அவதானப் புலவர் அபூபக்கர் – பேராசிரியர் மு. அப்துல் சமது

  தமிழிலக்கியப் புலமையும் இலக்கணப் புலமையும் நினைவாற்றலும் மிக்கவர்களால் நிகழ்த்தப்படும் ஓர் அரிய கலை ‘அவதானம்’   “வாயொன்று சொல்லவும் கையொன்று செய்யவும் வாய்த்தமிழ்    ஆயென்ற போதாத னேர்விடை கூறவும், ஆசினிக்கு    ஈயென்ற சொல்லை யிணைக்கலம் இட்டிசை யின்னவையோ    டேயென்ற ஆறும் அவதானம் செய்பவர் மகியைந்தவையே” என்று சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் அவதானக் கலையை நிகழ்த்துபவர்கள் பெற்றிருக்கும் திறனை அளவிட்டுள்ளார்.   ஒரே நேரத்தில் பல்வேறு நுட்பமான செய்திகளைக் கவனத்தில் நிறுத்தி, கேட்கும் கேள்விகளுக்கு விடைகூறும் விதத்தில் இக்கலை…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 08: ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 105 ஐப்பசி 29, 2046 / நவ. 15, 2015 தொடர்ச்சி) 8   பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையைப் பின்பற்றிய கவிஞர்கள் அனைவரும் தமிழ் மொழியின் சிறப்பையும் மறுமலர்ச்சியையும் சமூகச் சீர்திருத்தத்தையுமே தம்முடைய கவிதைக்குக் கருப்பொருளாகக் கொண்டார்கள். எடுத்துக்காட்டாக புலவர் குழந்தை, இ.மு. சுப்பிரமணியபிள்ளை, சாமி. சிதம்பரனார், வாணிதாசன், ச. பாலசுந்தரம் ஆகியோர் எழுதிய கவிதைகளைக் குறிப்பிடலாம். புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம்’ என்ற மிகப் பெரிய செய்யுள் நூலை எழுதி பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்கள். இராவண காவியம் கம்பன் கவிக்கு…

தமிழ்நல உறுதிமொழிஞர் 05 : வேல்முருகன் சுப்பிரமணியன்

தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும் என உறுதி ஏற்கிறேன்.

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 4: இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 105  ஐப்பசி 29, 2046 / நவ. 15, 2015 தொடர்ச்சி)   04 “பணமி ருந்தார் என்ப தற்காய்ப் பணிந்தி டாத மேன்மையும் பயமுறுத்தல் என்ப தற்கே பயந்திடாத பான்மையும் குணமி ருந்தார் யாவ ரேனும் போற்று கின்ற கொள்கையும் குற்ற முள்ளோர் யாரென் றாலும் இடித்துக் கூறும் தீரமும் இனமி ருந்தார் ஏழை யென்று கைவி டாத ஏற்றமும் இழிகு லத்தார் என்று சொல்லி இகழ்த்தி டாமல் எவரையும் மணமி குந்தே இனிமை மண்டும் தமிழ்மொ ழியால் ஓதிநீ மாநி…

இந்திய நாகரிகம் தமிழரதே யாதல்! – பாவாணர்

வேதத்தை அடிப்படையான வரலாறு தவறானது!   வேத ஆரியர் மேலையாசியாவினின்று இந்தியாவிற்குட் புகுந்த காலம் கி.மு. 2000 – 1500. அன்று அவர் கன்றுகாலிகளை ஓட்டித் திரியும் நாடோடிகளாயும், முல்லை நாகரிக நிலையின ராயுமே யிருந்தனர். அவருக்கு இலக்கியமுமில்லை; எழுத்துமில்லை. அவர் பேசிய மொழி கிரேக்கத்திற்கு இனமாயும் பழம்பாரசீகத்திற்கு மிக நெருங்கியதாயும் சொல்வளமற்றதாயும் இருந்தது. இந்தியாவிற் காலூன்றிய பின்னரே, அவர் இருக்கு என்னும் தம் முதல் வேதத்தை யாத்தனர். அவ் வேதமொழி வடஇந்தியப் பிராகிருதத்தையும் திரவிடத்தையும் தழுவியதென்பது அதில் எகர ஒகரக் குறிலின்மையாலும் பல தமிழ்ச்சொற்க…

பிரித்தானியத் தமிழ்ப்பேரவையின் பாராட்டிற்குரிய ஈழம்சார் செயற்பாடுகள்

  கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இலங்கையில் தமிழருக்கு எதிராகச் சிறிலங்கா அரசாங்கங்களால் திட்ட மிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்புக்கு எதிராகத் தமிழர் தரப்பு நீதி கேட்டுத் தாம் வாழும் நாடுகளில் போராடி வருகின்றார்கள்.   அந்த வகையில் பிரித்தானியாவில் பிரித்தானியத் தமிழர் பேரவையினால் பெரும் மக்கள் போராட்டங்கள் தொடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்போராட்டங்களின் ஒரு வடிவமாகப் பிரித்தானியாவில் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளின் தத்தமது பாராளுமன்ற உறுப்பினர்களை அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகச் சந்தித்துவருகின்றார்கள்.   இச் சந்திப்புக்களின்போது அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையின்…

திருக்குறள் அறுசொல் உரை – 095. மருந்து : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 094. சூது தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 095. மருந்து  நோய்கள் வரும்முன் காக்கும்,   வந்தால், நீக்கும் மருத்துவம். மிகினும், குறையினும் நோய்செய்யும், நூலோர்      வளிமுதலா எண்ணிய மூன்று. உடல்சூடு, குளிர்ச்சி, காற்று,        நிறையினும், குறையினும் நோயே.   ”மருந்(து)”என வேண்டாஆம் யாக்கைக்(கு), அருந்திய(து),      அற்றது, போற்றி உணின். “மருந்து”என, வேண்டாம், உணவு        முழுதும் செரித்தபின் உண்டால்.   அற்[று]ஆல் அள(வு)அறிந்(து) உண்க; அஃ(து)உடம்பு      பெற்றான், நெடி(து)உய்க்கும் ஆறு….

திருக்குறள் அறுசொல் உரை – 094. சூது : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 093. கள் உண்ணாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 094. சூது பரம்பரைப் புகழ்,பண்பு, மதி,அன்பு பொருள்கெடுக்கும் சூதை விடு. வேண்டற்க, வென்(று)இடினும் சூதினை; வென்றதூஉம்,      தூண்டில்பொன் மீன்விழுங்கி அற்று.  மீன்விழுங்கிய தூண்டில் இரைதான்          சூதில் வருவெற்றி; வேண்டாம்.   ஒன்(று)எய்தி, நூ(று)இழக்கும் சூதர்க்கும், உண்டாம்கொல்      நன்(று)எய்தி, வாழ்வ(து)ஓர் ஆறு?  ஒன்றுபெற்றுப், பலஇழக்கும் சூதாடிக்கும்        நன்றுஆம் வாழ்வு உண்டாமோ?        உருள்ஆயம் ஓயாது கூறின், பொருள்ஆயம்,  போஒய்ப் புறமே படும்.  ஓயாது…

திருக்குறள் அறுசொல் உரை – 093. கள் உண்ணாமை: வெ. அரங்கராசன்

(அதிகாரம் 092. வரைவின் மகளிர் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 093. கள் உண்ணாமை நல்உணர்வு, உடல்நலம், செல்வம் அழிக்கும் கள்ளைக் குடிக்காமை.     உட்கப் படாஅர், ஒளிஇழப்பர், எஞ்ஞான்றும்    கள்காதல் கொண்(டு)ஒழுகு வார்.       கள்ளைக் காதலிப்பார் எப்போதும்        அஞ்சப்படார்; புகழையும் இழப்பார்.   உண்ணற்க கள்ளை; உணில்உண்க, சான்றோரால்      எண்ணப் படவேண்டா தார்.      கள்ளைக் குடிக்காதே; பெரியார்தம்          மதிப்பு வேண்டாம்எனில், குடிக்க.     ஈன்றாள் முகத்தேயும், இன்னா(து)ஆல், என்மற்றுச்…

கதிரவேலு மரணம் தமிழ் ஊடகத்துறைக்குப் பேரிழப்பு

   மூத்த ஒளிப்பட ஊடகவியலாளர் கதிரவேலு ஐயா மரணமடைந்த செய்தியறிந்து பன்னாட்டுத் தமிழ்ச்செய்தியாளர் ஒன்றியத்தினராகிய நாம் வேதனை யடைந்துள்ளோம். ‪  ஆறுபதின்மங்களுக்கு மேற்பட்ட ஒளிப்பட ஊடகப்பட்டறிவைக் கொண்ட ச.கதிரவேலு ஐயாஈழத்தமிழர்களுக்கு எதிரான சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளை தனது ஒளிப்படங்கள் மூலம்வெளிப்படுத்தியவர். தமிழர்கள் நடாத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை தனது ஒளிப்படங்கள் மூலம் உலகுக்கு வெளிப்படுத்த முற்பட்டபோது சிறீலங்கா காவற்துறை நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலால் தனது ஒரு கண்ணின் பார்வையை இழந்தவர்.   தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகளையும் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைக்கு அண்மித்தநிகழ்வுகளையும் தனது…

திருக்குறள் அறுசொல் உரை – 092. வரைவின் மகளிர் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 091. பெண்வழிச் சேறல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 092. வரைவின் மகளிர்.   பொருள்விருப்பால் மட்டுமே, பலரை விரும்பும் திருமணம்ஆகா மகளிர். அன்பின் விழையார், பொருள்விழையும் ஆய்தொடியார்,      இன்சொல் இழுக்குத் தரும்.      அன்புஇன்றிப் பொருள்கள் விரும்பும்        பரத்தையின் இன்சொல் இழிவுதரும்.       பயன்தூக்கிப், பண்(பு)உரைக்கும் பண்(பு)இல் மகளிர்,      நயன்தூக்கி, நள்ளா விடல்.      பெறுபயன் ஆய்ந்து பண்போடு        பேசும், பரத்தையரை நெருங்காதே.        பொருள்பெண்டிர் பொய்ம்மை முயக்கம், இருட்(டு)அறையில்…

வ.உ.சி என்ற பன்முக ஆளுமை! – இரவி இந்திரன்

  வ.உ.சி என்று அழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரப்பிள்ளை பிரித்தானிய இந்திய நீராவிக் கப்பற்பயண நிறுவனத்திற்கு (British India Steam Navigation Company) எதிராக 16.10.1906 இல் உள்நாட்டு(சுதேசிய) நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியதால் கப்பலோட்டிய தமிழன் என்றும் ஆங்கிலேய அரசுக்கு எதிராகச் செயற்பட்டமைக்காகச் சிறைத்தண்டனை துய்க்கையில் செக்கிழுக்க வைக்கப்பட்டமையால் செக்கிழுத்த செம்மல் என்றும் அழைக்கப்படும் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.   இவர் விடுதலைப் போராட்ட வீரர் மட்டுமல்ல ஒரு சிறந்த வழக்கறிஞர், கவிநயம்மிக்க எழுத்தாளர், பதிப்பாசிரியர் எனப் பன்முக ஆளுமைகொண்டவர்….