பூங்கொடி 16 – கவிஞர் முடியரசன்: உலுத்தர் தொல்லை

(பூங்கொடி 15 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல்- தொடர்ச்சி) பூங்கொடி உலுத்தர் தொல்லை கடைத்தெரு வழியே காரிகை தனியாய் ஏகின் சிற்றினம் எதம் விளைக்கும் ;    50 நாகிளம் பருவ நல்லியல் மாதர் உறுதுணை யின்றி ஊரில் வெளிச்செலின் நரியென வேட்டை நாயெனத் தொடர்ந்தே ஊறுகள் செய்யும் உலுத்தர் பல்கினர் மக்கட் பண்பு மங்குதல் கண்டோம்           55 தெக்கணம் இப்படித் தேய்வது நன்றாே ? அல்லியின் வரலாறு வளநகர் ஈங்குநான் வந்தது கேளாய் களமர் கெழுமிய கண்கவர் பொழில்சூழ் மயில்நகர்…

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 16 : கோயில் தருமகருத்தாவாக வேலைபார்த்தது

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 15 : 55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம் – தொடர்ச்சி) 9. நான் கோயில் தருமகருத்தாவாக வேலைபார்த்தது எனக்கு ஞாபக சக்தி உ.தித்த காலமுதல், சாதாரணமாக என் விளையாட்டெல்லாம் பெரும்பாலும் பிள்ளையார், மீனாட்சி அம்மன், வெங்கடேசப் பெருமாள் இவர்களுடைய செப்பு அல்லது மர விக்குரகங்களை வைத்து அவற்றுக்கு அலங்காரம் செய்து, உற்சவம் செய்வதேயாம். சனிக்கிழமை வந்தால், முன்னாள் வெள்ளிக்கிழமை என் தாயார் விசேட பூசை செய்த பூக்களை வைத்துக்கொண்டு நான் என் நேர் மூத்தவராகிய ஆறுமுகத்துடன் சாமி தூக்கி…

பூங்கொடி 15 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல்

(பூங்கொடி 14 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகை – தொடர்ச்சி) பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல் பூங்கொடி கண்ணிர் புத்தகம் நனைத்திட ஆங்கது கண்ட அருண்மொழி வெதும்பிக் கண்ணிர் மாற்றிக் கவலையை ஆற்ற எண்ணினள் குறுகி, ஏனோ கலங்கினை? மக்கள் கலக்கம் மாற்றிடல் ஒன்றே  25 தக்கதென் றெண்ணிச் சார்ந்தனம் ஈண்டு ; நாமே கலங்குதல் நன்றாே ? நம்பணி ஆமோ பூங்கொடி! அவலம் விட்டொழி மலர்வனம் சென்று மாற்றுக் கவலை அலர்பூங் காவுள் ஆறுதல் கிட்டும் ; 30 பூம்பொழில் தந்திடும்…

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 15 : 55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம்

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 14 : முதிர்பருவம் – தொடர்ச்சி) ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 1928-ஆம் வருடம் பிப்பிரவரி மாதம் முதல் தேதி முதல் நான் அரசு வேலையிலிருந்து விலக வேண்டி வரும் என்று முன்பே அறிந்திருந்தபடியால் அதற்காக அது முதல் என் வாழ்நாட்களை எப்படி கழிப்பது என்று ஒரு தினசரிப் பட்டி ஏற்படுத்திக்கொண்டேன். அதை எழுது முன் எனது நண்பர்களில் பலர் நீ ஏன் மறுபடியும் வழக்குரைஞராகப் பழகலாகாது என்று என்னைக் கேட்டிருக்கின்றனர். அன்றியும் சனவரி மாதம் 31-ஆந்தேதி என்…

பூங்கொடி 14 – கவிஞர் முடியரசன்: பூங்கா புக்க காதை : பூங்கொடி அழுகை

(பூங்கொடி 13 – கவிஞர் முடியரசன்: அடிகளார் அறிவுரை – தொடர்ச்சி) 3. பூங்கா புக்க காதை பூங்கொடி அழுகை தேன்மொழிக் கருண்மொழி செப்பிய துயருரை ஆன்றரு பாலெனும் அருட்பா திளைத்திடும் பூங்கொடி செவியிற் புகுந்தது ; புகுதலும் ஓங்கிய பெருவளி உற்றிடு துகிற்கொடி படபடத் தாலெனப் பகைத்தனள் நெஞ்சம்;  5 மடமை யகற்ற மனங்கொளீஇ நிலத்துக் கடமை யாற்றுழிக் கைதவ மாங்கரால் பெற் றோ ரீங்குப் பட்டவெந் துயரால் உள்ளிற் புண்ணாய் உருகிய குருதி வெள்ளப் புனலாய் விழிவழி வழிந்தது;   10 கண்ணீ…

பூங்கொடி 13  – கவிஞர் முடியரசன்: அடிகளார் அறிவுரை

(பூங்கொடி 12  – கவிஞர் முடியரசன்: வடிவேல் படுகொலை- தொடர்ச்சி) பூங்கொடி அடிகளார் அறிவுரை மாதே! பிறப்பும் மாய்வும் இயற்கை 80யாதே முயலினும் தடுத்திடல் அரிதே’ பெறலருங் கொழுநன் பிணியால் மாண்டிலன் பிறரெவ ரும்பெறாப் பெருநிலை பெறவே ஆருயிர் ஈங்கனன் அவனேர் வீரன்; வீரப் பெருமகன் விடுபணி தொடர்ந்து 90 புரிந்தனி ராயின் பொருந்திய துயரம் முறிந்திடும்; அவனுளம் நிறைந்திடும் ஆதலின் முயன்றுறு செல்வம் முத்தமிழ்க் கல்வி உயர்ந்திட உதவுக, உழைப்பும் நல்குக, உழைப்பினை உதவுக கோவிலில் தமிழொலி குடிபுக வேண்டி 95 மேவிய…

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 13 : வழக்குரைஞராக வேலை பார்த்தது 2/2

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 12 : வழக்குரைஞராகவேலைபார்த்தது தொடர்ச்சி) ‘என் சுயசரிதை’ 13 : வழக்குரைஞராக வேலை பார்த்தது 2/2 இப்படிச் சொல்வதினால் சில கட்சிக்காரர்கள் என்னை விட்டு அகன்றபோதிலும் நான் எடுத்துக்கொண்ட வழக்குகளில் பெரும்பாலும் வெற்றி பெற்றதனால் நீதிமன்ற நீதிபதிகளுக்கு என்னிடம் ஒரு மதிப்பு உண்டாயிற்றென்றே சொல்ல வேண்டும். சில சமயங்களில் நான் உண்மையை அறியாத சில தப்பான வழக்குகளை நடத்திக்கொண்டு வருகையில் இடையில் இது பொய் வழக்கு என்று கண்டறிந்தால் நீதிமன்றத்தில் நடவடிக்கையை நடத்திவிட்டு முடிவில் தொகுப்புரை (Sum up)…

பூங்கொடி 12  – கவிஞர் முடியரசன்: வடிவேல் படுகொலை

(பூங்கொடி 11  – கவிஞர் முடியரசன்: வள்ளி குறிக்கோள் வாழ்வினள்- தொடர்ச்சி) பூங்கொடி பழியுரை காதை வடிவேல் படுகொலை ஆங்ஙனம் அன்றியும் அரும்பெறற் காதலர், நிலத்தினில் மடமை நிறைந்திடல் கண்டு பகுத்தறி வூட்டும் பகலவன் ஆவர் ; 70 சொல்லின் செல்வர், சோர்விலர், தொண்டர், அல்லும் பகலும் ஆருயிர்த் தமிழே வெல்லும் வகையால் வீரம் விளைத்தவர்; நல்லவர் இவரை நரிக்குணம் விஞ்சிய கொல்லும் பகைக்குணம் கொண்டோர் ஒருசிலர் 75 தூண்டுதல் செய்யத் துணிவுடன் கூடி நீண்ட புளிமரக் கிளைதனில் நேயரை அந்தோ தூக்கி ஆருயிர்…

பூங்கொடி 11  – கவிஞர் முடியரசன்: வள்ளி குறிக்கோள் வாழ்வினள்

(பூங்கொடி 10  – கவிஞர் முடியரசன்: ஊரார் பழிமொழி- தொடர்ச்சி) பூங்கொடி பழியுரை காதை வள்ளி குறிக்கோள் வாழ்வினள் அவர்முதன் மனையாள் அரும்பெறல் வள்ளி, எவர்துயர்ப் படினும் எழுந்துடன் சென்று 50 துன்பம் நீக்கலில் இன்பங் கொள்வாள்; என்பும் பிறர்க்கே எனுங்குறி வாழ்வினள்; பொதுநலத் தொண்டே புந்தியிற் பதிந்தவள்; எதுசரி என மனம் ஏற்குமோ அதனைத் துயர்பல நேரினும் துணிவுடன் ஆற்றும் 55 அயர்விலாக் கணவர் அரும்பணிக் கியைந்தவள்; அடிமை வாழ்வில் அருவருப் புற்று விடுதலை வேட்டு வீறுற் றெழுந்த நல்லவன் ஒருவனை நாய்மகன்…

பூங்கொடி 10  – கவிஞர் முடியரசன்: ஊரார் பழிமொழி

(பூங்கொடி 9  – கவிஞர் முடியரசன்: அருண்மொழியின் இசைப்புலமை- தொடர்ச்சி) பூங்கொடி பழியுரை காதை ஊரார் பழிமொழி இசைத்தொழில் புரியும் இவள் இத் தொழிலை வசைத்தொழில் என்று வெறுத்திடல் என்கொல் ? 35செருக்கினள் கொல்லோ செல்வம் மிகவாய்ப் பெருக்கினள் கொல்லோ ? என்றுரை பேசி ஏளனம் செய்தனர் என்ற கேன்மொழிக்கு அருண்மொழி அலருக்குக் கூசாமை அருண்மொழி நகைத்தனள் அருளினள் சிலசொல்; பொதுப்பணி புரிவோர் புகழ்வும் இகழ்வும் 40 நினைத்திடல் வேண்டும் ஒருநிகர் எனவே; ஆருயிர்த் தோழி! அந்நாள் வடிவேற் பேருடைச் செம்மலைப் பேணிஎன் காதற்…

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 10 : தாய் மரணம்

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 9 தொடர்ச்சி) ‘என் சுயசரிதை’ 10 : தாய் மரணம் முதலில் துக்ககரமானதைப்பற்றி எழுதுகிறேன். இவ் வருசம் செப்டம்பர் மாதம் 10-ஆந்தேதி என் தெய்வத்தின் ஒரு கூறான என் தாயார் திடீரென்று வாந்திபேதி கண்டு சிவலோகப் பிராப்தி அடைந்தார்கள். இது பகற்காலத்தில் வானம் களங்கமில்லாமலிருக்கும்போது இடி விழுந்தது போல் என்னை மகத்தான துயரத்தில் ஆழ்த்தியது. இனி நமக்கு இவ்வுலகில் சந்தோசமே கிடையாதென்று நினைத்தேன். ஆயினும் சற்றேறக்குறைய மூன்று மாதத்திற்குள் அவர்கள் இறந்ததே நலம் என்று சந்தோசப்பட்டேன். இதற்குக் காரணம்…

பூங்கொடி 9  – கவிஞர் முடியரசன்: அருண்மொழியின் இசைப்புலமை

(பூங்கொடி 8  – கவிஞர் முடியரசன்: பழியுரை காதை: வஞ்சியின் கவலை- தொடர்ச்சி) பூங்கொடி பழியுரை காதை அருண்மொழியின் இசைப்புலமை  செவ்விய இசைநூல் இவ்வுல குள்ளன அவ்வள வும்பயில் அறிவினள்; பிறமொழி 20 இசைபல முயன்று வசையற வுணர்ந்து நசையுடன் ஆய்ந்து நம்தமிழ் இசைக்கே ஆக்கம் தந்தவள்; அரியதோர் இசைப்புனல் தேக்கிய கலைக்கடல்; தெள்ளிய இசையால் உலகை வென்றவள்; உயர்ந்தவள் குரலால் 25 குழலும் யாழும் கொட்டம் அடங்கின; பாடும் முறையாற் பாவை பாடுவள்; ஆடாள், கோணாள், அங்கக் குறும்புகள் நாடாள், அந்த நல்லிசைச்…