தமிழ் வளர்ச்சியும் தளர்ச்சியும் – இலக்குவனார் திருவள்ளுவன், நக்கீரன்

தமிழ் வளர்ச்சியும் தளர்ச்சியும்     மக்கள் நலத்திட்டங்களிலும் மொழி வளர்ச்சியிலும் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் முன்னோடியாகவும் பல திட்டங்களைச் செயற்படுத்திவருவது தமிழக அரசுதான். இந்த வகையில் தி.மு.க., அதிமுக ஆகிய இரண்டு திராவிடக்கட்சிகளின் ஆட்சிப் பொறுப்பாளர்களும் இவற்றிற்குக் காரணமான அலுவலர்களும் பணியாளர்களும் பாராட்டிற்குரியவர்களே!   திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்   அரசின் தமிழ்ப்பணிகள், தமிழ்வளர்ச்சி இயக்ககம் முதலான அரசின் துறைகள், உலகத்தமிழராய்ச்சி நிறுவனம் முதலான அரசுசார் நிறுவனங்கள், தமிழ்ப்பல்கலைக்கழகம் முதலான பல்கலைக்கழகங்கள், ஆசியவியல் நிறுவனம் முதலான நல்கைநிதியுதிவி பெறும் நிறுவனங்கள் மூலம் சிறப்பாக  நடைபெறுகின்றன.   நம் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு எனச் சூட்டப்பட்டது(1968), தலைநகர் எல்லா…

ஈழத்தமிழர்களே! ஊர்ப்பெயர்களைச் சிதைக்காதீர்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஈழத்தமிழர்களே! ஊர்ப்பெயர்களைச் சிதைக்காதீர்கள்!   அயலவர்கள் அவர்களின் மொழி உச்சரிப்பிற்கேற்ப நம்  ஊர்ப்பெயர்களை உச்சரித்தனர். திருநெல்வேலியைத் ‘தின்ன வேலி’ என்றும் திருவல்லிக்கேணியை ‘டிரிப்பிளிகேன்’ என்றும் சொல்வதுபோல் எண்ணற்ற ஊர்களை இவ்வாறுதான் தவறாக நாம் தமிழிலும் ஒலித்தோம். ஒருபுறம் ஆரியமயமாக்கப்பட்ட பெயர்கள் மறுபுறம் தவறான உச்சரிப்பிலான பெயர்கள் என இருபுறமும் தாக்குதல் நடைபெற்றது. திராவிட இயக்க எழுச்சியாலும் தனித்தமிழியக்கத்தினர் தொண்டினாலும் தமிழறிஞர்களின் ஆற்றுப்படுத்தினாலும் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் தமிழ்மய மாற்றங்கள் தேவை.   இவ்வாறு நம்மிடையே குறை  வைத்துக்கொண்டு, ஈழத்தமிழர்களை மட்டும் குற்றம்…

கட்டடக் கலை உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே! – கோ.தெய்வநாயகம்

கட்டடக் கலை உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே!      தொழில்நுட்பமும் கலைநுட்பமும் இணைந்து உருவாக்கப்படுவதே கட்டடக்கலை. இதன் செம்பொருள் உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே. உலகின் தலைசிறந்த கட்டடக்கலை வல்லுநர்களாகத் தமிழர் விளங்கி உள்ளனர். எனவேதான் பிரித்தானியக் கலைக் களஞ்சியம் தமிழர்களைத் தலைசிறந்த “”கோயிற் கட்டடக் கலைக் கட்டுநர்கள்” எனக் குறிக்கின்றது. வாழ்வியல் மற்றும் சமயஞ்சார் கட்டடக் கலையின் எழிலார்ந்த வடிவாக்கங்களைத் தமிழர்கள் தொன்றுத் தொட்டே ஆளுமையுடன் படைத்துச் சிறந்தமையை இன்றும் தமிழகத்தின் ஊர்களிலும் கோயில்களிலும் கண்டு மகிழலாம். முனைவர்…

பாடல் வகைகள்

பாடல் வகைகள்   குழந்தைப் பாடல்கள்: தாலாட்டுப்பாடல்கள்: விளையாட்டுப் பாடல்கள்: வேடிக்கைப் பாடல்கள் தொழிற்பாடல்கள் தெம்மாங்குப் பாடல்கள் மணப்பாடல்கள்: வாழ்த்துப் பாடல்கள் வசைப் பாடல்கள் பிணப்பாடல்கள்: ஒப்பாரிப் பாடல்கள் மாரடிப் பாடல்கள் களியல் பாடல்கள் வழிபாட்டுப் பாடல்கள் கோலாட்டுப் பாடல்கள் குறிகாரன் பாடல்கள் குடுகுடுப்பைப் பாடல்கள் கோடங்கிக் காரன் பாடல்கள் திருவிளக்குப் பாடல்கள் துளசிவழிபாட்டுப் பாடல்கள் வருணன்வழிபாட்டுப் பாடல்கள் மாரியம்மன் வழிபாட்டுப் பாடல்கள் வள்ளி வழிபாட்டுப் பாடல்கள் பிள்ளையார் வழிபாட்டுப் பாடல் அம்பாள் பாடல் வண்டியோட்டிப் பாடல் களையெடுப்போர் பாடல் கதிர்அறுப்போர் பாடல் சூடடிப்போர்…

கூத்து வகைகள்

கூத்து வகைகள்   1. குரவை 2. துணங்கை 3. வெறியாட்டு 4. கொடுகொட்டி 5. பாண்டரங்கம் 6. கபாலம் 7. வள்ளிக்கூத்து 8. வாளமாலை 9. துடிக்கூத்து 10. கழல்நிலைக் கூத்து 11. உரற் கூத்து 12. மற்கூத்து 13. குடக்கூத்து 14. மரக்கால்கூத்து 15. தோற்பாவைக் கூத்து 16. ஆரியக் கூத்து (கயிறாட்டம்) 17. தேசிக் கூத்து 18. வடுகுக் கூத்து 19. சிங்களக் கூத்து 20. சொக்கக் கூத்து 21. அவிநயக் கூத்து 22. கரணக் கூத்து 23. வரிக்…

சுந்தரச் சிலேடைகள் 8 : பல்லியும் காதலியும்

 சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 8 பல்லியும் காதலியும் உடலுயிர் கால்வைத்தே ஊர்ந்தோடும், வாழ்தல் திடங்கொண்டு முத்தமிடத் தீம்புண்.-விடமுண்டாம் சத்தமிட்டு முத்துருட்டும் சங்கச் சிரிப்பாலே ! உத்தமிக்குப் பல்லியுநே ரொப்பு. பொருள்: காதலி: 1)நம் மனத்தில் உடலில் ஒன்றாகி நினைவுகளில் இனிக்க அங்குமிங்கும் ஓடுவாள். 2) முத்தம் கடுமையானால் உதடுகள் புண்ணாகும். 3) காதல் விடத்தால் நோய்தருவாள் ; உயிரைக்கூட எடுப்பாள். 4) அவள் சிரிப்பு முத்துக்களை உருட்டிவிட்டதுபோல் இருக்கும். பல்லி: 1) சுவரில் இங்குமங்கும் ஓடும். 2) பல்லிகள் வாயிலிருந்து வரும் உமிழ்நீரானது…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா)    பேரா. இலக்குவனார் புதுக்கோட்டையில் இருந்த பொழுது ‘குறள்நெறி’ என்னும் இதழை நடத்தினார் அல்லவா? இங்கு அதே பெயரில் தமிழ்த்திங்களிருமுறை இதழைத் தொடங்கினார். இது குறித்து, இக்காலத்தில் பத்திரிகை நடத்தி வெற்றி பெறுவது கலிங்கப் போரில் ஈடுபட்டு வெற்றி காண்பதை ஒத்ததாகும். இத்தகைய துயரை அறிந்தும்கூட திரு இலக்குவனார் தமிழின்மீதுள்ள பற்றினால் குறள்நெறியை வெளியிடும் பணியில் இறங்கியுள்ளார்கள் என்றார் முத்தமிழ்க்காலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள்(பக்கம் 4: குறள்நெறி : 1.2.64) இவ்விதழ் தொடங்குவதற்கான…

அரசியல்வாதிகளே! நற்செயல் விதையுங்கள்! புகழை அறுவடை செய்யுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அரசியல்வாதிகளே!  நற்செயல் விதையுங்கள்! புகழை அறுவடை செய்யுங்கள்!   அரசியல்வாதிகள் மக்கள் பணிக்காக அரசியலில்  ஈடுபடுவதாகக் கூறுகின்றனர்.  ஆனால் மக்கள் நலனுக்காக வருவதாகக்  கூறுபவர்கள் தங்களையும் தங்கள் சார்ந்தவர்கள் நலன்களையுமே கவனத்தில் கொண்டு தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். அரசியல் என்பது வணிமாக்கப்பட்டதால், சிறு முதல் போட்டு,  பெரு முதல் எடுப்பதுபோல், தேர்தல் நேரங்களில் மக்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி வெற்றியை  ஈட்டுகின்றனர். வெற்றி  பெற்றதும் மக்கள் நலனில் கருத்து செலுத்தாமல் போட்ட முதல்தொகையை எடுப்பதில் கவனம் செலுத்தி ஊழலில் ஈடுபடுகின்றனர். அன்னக்காவடியாக இருந்தவர்களும் மன்னனைப்போல் செல்வம்…

தி.மு.க.வின் இந்திப்பாசம் தவறு! தமிழுக்குத் தேவை முன்னுரிமையல்ல! முழு உரிமையே! – இலக்குவனார் திருவள்ளுவன்

தி.மு.க.வின் இந்திப்பாசம் தவறு! தமிழுக்குத் தேவை முன்னுரிமையல்ல! முழு உரிமையே!   இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தி.மு.க.வின் பங்களிப்பையோ,  உணர்ச்சியூட்டி வழி நடத்திய பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி முதலான தலைவர்கள், தொண்டர்கள் பங்களிப்பையோ யாரும் குறைக்கவோ மறைக்கவோ முடியாது. எனினும் ஆட்சி இருக்கையில் அமர்ந்த பின்னர் எதிர்ப்புகளைச் சமாளிக்க விட்டுக்கொடுக்கும் போக்கில் கலைஞர்  கருணாநிதி மாறியது தமிழுக்கும் தமிழ்நாட்டவர்க்கும் தீங்காய் அமைந்தது.  இந்தி  எதிர்ப்பு என்று சொன்னவுடன் எதிர்த்தரப்பார் என்ன சொல்கின்றார்கள்? “இந்தி தெரிந்ததால் மாறனை அமைச்சராக்கினேன்! இந்தி அறிந்ததால் தயாநிதி மாறனை…

புறநானூற்றில் நிதி மேலாண்மை – அ.அறிவுநம்பி

  (புதுவைப்பல்கலக்கழகத்தின் தமிழ்த்துறை புல முதன்மையர் முதலான பல பொறுப்புகளில் பணியாற்றி மறைந்த அறிஞர் முனைவர் அறிவுநம்பி மறைவிற்கு அகரமுதல இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் அவரது கட்டுரை ஒன்றினை வெளியிடுகிறது. மரபார்ந்த புலவர் வழியினர்  அவர், என்பதை இக்கட்டுரையின் நடை காட்டுகின்றது. இன்றைய கட்டுரையாளர்கள் நல்ல தமிழில்  பிழையின்றி எழுத வேண்டும் என்பதற்கு இது போன்ற கட்டுரைகளை முன்னெடுத்துக்காட்டுகளாகக் கொள்ள வேண்டும். கருத்தரங்கம் ஒன்றில் வாசிக்கப்பெற்ற இக்கட்டுரை ஏமலதா வலைப்பூ விலிருந்து எடுக்கப்பட்டது – ஆசிரியர் ) [நினைவுக்குறிப்பு:  ‘சித்தர் இலக்கியம்’ குறித்தப் பன்னாட்டுக்…

திருக்குறள் அறுசொல் உரை : 122. கனவு நிலை உரைத்தல் : வெ. அரங்கராசன

(திருக்குறள் அறுசொல் உரை : 121. நினைந்தவர் புலம்பல் :  தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால் 15.கற்பு இயல் 122. கனவு நிலை உரைத்தல்   தலைவி, தான்கண்ட கனவு நிலைகளை, எடுத்து மொழிதல்.   (01-10 தலைவி சொல்லியவை) காதலர் தூதொடு வந்த கனவினுக்கு,       யாதுசெய் வேன்கொல் விருந்து? காதலர் வரவைக் கூறிய கனாத்தூதுக்கு, என்ன விருந்திடுவேன்?   கயல்உண்கண், யான்இரப்பத் துஞ்சின், கலந்தார்க்(கு),       உயல்உண்மை சாற்றுவேன் மன். கண்கள் தூங்கின், நான்வாழ்வதைக் காதலர்க்குக்…

தமிழின்பம் தனி இன்பம் 3/3 – முடியரசன்

 (தமிழின்பம் தனி இன்பம் 2/3 – முடியரசன் தொடர்ச்சி)  தமிழின்பம் தனி இன்பம்  3/3     மாறவர்மன் சுந்தரபாண்டியன் முன்பகை காரணமாகச் சோழ நாட்டின்மீது படையெடுத்துச் சென்றான். பொருது வெற்றியுங் கொண்டான். அவ் வெற்றிச் செருக்கால் ஊரைப் பாழ் படுத்த ஆணையிடுகிறான். படைவீரர் பாழ்ச்செயலில் ஈடுபடு கின்றனர். பெரும் பெரும் மாளிகைகள் தரைமட்டம் ஆக்கப்படு கின்றன. அதனைக் கண்டு, மாறன் வெற்றி வெறிகொண்டு நகைக்கின்றான். ஆனால், ஓரிடத்துக்கு வந்ததும் அவனது வெறி விலகு கிறது. ஆணவச் சிரிப்பு அடங்குகிறது. “அதோ அந்த மண்டபத்தை…