திருக்குறள் அறுசொல் உரை – 093. கள் உண்ணாமை: வெ. அரங்கராசன்

(அதிகாரம் 092. வரைவின் மகளிர் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 093. கள் உண்ணாமை நல்உணர்வு, உடல்நலம், செல்வம் அழிக்கும் கள்ளைக் குடிக்காமை.     உட்கப் படாஅர், ஒளிஇழப்பர், எஞ்ஞான்றும்    கள்காதல் கொண்(டு)ஒழுகு வார்.       கள்ளைக் காதலிப்பார் எப்போதும்        அஞ்சப்படார்; புகழையும் இழப்பார்.   உண்ணற்க கள்ளை; உணில்உண்க, சான்றோரால்      எண்ணப் படவேண்டா தார்.      கள்ளைக் குடிக்காதே; பெரியார்தம்          மதிப்பு வேண்டாம்எனில், குடிக்க.     ஈன்றாள் முகத்தேயும், இன்னா(து)ஆல், என்மற்றுச்…

கதிரவேலு மரணம் தமிழ் ஊடகத்துறைக்குப் பேரிழப்பு

   மூத்த ஒளிப்பட ஊடகவியலாளர் கதிரவேலு ஐயா மரணமடைந்த செய்தியறிந்து பன்னாட்டுத் தமிழ்ச்செய்தியாளர் ஒன்றியத்தினராகிய நாம் வேதனை யடைந்துள்ளோம். ‪  ஆறுபதின்மங்களுக்கு மேற்பட்ட ஒளிப்பட ஊடகப்பட்டறிவைக் கொண்ட ச.கதிரவேலு ஐயாஈழத்தமிழர்களுக்கு எதிரான சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளை தனது ஒளிப்படங்கள் மூலம்வெளிப்படுத்தியவர். தமிழர்கள் நடாத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை தனது ஒளிப்படங்கள் மூலம் உலகுக்கு வெளிப்படுத்த முற்பட்டபோது சிறீலங்கா காவற்துறை நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலால் தனது ஒரு கண்ணின் பார்வையை இழந்தவர்.   தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகளையும் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைக்கு அண்மித்தநிகழ்வுகளையும் தனது…

திருக்குறள் அறுசொல் உரை – 092. வரைவின் மகளிர் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 091. பெண்வழிச் சேறல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 092. வரைவின் மகளிர்.   பொருள்விருப்பால் மட்டுமே, பலரை விரும்பும் திருமணம்ஆகா மகளிர். அன்பின் விழையார், பொருள்விழையும் ஆய்தொடியார்,      இன்சொல் இழுக்குத் தரும்.      அன்புஇன்றிப் பொருள்கள் விரும்பும்        பரத்தையின் இன்சொல் இழிவுதரும்.       பயன்தூக்கிப், பண்(பு)உரைக்கும் பண்(பு)இல் மகளிர்,      நயன்தூக்கி, நள்ளா விடல்.      பெறுபயன் ஆய்ந்து பண்போடு        பேசும், பரத்தையரை நெருங்காதே.        பொருள்பெண்டிர் பொய்ம்மை முயக்கம், இருட்(டு)அறையில்…

வ.உ.சி என்ற பன்முக ஆளுமை! – இரவி இந்திரன்

  வ.உ.சி என்று அழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரப்பிள்ளை பிரித்தானிய இந்திய நீராவிக் கப்பற்பயண நிறுவனத்திற்கு (British India Steam Navigation Company) எதிராக 16.10.1906 இல் உள்நாட்டு(சுதேசிய) நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியதால் கப்பலோட்டிய தமிழன் என்றும் ஆங்கிலேய அரசுக்கு எதிராகச் செயற்பட்டமைக்காகச் சிறைத்தண்டனை துய்க்கையில் செக்கிழுக்க வைக்கப்பட்டமையால் செக்கிழுத்த செம்மல் என்றும் அழைக்கப்படும் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.   இவர் விடுதலைப் போராட்ட வீரர் மட்டுமல்ல ஒரு சிறந்த வழக்கறிஞர், கவிநயம்மிக்க எழுத்தாளர், பதிப்பாசிரியர் எனப் பன்முக ஆளுமைகொண்டவர்….

திருக்குறள் அறுசொல் உரை – 091. பெண்வழிச் சேறல் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 090. பெரியாரைப் பிழையாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 091. பெண்வழிச் சேறல் மிகுகாமத்தால் அடிமையாகி, மனைவியின் மொழிவழிச் சென்று அறம்மறத்தல். மனைவிழைவார், மாண்பயன் எய்தார்; வினைவிழைவார்,      வேண்டாப் பொருளும் அது.       பெண்வழி நடப்பார், பயன்அடையார்;        நல்செயல் வல்லார், விரும்பார்.   பேணாது பெண்விழைவான் ஆக்கம், பெரியதோர்      நாணாக நாணுத் தரும்.   மனைவிக்கு அடிமை ஆகியார்        வளநலம், வெட்கப்படத் தக்கவை.   இல்லாள்கண் தாழ்ந்த இயல்(பு),இன்மை; எஞ்ஞான்றும்,     …

இலக்குவனாரின் ஆங்கிலத் தொல்காப்பியத்திற்கு அண்ணாவின் அணிந்துரை

தொல்காப்பிய மொழிபெயர்ப்பு: தமிழ்ப்பெருமக்களுக்குப் பெருமை நல்கும் பெருஞ்செயல் பேராசிரியர் சி.இலக்குவனாரின் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பிற்குப் பேரறிஞர் அண்ணா அணிந்துரை                   இன்றமிழ்ப் புலமைமிகு இலக்குவனாரின் இவ் வாராய்ச்சி நூலை நோக்கியவுடனே விழுமம் எனும் எழிற்றமிழ்ச் சொல்லே எவருடைய உள்ளத்திலும் இயல்பாக எழும். வினைநயங் கெழுமிய இவ்வாராய்ச்சி வியப்பூட்டுகின்ற ஓர் இலக்கியக் கருவூலம் எனினும் மிகையன்று. பன்னூற் புலமையுடைய பண்டாரகர் இலக்குவனார்க்கு இஃதோர் எளிய வெற்றியேயாம்.                   இஃது அறப்பழமையும், அழியா அழகும் நனி உயர்வும் பொலியும் நற்றமிழ் இலக்கணப் பேழையாகிய ஒல்காப்…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 3: இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015 தொடர்ச்சி) 03   “தமிழின் பழைய மரபுகள் அழிந்து, தமிழ் அழிந்து போகாமல் காக்கவே தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும்.” என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். ஆனால், இன்றைக்கு நாம் தமிழ் மரபுகளை அழித்துக் கொண்டு அழிவுப் பாதையில் விரைந்து கொண்டிருக்கிறோம்.   “தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று இருந்தது. அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம். தொல்காப்பியத்தால் மொழி நிலை – இலக்கியநிலை மட்டுமன்று; அக்கால மக்கள் நிலையும் அறியலாகும். . ….

இலக்குவனாரைப் பயன்படுத்தத் தெரியாத அரசு – சிவகாமி சிதம்பரனார்

இலக்குவனாரைப் பயன்படுத்தத் தெரியாத அரசு   பேராசிரியர் சி.இலக்குவனார், கொள்கையிலும் மொழிப் பற்றிலும் பிடிவாதமான உறுதி வாய்ந்தவர். அஞ்சா நெஞ்சுடையவர். கடைசிக் காலம் வரை எதிர்ப்பில் போராடியவர். கொள்கைக்காகத் தம் ஆசிரியப் பணியையும் விட்டார். கொள்கைப் பிடிவாதத்தால் குடும்பத்துடன் துன்பப்பட்ட காலங்களும் நிரம்ப உண்டு. எக்கட்சி ஆளுங்கட்சியாய் இருந்தாலும் அரசுக்கு அவ்வப்போது இடித்துரை கூறத்தவறுவதில்லை. இதனால் பலமுறை பணிமாறுதல்களையும் சந்தித்த பெருமையுடையவர். தம் பிழைப்புக்காக ஒரு போதும் கொள்கையை விட்டுக் கொடுக்காத பேராண்மை படைத்தவர். சென்னையில் வாழ்ந்த போது, பல தமிழ் இலக்கியம் கூட்டங்களை…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 07: ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015 தொடர்ச்சி) இயல் – 3 இருபதாம் நூற்றாண்டுக் கவிதையும் இலக்குவனாரும்   இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் தமிழ்நாடு விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த காலமாகும். நாட்டு விடுதலை வேட்கை மக்கள் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்தது. பாட்டுக்கொரு புலவன் பாரதியும் அவனைப்போலப் பிற கவிஞர்களும் நாட்டு விடுதலையைக் கருப்பொருளாகக் கொண்டு கவிதைகளை இயற்றினார்கள். செய்யுள் என்ற சொல்லைக் கவிதையாக்கியவர் பாரதி. மிகவும் எளிய சொற்களால் உள்ளத்து உணர்வைத் தூண்டும் வகையில் பாடினார். நாட்டு விடுதலையைப் பாடிய…

பேராசிரியர் சி.இலக்குவனார் சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டானவர்

தமிழ் வழிக்கல்விக்கு ஆக்கம் தேடியவர்  பேராசிரியர் சி.இலக்குவனார் பகுத்தறிவு நோக்கில் பெரியாரைப் பின்பற்றினார். மொழிநோக்கில் மறைமலை அடிகளாரைப் பின்பற்றினார். இந்தி எதிர்ப்பில் நாவலர் சோமசுந்தர பாரதியாரைப் பின்பற்றினார். வறுமையிலும் செம்மையுடையவராக விளங்குவதில் புலவர் பெருஞ்சித்திரனாரைப் பின்பற்றினார். புறநானூற்றில் வருகின்ற வேலைக் கையிலெடுப்பது போலத் திண்மையோடு (வலிமையோடு) வாழ்ந்து காட்டினார். வன் தொடர்களை மிகுதியாகப் பின்பற்றினார். வல்லினப் பேராசியராய் விளங்கி இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்கின்றார்.   திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்றோர் பக்திக்காகப் பயணம் செய்தனர். பக்திக்காகப் பயணம் செய்த தமிழ்நாட்டில் முதன் முதலாக…

சங்கத்தமிழ் தந்தால் சந்தப்பா தருவேன் – ஔவையார்: நாக.இளங்கோவன்

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய் துங்கக்கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா.”   பிள்ளையாரின் அடியாரான ஒளைவையார் ஆக்கிய இந்தப்பாடலை தமிழ்படித்த, பேசுகின்ற எவரும் ஏதோவொரு வழியில் படித்தோ பேசியோ பாடியோ இருப்பார்கள். தமிழ்நாட்டில் அத்தனைப் புகழ்பெற்றது இந்தப்பாடல். தமிழ்வழிபாடுகளில் இடம்பெறும் பாடல்களில் முக்கியமான பாடல் இதுவென்றால் மிகையன்று.  அழகும், வெற்றியும் அணிசெய்கின்ற கரிமுகத்தானிடம் ஔவையார் மூன்றுதமிழை கேட்கிறார், நாலுபொருளை தருவதாகக்கூறி. இறைவனுக்கு, நாம் விரும்பும் உணவினையெல்லாம், அவன்விரும்பும் உணவுப்பொருள்களாகச் சொல்லி படையலிட்டு…