இக்கரைக்கு அக்கரை பச்சை! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

இக்கரைக்கு அக்கரை பச்சை! இக்கரைக்கு அக்கறை பச்சையென்று எண்ணியே, இக்கறை படிந்து நிற்கும் கட்சிகளை நம்பியே, திக்கினை இழந்து தமிழர் நட்டாற்றில் தவிக்கிறோம்! சக்கரைக்குள் நஞ்சினை மறைத்து வைத்து ஊட்டியே, சிக்கலின்றித் தமிழனின் சிரம் அறுக்கும் துணிவுடன், மெத்தனத் தனத்துடன் வலம்வரும் பகைவரை, உக்கிரக் கொளுந்துவிட் டுதித்திடுஞ் செந்தீயிலே, இட்டழிக்குஞ் சக்திவாய்ந்த தமிழனுக்குத் தேர்தலில், மொத்தமாக வாக்களித்துத் தலைவனாக ஆக்குவோம்! சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

மதிமலர் வாடாமல் மைவிரல் வாள்வீசு! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

மதிமலர் வாடாமல் மைவிரல் வாள்வீசு! மழலையர் பாலுக்கு அழுது ஏங்க, மறுசிலர் மதுவினால் வயிறு வீங்க, முதியவர் நோய்நீக்கும் மருந்து வாங்க, முடியாமல் முதுமையில் சுருண்டு தூங்க, முடைநாற்ற அரசியல் செழித்து ஓங்க, மங்கையர் மனத்துயர் மேலும் ஓங்கும்! மண்குடிசை வீட்டுக்குள் பாம்புகள் ஓட, மாளிகை முற்றத்தில் தோகைமயில் ஆடும்! மழைவளம் இல்லாமல் மண்வயல் வாட, மந்திரிகள் வீட்டிலோ பொன்னூஞ்சல் ஆடும்! மனநலம் திரிந்துலவி மேன்மக்கள் வாட, மணிமுடி தரித்தவர் மீத்தேனை நாட, மட்கலம் போலுடைந்து நொறுங்கும் தமிழா! மதிமலர் வாடாமல் எழுந்து வா!…

கட்டாயம் காலி – தமிழ்சிவா

கட்டாயம் காலி   “காதலில் தோற்றுப் போன உழவோர் சாதலைத் தேர்ந்து சட்டென மாய்ந்தார்” திருவாய் மலர்ந்தருளி தித்திக்கும் தனது கண்டு பிடிப்பை எத்திக்கும் புகழ்மணக்க எடுத்துக் கூறிய எழில்மிகு ஆட்சியில் கல்வி கடைச்சரக்கு உண்மை உண்மை காவிக்கு முதலிடம் முற்றும் உண்மை சிறுமையே பெருமையும் சிறப்பு மாகும் நிலத்தைக் கையகப் படுத்தி நாட்டின் வளத்தைக் கயவர் கையில் கொடுத்து நெஞ்சம் நிறைவு கொள்ளவே நாளும் வித்தைகள் காட்டும் வித்தகர் வாழ்க! உள்ளே குப்பையும் வெளியே தூய்மையும் கொண்ட “கோ”மகன் வாழி! வாழி! கண்டெடுத்த…

அரசியல் மந்திரம் கற்போம்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

அரசியல் மந்திரம் கற்போம்! தகதிமிதோம்! தகதிமிதோம்! அரசியல் மந்திரம் கற்போம்! தமிழகங் காக்கத் துடித்தெழுந்து, தரங்கெட்ட அரசியல் மாய்ப்போம்! தகதிமிதோம்! தகதிமிதோம்! விரைவினில் மாற்றம் காண்போம், மிகமிகும் மனதின் சீற்றங்களால், சுகம்மிகும் மாற்றம் காண்போம்! தவறென்று தெரிந்தும் திருந்தாத, துரியோ தனகுணத் தலைவர்களும், துச்சா தனகுணத் தடியர்களும், தமிழன்னை மடியில் கைவைத்து, துகிலினை உரித்துத் தெருவில் நிறுத்தி, தொடைதட்டிப் பங்கம் செய்யும் பொழுதும், தலைகுத்தி நின்றால் தாரணி பழிக்கும்! தமிழன்னை சாபம் நம்மை அழிக்கும்! தகதிமிதோம்! தகதிமிதோம்! தீந்தமிழ் நாட்டைக் காப்போம், நெருப்புடன் மோதும்…

இப்படியும் உண்டோ? -தமிழ்சிவா

இப்படியும் உண்டோ?   எங்கள் ஊரில் கடற்கரைக் குதிரைக்கு இலையாய் இறக்கை முளைக்கும், நட்பே! உங்கள் ஊரில் அப்படி உண்டா? எங்கள் நாட்டில் பேய்மழை பெய்தால் ஏரியைத் திறந்து விட்டுக் கொள்(ல்)வோம் உங்கள் நாட்டில் இப்படி உதவலுண்டா? வண்டி வண்டியாய்த் த(வ)ந்த பொருளின்மேல் வருத்தமே படாமல் படத்தை ஒட்டுவோம் பச்சைக் குழந்தைக்கும் பச்சை குத்துவோம் தேரின் சக்கரத்தில் விழுந்த கன்றாய் ‘காரின்’ சக்கரத்திலும் விழுவோம் நன்றாய் இருக்கும் திசைநோக்கி இங்கிருந்தே வணங்குவோம் சிரிக்கும் குழந்தையாய் எரிக்கும் வெயிலை ஏற்று செத்துப் போவதையும் சிரமேற் கொள்வோம்!…

நெளவிய ஆட்சி நலமுடன் மலரும்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

நெளவிய ஆட்சி நலமுடன் மலரும்!   ஒவ்வொரு முறையும் இம்முறை யாவது, செவ்விய நல்லாட்சி அமையும் என்றெண்ணி, இங்கொரு முறையும் அங்கொரு முறையும், அவ்விய வாக்கினை அளித்து ஏமாந்து, கவ்விய இருளில் கலங்கும் தமிழா! செந்தமி ழுணர்வுடன் தமிழர் ஒன்றாகி, ஒன்றுக்குப் பலமுறை சிந்தித்து வாக்கினை, இம்முறை சரியாய் அளித்தால் உடனே, நெளவிய ஆட்சி நலமுடன் மலரும்! [நௌவிய = நவ்விய  = அழகிய] சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

துளிப்பாக்கள் – தமிழ் சிவா

துளிப்பாக்கள்   வற்றாது ஓடும் இளைஞர்கள் சங்கமிக்கும் கூவம் மதுக்கடை!   துருத்தி நின்றன எலும்புகள் இறந்து கிடந்தது ஆறு!   நச்சு நாசியைப் பிளக்க கலங்கிக் கையற்று நின்றது காற்று!   குடிசைக்குள் புகுந்த அமைச்சர் கண்கலங்கினார் அடுப்புப்புகை!   அடுத்த அறிவிப்பு மதுக் கடையிலேயே இறப்பவர்க்குப் பிதைக்கப் பணம் இலவசம்!   எந்தக் கடவுளிடமும் சிறைமீட்க வேண்டுமென்று யாகம் நடத்துவதில்லை ஐந்தறிவுகள்!   வழக்கில் தோல்வி பயந்து வாழ்ந்தன பேருந்துகள்!   காக்கும் கடவுள் உடைந்து போனார் தீர்ப்பு நாளன்று!  …

பயனில்லாரைத் தெரிவது தொல்லை! – கெர்சோம் செல்லையா

பயனில்லாரைத் தெரிவது தொல்லை! ஏழ்மை ஒழிப்பே நோக்கு என்பார்; ஏழையை ஒழிக்கவே நோக்குகின்றார்! ஊழல் இல்லா ஆட்சி என்பார்; ஊதிப் பெருக்கவே ஆளுகின்றார்! வாழ வைக்கும் தலைவரும் இல்லை; வறுமையை ஒழிக்கும் தலையும் இல்லை! பாழாய்ப் போனது தேர்தல் இல்லை; பயனில்லாரைத் தெரிவதே தொல்லை! -கெர்சோம் செல்லையா

நல்லதை நாட்டுவதே நம்பணி! – தமிழ்சிவா

நல்லதை நாட்டுவதே நம்பணி! மஞ்சள் நிறத்தொரு பூனை        மக்களை ஏமாற்றும் பாரீர் கொஞ்சல் மொழிகள் பேசி        நெஞ்சம் பிளக்கும் பாரீர்!! சந்தியில் தமிழன் சாகும்போதும்        சத்தியம் வெல்லுமெனும் பாரீர்! முந்தியது என்றாலும் அதன் முகத்தையே மாற்ற வேண்டும்! பச்சை நிறத்தொரு பூனை        பாரில் வளருது பாரீர்! இச்சை கொண்டது அப்பூனை        ஈடிலாப் பதவி மேலே! நச்சைக் கொணர்ந்து ஊட்டும்        நல்ல திறமை அதற்குண்டு! எச்சில் என்றே நினைக்கும்        யாரையும், எடுத்தெறிய வேண்டும்! மாம்பழம் தின்றிடும்…

கறைபடிந்த தமிழகத்தின் அரசியலை மாற்றுங்கள்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

உள்நோக்கம் கொண்டுசில ஊடகங்கள் செயலாற்றி, முள்நீக்கும் பணிமறந்து மூடருக்குத் துதிபாடி, பல்லாக்குத் தூக்குவதில் பரமசுகம் கண்டு, கள்ளாட்டம் ஆடுகின்ற கயவர்களைத் தலைவரென்று, சொல்லாற்றல் கொண்டுபேசித் தமிழர்களின் மனம்மாற்றி, எல்லோர்க்கும் தெரியும்படி எளியனை ஏமாற்றும்! நண்பர்களே! கடைக்கோடித் தமிழனுக்கும் உண்மைகளைக் கொண்டுசெல்ல, கற்றறிந்த தமிழர்களே, உடனெழுந்து வாருங்கள்! இடைத்தரகர் போலின்றி இதயமொன்றி இப்பணியை, இன்முகமாய்ச் செய்திடலாம் இளைஞர்களே வாருங்கள்! உடைத்தெறிந்து ஊடகங்கள் செய்யுமிந்த மாயைகளை, உயிர்சிலிர்த்துப் பாமரர்க்குப் புரியும்படி உரையுங்கள்! இமைக்காமல் உறங்காமல் இருபொழுதும் எப்பொழுதும், நமைக்காக்கும் நல்லரசை அமைக்கும்வழி என்னவென்று, சளைக்காமல் சிந்தித்துச் சகலருக்கும்…

கூரிய ஆயுதமது கைவிரல்தான்! – சச்சிதானந்தன் தெய்வசிகாமணி

கூரிய ஆயுதமது கைவிரல்தான்! காரியம் முடிந்தவுடன் கைகழுவும் கயவர்மேல், காரி உமிழ்ந்தாலும் தவறில்லை உமிழுங்கள்! சீரிய சிந்தனையில் சமநிலையைக் கொள்ளுங்கள், சீறிடும் கோபத்தை நெஞ்சுக்குள் வையுங்கள், கூரிய ஆயுதமது கைவிரல்தான் காணுங்கள், குறிவைத்துச் சரியாக அதைநீங்கள் பாய்ச்சுங்கள், வீரியம் இல்லாத விதைகளை விலக்கிவிட்டு, வறுமையை நீக்கும்நல் விதைகளை விதையுங்கள்! திராவிடன் தமிழனெனும் வாதத்தைக் கடந்து, தீரமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட நல்ல, தூயவன் யாரென்று தெளிவாக உணருங்கள்! தயக்கம் இல்லாமல், தாமதம் செய்யாமல், தமிழர்க்குத் தலைவனென அவனை ஆக்குங்கள்! சச்சிதானந்தன் தெய்வசிகாமணி

தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! – (உ)லோக நாதன்

தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! தமிழே ஆதித் தாயே வாழ்க! தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! தமிழ் நாட்டுக்கும் பிற நாட்டுக்கும் அமிழ்தாய் அமைந்த ஐயா வாழ்க! ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப் பாரில் தமிழன் நானே என்னும் சீரைத் தந்த தமிழே வாழ்க! ஓரா உலகின் ஒளியே வாழ்க! (உ)லோக நாதன்