குறள் மாநாடு நிறைவு நிகழ்ச்சி ஒளிப்படங்கள்
குறள் மாநாடு இரண்டாம் நாள் அரங்கம் 2இலான அமர்வு ஒளிப்படங்கள்
குறள் மாநாடு – வடபுல நாட்டிய நிகழ்ச்சி
புது தில்லியில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 ஆகிய நாள் நடைபெற்றன. முதல் நாள் நிறைவாகப் புது தில்லியில் உள்ள நாட்டியக் குழு ஒன்றின் நாட்டிய நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. படங்களைப் பெரிதாகக் காண அழுத்திப் பார்க்கவும்.
குறள் மாநாடு – திருக்குறள் நாட்டிய நிகழ்ச்சி ஒளிப்படங்கள்
மூன்றாவது திருக்குறள் மாநாடு – முதல் நாள் அமர்வுகள்
புது தில்லியில் புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 நாள்களில் நடைபெற்ற மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாட்டின் முதல்நாள் அமர்வு – ஒளிப்படங்கள் படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.
மூன்றாவது திருக்குறள் மாநாட்டின் தொடக்க விழா ஒளிப்படங்கள்
புது தில்லியில் புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 ஆகிய நாள்களில் மூன்றாவது உலகத்திருக்குறள் மாநாடு நடைபெற்றது. முதல்நாள் காலையில் சிறுமியரின் திருக்குறள் இசை நிகழ்ச்சிக்கும் மங்கல இசைக்கும் பின்னர் விழா தொடங்கியது. படங்களைப் பெரிதாகக் காண அழுத்திப் பார்க்கவும்.
தில்லியில் தமிழகச் சிறுமியர் குரலில் குறள்
புது தில்லியில் புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 ஆகிய நாள்களில் மூன்றாவது உலகத்திருக்குறள் மாநாடு நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியாகத் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் திருக்குறள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திரு சங்கரராமன் சேலம், கிருட்டிணகிரி, தருமபுரி முதலான வெவ்வேறு மாவட்டச் சிறுமியர் முப்பத்தறுவருக்குப் பயிற்சி அளித்து அழைத்து வந்திருந்தார். ஓரிடத்தில் பயிற்சி பெற்றாலே ஒன்றுபோல் பாடுவது அரிதான ஒன்றாகும். ஆனால், கணிணி மூலம் பயிற்சி அளித்தும் அனைவரும் ஒன்றுபோல் சிறப்பாகத் திருக்குறள் இசை நிகழ்ச்சியை அளித்தனர். திருக்குறள்…
திருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா?- தமிழறிஞர்கள் ஓசனை!
திருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா?- தமிழறிஞர்கள் ஓசனை! தில்லியில் கடந்த 23,24 ஆம் நாள்களில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய, தமிழ் ஆட்சி மொழி பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராசன் நிறைவு விழாவிலும் தன்னார்வத்துடன் பங்கேற்றார். அப்போது அவர் “பிரான்சில் 06., 07.08.2020 இல் நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டிற்கு அரசு நிதி யுதவி செய்யும். இந்த மாநாடு முடிந்து விட்டாலும் சிறிய அளவு உதவியேனும் செய்வோம். அமெரிக்காவில் நடைபெற்ற உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு…
திருக்குறளைப் போற்றுவோர் தமிழையும் போற்றுக! இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருக்குறளைப் போற்றுவோர் தமிழையும் போற்றுக! தமிழைப் போற்றாமல் திருக்குறளையோ பிற இலக்கியங்களையோ போற்றிப் பயனில்லை. இங்கே கூறப்படுவது அனைத்து விழா ஏற்பாட்டாளருக்கும் பொதுவானது. இருப்பினும் திருக்குறள் மாநாட்டை அளவீடாகக் கொண்டு பார்ப்போம். கருத்தரங்கத்தில் தமிழ் தொலைக்கப்படுவதைக் காணும் பொழுது இரத்தக் கொதிப்பு வருகிறதே! ஆகச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இவ்வமைப்பினர் நடத்தும் அழைப்பிதழ் பதாகைகள் முதலான எவற்றிலும் தமிழ் இல்லை. தமிழ் நூல் குறித்த தமிழர் நடத்தும் மாநாடுகளில் அல்லது கருத்தரங்கங்களில் தமிழ் இல்லை என்பது தலைக்குனிவு அல்லவா? புது தில்லியில் அதே…
புதிய கல்விக் கொள்கை – ஒரு பார்வை பக்தவத்சலம் நினைவுக் கருத்தரங்கம்
ஆவணி 28, 2050 சனி 14.09.2019 காலை 9.00 மணி முதல் நண்பகல் 1.00 மணிவரை செஞ்சிலுவைச் சங்கம் மாண்டியத்து சாலை, எழும்பூர், சென்னை 600 008 வழ.பி.வி.பக்தவத்சலம் 12 ஆம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கம்
பிரித்தானியத் தமிழர் பேரவை- கருத்தரங்கு
ஆவணி 28, 2050 14/09/2019 மாலை 05:00 முதல் இரவு 07:30 மணிவரை மில்டன் கீயின்சு நகர் ( 69 Downs Barn Boulevard, Downs Barn, Milton Keynes, MK14 7NA ) இலங்கைத் தமிழர்களின் அரசியல் சிக்கலின் இக்கால நிலை – கருத்தரங்கம் இதில் பிரித்தியானியாவிலும் ஏனைய உலக நாடுகளிலும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் சிக்கலின் இக்கால நிலைபற்றி கலந்துரையாடப்பட இருக்கிறது. அதில் “ஐக்கிய நாடுகள் அவையில் அரசதந்திரர நகர்வுகள்” என்பது முதன்மைக் கருப்பொருளாக இருக்கும். அதனைத் தொடர்ந்து மக்களின் கேள்விக்கான நேரம் கொடுக்கப்படும். இறுதியாக…
பெரியாரியல் சிறப்புக் கருத்தரங்கம், புதுச்சேரி
ஆவணி 04, 2050 புதன்கிழமை 21.8.2019 மாலை 5.00 இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி பெரியாரியல் சிறப்புக் கருத்தரங்கம் வரவேற்புரை: இர.இராசு (மண்டலத் தலைவர்) தலைமை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர்) முன்னிலை: இரா.சிவா (மாநிலத் திமுக அமைப்பாளர் தெற்கு, புதுச்சேரி) தலைப்பு : திராவிடம் – நேற்று, இன்று, நாளை – வழக்குரைஞர் இள.புகழேந்தி (திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்) தலைப்பு: நிகழ்கால அரசியலில் பெரியாரின் தேவை – முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) உரையாற்றுவோர்: அ.மு.சலீம் (மாநிலச் செயலாளர்,…
