இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 4 இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆடி 31, 2046 /ஆக.16, 2015 தொடர்ச்சி) 3.] சங்க இலக்கியச் சொல்லடைவு இதில் தேடுபொறி இல்லை. அகரவரிசைப்படி நாம் சொல்லைத் தேடுவதற்கு மாற்றாகச் சொல் தேடுதல் அமைந்தால் எளிதில் பொருள்காண இயலும். நேரம் வீணாவது தடுக்கப்படும். நூற்பக்கங்களில் பக்க எண் தேடல் உள்ளது. 4.] திருக்குறட் சொல்லடைவு ‘திருக்குறட் சொல்லடைவு சொல் தேடல்’ என்னும் தலைப்பு உள்ளது. இதன் மூலம் அகரவரிசையிலான முழுப் பக்கங்களைத்தான் காண இயலும்(பட உரு 20). வேண்டும் சொல்லுக்கான பொருளை எளிதில் காண இயலாது. ஆனால், இதில் பக்க…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 030. வாய்மை

(அதிகாரம் 029. கள்ளாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 030. வாய்மை       தீமை இல்லாதவற்றைச் சொல்லலும், பொய்த்தல் இல்லாது வாழ்தலும்.   வாய்மை எனப்படுவ(து) யா(து)?எனின், யா(து)ஒன்றும்,      தீமை இலாத சொலல்.            எச்சிறு அளவிலேனும், தீமை          இல்லாதன சொல்லலே வாய்மை.   பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த      நன்மை பயக்கும் எனின்.        யார்க்கும் குற்றம்இலா நன்மையான          பொய்யும், வாய்மையின் இடத்தது.   தன்நெஞ்(சு) அறிவது, பொய்யற்க; பொய்த்தபின்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 029. கள்ளாமை

(அதிகாரம் 028. கூடா ஒழுக்கம் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03. துறவற இயல் அதிகாரம் 029. கள்ளாமை உள்ளத்தாலும், பிறரது பொருள்களை எள்அளவும் திருட எண்ணாமை.   எள்ளாமை வேண்டுவான் என்பான், எனைத்(து)ஒன்றும்,      கள்ளாமை காக்க,தன் நெஞ்சு.     இகழ்ச்சியை விரும்பாதான், எந்த        ஒன்றையும் திருட எண்ணான்.   உள்ளத்தால் உள்ளலும் தீதே, “பிறன்பொருளைக்,    கள்ளத்தால் கள்வேம்” எனல்.          “பிறரது பொருளைத் திருடுவோம்”        என்று, நினைப்பதும் திருட்டே..   களவினால் ஆகிய…

அந்தமான் தமிழர்களின் வாழ்வுரிமைச் சிக்கல்களும் -தீர்வுகளும் : கரிகால்வளவன்

  அந்தமான் தமிழர்களின் வாழ்வுரிமைச் சிக்கல்களும் தீர்வுகளும்    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இரண்டாவது பெரிய இனம் நம் தமிழினமாகும். 4 நூறாயிரம் மக்கள் தொகையில் 80,000 பேர் தமிழர்களாவர். உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஒரு காலத்தில் வளர்பிறையாகக் கொடிகட்டிப் பறந்த நம் தமிழருக்கு இன்று தேய்பிறையாகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தமிழகத்தில்உள்ளது போல இங்குத் தமிழுணர்வு மங்கிப் போய்ச் சாதிய உணர்வு மேலோங்கியது. வரலாறு படைத்தவன் தமிழன்   தீவில் 1940-50களில் உண்மையான உள்ளூர்வாசிகள், சிறைக்கைதிகள், ஆங்கிலேயரால் குடியமர்த்தப்பட்டவர்கள் தீவைவிட்டுப் பூர்வீக மாநிலங்களுக்கும்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 028. கூடா ஒழுக்கம்

(அதிகாரம் 027. தவம் தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல்      அதிகாரம் 028. கூடா ஒழுக்கம்   அழுக்கான, கடைப்பிடிக்கக் கூடாத ஒழுக்கக் கேட்டோடு கூடாமை.   வஞ்ச மனத்தான் படிற்(று)ஒழுக்கம், பூதங்கள்      ஐந்தும், அகத்தே நகும்.     வஞ்சகன்தன் பொய்ஒழுக்கம் கண்டு,        மெய்வாய்கண் மூக்குசெவி நகும்.   வான்உயர் தோற்றம் எவன்செய்யும்? தன்நெஞ்சம்,    தான்அறி குற்றப் படின்.     மனம்அறிந்த குற்றத்தார்க்[கு] உயர்தவக்        கோலத்தால் என்ன பயன்?   வலியில் நிலைமையான் வல்உருவம்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 027. தவம்

(அதிகாரம் 026. புலால் மறுத்தல் தொடர்ச்சி)   01. அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 027. தவம்   தம்துயர் பொறுத்தல், துயர்செய்யாமை, தூயநல் அறச்செயல்கள் செய்தல்.   உற்றநோய் நோன்றல், உயிர்க்(கு)உறுகண் செய்யாமை,    அற்றே, தவத்திற்(கு) உரு.        துயர்பொறுத்தல், உயிர்கட்கும் செய்யாமை        தூய தவத்தின் இலக்கணம்.   . தவமும், தவம்உடையார்க்(கு) ஆகும்; அவம்,அதனை    அஃ(து)இலார், மேற்கொள் வது.        மெய்த்தவத்தார் தவக்கோலம் சிறப்பு;        பொய்த்தவத்தார் தவக்கோலம் பழிப்பு.   துறந்தார்க்குத்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 026. புலால் மறுத்தல்

(அதிகாரம் 025. அருள் உடைமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால்               02. துறவற இயல்                 அதிகாரம் 026. புலால் மறுத்தல்   அசைவம் உண்ணாமையும், பிறஉயிர்க் கொலையை எண்ணாமையும் அருள்.   தன்ஊன் பெருக்கற்குத், தான்பிறி(து) ஊன்உண்பான்,      எங்ஙனம் ஆளும் அருள்….?   உடலைப் பெருக்க, உடலுண்பான்        எங்ஙனம் அருளை ஆள்வான்….?   பொருள்ஆட்சி, போற்றாதார்க்(கு) இல்லை; அருள்ஆட்சி,        ஆங்(கு)இல்லை ஊன்தின் பவர்க்கு.   காப்பாற்றாதார்க்குப், பொருளும், புலாலைத்        தின்பார்க்கு, அருளும் இல்லை.   படைகொண்டார்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 025. அருள் உடைமை

(அதிகாரம் 024. புகழ் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03. துறவற இயல்  அதிகாரம் 025. அருள் உடைமை   தொடர்பே இல்லா உயிர்களிடத்தும், தொடர்ந்து படர்ந்திடும் முதிர்அன்பு.   அருள்செல்வம், செல்வத்துள் செல்வம்; பொருள்செல்வம்,      பூரியார் கண்ணும் உள.   அருள்செல்வமே உயர்பெரும் செல்வம்;        பொருள்செல்வம், கீழோரிடமும் உண்டு.   நல்ஆற்றான் நாடி, அருள்ஆள்க; பல்ஆற்றான்      தேரினும், அஃதே துணை.      எவ்வழியில் ஆய்ந்தாலும் துணைஆகும்        அருளை, நல்வழியில் ஆளுக..   அருள்சேர்ந்த நெஞ்சினார்க்(கு) இல்லை, இருள்சேர்ந்த…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 024. புகழ்

(அதிகாரம் 023. ஈகை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 024. புகழ்   அழியும் உலகில், அறம்செய்து, அழியாப் புகழைப் பெறுதல்.   ஈதல், இசைபட வாழ்தல், அதுஅல்லது,      ஊதியம் இல்லை உயிர்க்கு.     கொடுத்தலும், கொடுத்தலால் வரும்        புகழுமே, உயிர்வாழ்வின் பயன்கள்.   உரைப்பார் உரைப்பவை எல்லாம், இரப்பார்க்(கு)ஒன்(று),      ஈவார்மேல் நிற்கும் புகழ்.     புகழ்வார் புகழ்ச்சொற்கள் எல்லாம்,        கொடுப்பார்மேல், வந்து நிற்கும்.   ஒன்றா உலகத்(து), உயர்ந்த புகழ்அல்லால்,…

செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆடி 24, 2046 / ஆக 09, 2015 தொடர்ச்சி) 3    பதவிப்பெயர்கள் அல்லாமல் வேலைத் தேர்ச்சி அடிப்படையிலும் வகைப்பாடு கொண்டு நாம் தொழிலாளிகளைப் பிரிக்கிறோம். வேலையில் முழுமையான தேர்ச்சி அல்லது அரைகுறை தேர்ச்சி அல்லது தேர்ச்சியின்மை என்ற மூன்றின் அடிப்படையில் தேர்ச்சிநிலையையும் தேர்ச்சி நிலைக்குரிய தொழிலாளர்களையும் குறிப்பிடுவர்.   skilled labour     அல்லது skilled worker –  செயல்திற வேலையாள்,  தேர்ச்சியுடைத் தொழிலாள்,  திறமிகு தொழிலாளர்,  தேர்ச்சியுற்ற தொழிலாள், திறமையான தொழிலாளர்,  திறமிகு பணியாளர் எனப்பலவகையாக இப்பொழுது குறிப்பிடுகின்றனர்.  (skilled person …

ஆரியர் மணமுறைகளுள் பெரும்பான்மையான, மணமெனும் பெயர்க்கே பொருந்தாதன – நாவலர் பாரதியார்

தமிழர் திருமண முறை சென்ற 1500 ஆண்டுகளாக ஊறியேற்றிய புதிய ஆரியக்களியால் தமிழர், தமிழையும் மறந்து, முன்னோர் பெருமையும் உரனும் துறந்து, பிறர் நகைப்புக்கு ஆளாயினர். தமிழர் திருமணத்துக்கு எவ்வகைச் சடங்கும் இன்றியமையாததெனப் பண்டைத் தமிழ்மக்கள் கருதவில்லை என்பதற்குப் பற்பல சான்றுகள் பண்டைத் தமிழ் இலக்கியங்களுள் உண்டு. முதற்கண்ணும் எஞ்ஞான்றும் உழுவலன்பே மணத்திற்கும், இல்வாழ்க்கை இன்பத்திற்கும் உரியதொன்றாக இருந்தது. பொருந்தாதனவும் செயற்கையும் ஆகிய ஆரியர் வழக்குகளையும், முறைமைகளையும் தமிழரின் காதல்பற்றிய வழக்குகள், குறிக்கோள்களோடும் இணக்கி வேறுபாடு அழித்து ஒன்றாக்கச் சில பிராமண பிராமணீய இலக்கண…

காதல் வாழ்விற்கு முதன்மை தந்த பழந்தமிழ் மக்கள் – சி.இலக்குவனார்

காதல் வாழ்விற்கு முதன்மை தந்த பழந்தமிழ் மக்கள் தமிழ் இலக்கியப் படைப்புகள் அகம், புறம் என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ள மரபைக் கொண்டுள்ளன. அகம்பற்றிய படைப்புகள் தலைவன் தலைவியின் உளவியல் செயல்பாடுகள் குறித்து அதிகம் வலியுறுத்துகின்றன. அவை பெரும்பான்மையும் உளவியல் ஆர்வம் கொண்டுள்ளன. உணர்வுகள் மேலோங்கி இருக்கக்கூடிய ஒடிசி போன்று அவை ஆழமாகத் தனிநிலையாக விளங்குவன. பொதுவாக அகம் காதல் குறித்தும், புறம் இவற்றின் புறநிலைச் செயல்பாடுகள் குறித்தும் கையாளுவதாகச் சொல்லப்படுகிறது . . . . . . . . ….