி உள்ளனர் என்பதையும் நாம் அறியலாம். இதனைப் பேராசிரியர் சி.இலக்குவனார் நன்கு விளக்கியுள்ளார்.   திருமணப் பதிவை இங்கிலாந்து அரசாங்கம் 1653இல் அறிமுகப்படுத்தியது. பிரான்சு நாட்டில் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக 1791இலும்   உருசியப் புரட்சியினால் உருசியாவில் 1917இலும் திருமணப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு காலங்களில் திருமணப் பதிவைக் கட்டாயமாக்கினாலும் பல…

திருக்குறள் குமரேச வெண்பாவின் அறக்கதைகள் – இ. சூசை

திருக்குறள் குமரேச வெண்பாவின் அறக்கதைகள்     இளங்காலைப் பொழுதில் புதுப்பொலிவோடு செயல்களைத் தொடங்கும் வானொலி நேயர்களே! வணக்கம்.   இன்றைக்குச் சற்றேக் குறைய நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தலை சிறந்த தமிழ் இலக்கிய ஆய்வாளர் செகவீரபாண்டியனார். கவிராசப் பண்டிதர் என்று உலகம் அவரை அழைத்தது. தூத்துக்குடியில் 1920-களில் தொடங்கி  வாழ்ந்தவர். அன்றைய ஆங்கில அரசு அவரின் நூல்களைப் பாடநூலாகக் கல்வி நிறுவனங்களில் வைத்தது. அன்றைய தமிழ் கூறும் உலகில் அவர் புகழோடு இருந்தார். கம்பஇராமாயணத்தை ஆராய்ந்து, கம்பன் கலைநிலை என்று பல…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 4: இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 105  ஐப்பசி 29, 2046 / நவ. 15, 2015 தொடர்ச்சி)   04 “பணமி ருந்தார் என்ப தற்காய்ப் பணிந்தி டாத மேன்மையும் பயமுறுத்தல் என்ப தற்கே பயந்திடாத பான்மையும் குணமி ருந்தார் யாவ ரேனும் போற்று கின்ற கொள்கையும் குற்ற முள்ளோர் யாரென் றாலும் இடித்துக் கூறும் தீரமும் இனமி ருந்தார் ஏழை யென்று கைவி டாத ஏற்றமும் இழிகு லத்தார் என்று சொல்லி இகழ்த்தி டாமல் எவரையும் மணமி குந்தே இனிமை மண்டும் தமிழ்மொ ழியால் ஓதிநீ மாநி…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 3: இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015 தொடர்ச்சி) 03   “தமிழின் பழைய மரபுகள் அழிந்து, தமிழ் அழிந்து போகாமல் காக்கவே தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும்.” என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். ஆனால், இன்றைக்கு நாம் தமிழ் மரபுகளை அழித்துக் கொண்டு அழிவுப் பாதையில் விரைந்து கொண்டிருக்கிறோம்.   “தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று இருந்தது. அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம். தொல்காப்பியத்தால் மொழி நிலை – இலக்கியநிலை மட்டுமன்று; அக்கால மக்கள் நிலையும் அறியலாகும். . ….

‘தந்தையுமான தாய் நூல்’ ஆய்வுரை -வா.மு.சே.திருவள்ளுவர்

கவிஞர் நிலவு முத்துக்கிருட்டிணன் அவர்களின் தந்தையுமான தாய் நூல் ஆய்வுரை   சென்னையில் சித்திரை 19, 2046 / 2-5-2015 அன்று கவிஞர் நிலவு முத்துக்கிருட்டிணன் அவர்களின் ‘தந்தையுமான தாய்’ நூல் வெளீயீட்டு விழாவில்    தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளூவர் ஆற்றிய      நூல் ஆய்வுரை: நிலவு முத்துகிருட்டிணன் என் உள்ளம் கவர்ந்த நண்பர். உள்ளதை உணர்வதை கள்ளமில்லாமல் கூறும் நெஞ்சர். தம் குழந்தைப் பருவம் முதல் இன்றுவரை பகுத்தறிவு போற்றும் பாவலர். சமுகம் சுற்றத்தார் நண்பர் குடும்பம் என அனைத்து நிலைகளிலும் செயலாற்றும்…

கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கத்தில் வினைதீர்த்தான் தலைமையுரை

கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கத்தில் வினைதீர்த்தான் தலைமையுரை  கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு “வங்கத்தின் கங்கை” இலக்கிய கூட்டம் நடத்தப்படுகிறது. கடந்த ஐப்பசி 19, 2046 / 01.11.2015 ஆம் நாள் கூட்டத்திற்குத் தலைமைதாங்கும் வாய்ப்பு சங்கத்தின் 75 ஆண்டு வரலாற்றில் முதல் பெண் செயலர் திருமிகு சித்ரா இராமகிருட்டிணன், துணைத்தலைவர் திரு நக்கீரர் அன்பால் சொ.வினைதீர்த்தானுக்கு அமைந்தது.   அவர் தம்முடைய உரையில் “தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டு” அங்கு வந்திருந்த சுவைஞர்கள், பங்காளர்களை வரவேற்றார்; இளம் மாணவர்களுக்குப் பாரதியார்…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 2: இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 103  ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02 “மண்ட லத்தே இணையி லாத              வாழ்வு கண்ட தமிழகம்        மகிமை கெட்டே அடிமைப் பட்டு              மதிம யங்கி நிற்பதேன்?’’ என்று நாமக்கல்லாரே வினவுகின்றார். அப்படியானால், நாம் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்பவருக்கு அவரே,   தமிழ னென்ற பெருமை யோடு              தலைநி மிர்ந்து நில்லடா!        தரணி யெங்கும் இணையி லாஉன்              சரிதை கொண்டு…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 1: இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 01    இக்காலத்தில் இலக்கிய விழா நடத்துவது – அதையும் இலக்கண விழாவாகவும் நடத்துவது – அதையும் தொடர் கருத்தரங்கமாக நடத்துவது என்பது அரிதினும் அரிதான செயல். இதுவரை 50 கருத்தரங்கம் நடத்திப் பொன்விழா கண்டுள்ள திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம் தன் 51 ஆம் கருத்தரங்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பை எனக்கு அளித்து மகிழ்ச்சி தந்துள்ளமைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.   இத்தகைய சிறப்பான தமிழ்ப்பணி ஆற்றிவரும் நல்லாசிரியர் புலவர் எண்கண் சா.மணி அவர்களே! பிற பொறுப்பாளர்களே!…

தமிழ்வழிக்கல்வி குறித்து செய்திகள் 7 தொ.கா.வில் நான். . . .

  புரட்டாசி 11, 2046 / செப்.28, 2015 செய்தி 7 தமிழ்த் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு : இரவு 9.00 – 10.00 மணி கேள்விநேரம் நிகழ்ச்சியில் தமிழ்வழிக்கல்வி  குறித்து உரையாடுகிறேன். உடன் தோழர் தியாகுவும் உரையாடுகிறார். மறு ஒளிபரப்பு 12.01 இணையத்தில் காண : http://ns7.tv/ta நிகழ்ச்சியாளர் : செந்தில்;  ஒருங்கிணைப்பாளர் : அமீது அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி – இலக்குவனார் திருவள்ளுவன்

[நட்பு – பதிவு செய்த நாள் : 31/08/2012]                                                     குமரித்தமிழ் வானம் தமிழ்ப்பேரறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவுச் சொற்பொழிவு நாள்:  ஆவணி 6, 2043   * ஆக 22, 2012 * புதன் கிழமை மாலை 6.30 மணி இடம்:  தமிழ்வானம் அரங்கம்,  50/22,கணபதிநகர்,செட்டிக்குளம் சந்திப்பு, நாகர்கோயில் 629 002 வாழ்த்துரை –       இலக்குவனார் திருவள்ளுவன் பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி   குமரித் தமிழ் வானம் திங்கள் தோறும் அறிஞர்கள் நினைவாகத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தி வருவது பாராட்டிற்குரியது. இவ்வமைப்பின் இயக்குநர்…