நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 2/3 – நாகலட்சுமி சண்முகம் : சந்தர் சுப்பிரமணியன்

(நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 1/3 தொடர்ச்சி)   நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்!   2/3 நீங்கள் மொழிபெயர்த்த நூல்களின் எழுத்தாளர்கள் – அப்துல் கலாம் தவிர – மற்றவர்கள் அமெரிக்க எழுத்தாளர்கள் இல்லையா? ஆம்! எனினும், அண்மையில் இந்திய எழுத்தாளரான ஆனந்த நீலகண்டன் அவர்களின் ‘அசுரா’ என்ற புதினத்தை ‘அசுரன்’ என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளேன். இது இராவணனின் கண்ணோட்டத்தில் இராமாயணம் குறித்த நூல். பொதுவாக, தன்முன்னேற்ற நூல்கள் கட்டுரைகளாக வரும். புதினம் என வரும்பொழுது, மொழியாக்கத்தில் அதில் வரும் அத்தனைப் பாத்திரங்களின்…

யாதும் ஊரே யாவரும் கேளிர் 4/8 – கருமலைத்தமிழாழன்

(யாதும் ஊரே யாவரும் கேளிர் 3/8 – தொடர்ச்சி) யாதும் ஊரே யாவரும் கேளிர் 4/8   காடுகளாய்    நம்முன்னோர்    வளர்த்து   வைத்துக் கவின்மிகுந்த    மரங்களினை    வெட்டி   வெட்டிக் கோடுகளாய்    மண்ணுடலைப்    பிளக்க   வைத்துக் கொட்டிவந்த    மழைவளத்தை    அழித்த   போல வாடுகின்ற   பயிர்கண்டு   வாட்டம்    கொண்ட வள்ளலாரின்    மனிதநேயம்    அழித்து   விட்டோம் பாடுபட்டு    யாதும்ஊர்   என்ற   பண்பைப் பாதுகாத்துத்    தந்ததனைத்    தொலைத்து   விட்டோம் !     பக்கத்தில்   குடியிருப்போர்   முகத்தைக்    கூடப் பார்க்காமல்    வாழுகின்ற   வகையைக்    கற்றோம் துக்கத்தில்   துடிப்போரின்   குரலைக்    கேட்டும்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு) இன்னா செய்தாரை இனிமைச் செயல்களால்  ஒறுத்தல் நன்றென உரைத்த பொருளுரை  படித்து மேடையில் பாங்காய்ப் பொழிந்தும்  தமிழ்நலம் நாடிய தகைசால் உரையைப்  பொறுக்கலா ற்றாது வெறுக்கும் இயல்பால்  அரசின் சார்பில் அளிக்க இருந்த  பரிசைத் தடுத்த பரிசை  என்னென  நற்றமிழ்நாடே நவில்க! நற்றமிழ்த்  தொண்டு புரிதல் துயர்க்கே  கூட்டும்  தமிழ்ப் பகைத்தோர் தள்ளினர் சிறையில்  தமிழின் பேரால் தகுநிலை அடைந்தோர்  தமிழ்ப் புகழ்பாடினும் தமிழை அடக்கி  வாழவே முனையும் வன்கண்மையால்  இழக்கச்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (13) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (12) –  தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (13)   நாட்டில் வீண் பேச்சுப் பெருகி விட்டது. பேச்சைக் குறைத்து செயலைப் பெருக்க வேண்டும் என்பதையும் கவிஞர் அறிவிக்கிறார். ஆண்மைசால் பேருழைப்பை அன்னை நம் நாட்டுக்காக்கி,  வீண்பேச்சைக் குறைத்துத் தீய வீணரை ஒழித்தே அன்பாம் காண்தகு நிலைகள் எல்லாம் கடும் உழைப் பொன்றால் என்ற மாண்பெழில் கொள்கை வெல்லும்  வரலாறு படைக்க வேண்டும்! முன்னேற்றம் காண்பதற்கு ஒற்றுமை அவசியம். மக்களின் சக்தியை ஒன்று திரட்ட வேண்டுவதும் அவசிய…

மறக்கமுடியுமா? – ‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம்(பிள்ளை) :- எழில்.இளங்கோவன்

மறக்கமுடியுமா?   ‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம்(பிள்ளை) கன்னியாகுமரி மாவட்டம் நாஞ்சில் நாடுதான் இவரின் சொந்த ஊர். தொழில்  தொடர்பாக, நாஞ்சில் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து, கேரளம் மாநிலம் ஆலப்புழையில் குடியேறியவர்கள் பெருமாள்பிள்ளை, மாடத்தியம்மாள்  இணையர். இவர்களின் மகனாக ஆலப்புழையில் பங்குனி 23, 1886 / 1855ஆம் ஆண்டு ஏப்பிரல் 4ஆம் நாள் பிறந்தவர் ‘மனோன்மணீயம்’ பெ.சுந்தரம்(பிள்ளை). தமிழ் மொழி இயல், இசை, கூத்து என மூன்று பிரிவுகளைக் கொண்டது. கூத்து என்பது நாடக வடிவத்தின் பெயர். நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற…

உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 1/3 – சந்தர் சுப்பிரமணியன்

உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் முனைவர் கே.எசு.சுப்பிரமணியன் 1/3    [தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற முனைவர் கே.எசு.சுப்பிரமணியன் அவர்களுடன் ‘இலக்கியவேல்’ ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட நேர்காணலின் எடு பகுதி.] வணக்கம்! அண்மையில் உங்களுக்குத் தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதற்காக, ‘இலக்கியவேல்’ சார்பில் வாழ்த்துக்கள்! அந்த விருது உங்களுடைய ஒட்டுமொத்த மொழிபெயர்ப்புச் சேவைக்காக வழங்கப்பட்டதா அல்லது ஒரு தனிப்படைப்பிற்கு வழங்கப்பட்டதா? நன்றி! இவ்விருது என்னுடைய ஒட்டுமொத்தமான பங்களிப்புக்காக வழங்கப்பட்டது….

நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 1/3 – நாகலட்சுமி சண்முகம்

நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 1/3  தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களுடன் ‘இலக்கியவேல்’ ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட நேர்காணல்.   வணக்கம்! அண்மையில் உங்களுக்குத் தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்டதற்கு ‘இலக்கியவேல்’ சார்பில் வாழ்த்துகள்! அந்த விருது குறித்துச் செய்திகளைச் சொல்லுங்களேன்! வணக்கம்! பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புப் படைப்புகளை ஆக்கும் படைப்பாளிகளுக்கான இவ்விருது ஆண்டுதோறும் ஒருவருக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. அரசின் செய்திக்குறிப்பைப் பார்த்துவிட்டு இதற்காக…

மத்தியப் பாடத்திட்டம் தமிழக நலனுக்கு எதிரானது! – இலக்குவனார் திருவள்ளுவன்

மத்தியப் பாடத்திட்டம் தமிழக நலனுக்கு எதிரானது!   இந்திய அரசியல் யாப்பின் இணைப்புப்பட்டியல் 7 இன்படி மத்திய மாநில அரசின் அதிகாரங்கள் குறித்து அ.) ஒன்றியப்பட்டியல், ஆ.) மாநிலப்பட்டியல்,  இ.) பொதுப்பட்டியல் என 3 பட்டியல்கள் உள்ளன. தொடக்கத்தில் மாநிலப்பட்டியலில் இருந்த துறைகள் 66. அதில் இருந்து ஒவ்வொன்றாகப் பிடுங்கப்பட்டு வருகிறது. கல்வித்துறை மாநில அரசின் அதிகார வரம்பில் வரிசை எண் 11இல் இருந்தது. அதனைப் பொதுப்பட்டியலாக்கி மத்திய அரசின் அதிகார வரம்பிற்குக் கொண்டுவந்தபொழுதே பலரும் எதிர்த்தனர். இதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மாநிலக்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (12) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (11) –  தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (12) 3.ஒருமைப்பாட்டு உணர்வு – தொடர்ச்சி   அடிமையில் மோகமும், அடிமைத்தனமும் ஒழிக்கப் படவேண்டும். அதற்கு மக்கள் விழிப்பும் எழுச்சியும் பெற்றாக வேண்டும். கொடுமைகள் நீக்கிக் கொள்கைகள் காத்து பெரிய முன்னேற்றம் ஆக்கி, விந்தைகள் நிலைக்கச் செய்து, வெற்றி மேல் வெற்றி சேர்த்து, தந்தையர் நாட்டை ஏற்றம்தனில் நிலை நாட்டி வைப்போம் என்று முழக்கமிடுகிறார் பெருங்கவிக்கோ. பாரினில் பாரதம் மேன்மை பெற்று விளங்க நாட்டில் உற்பத்தி பெருக வேண்டும்;…

யாதும் ஊரே யாவரும் கேளிர் 2/8 – கருமலைத்தமிழாழன்

யாதும் ஊரே யாவரும் கேளிர் 2/8 தலைவர் வணக்கம் நூலகராய்த்   தம்வாழ்வைத்   துவக்கி   நல்ல நூலாக   வாழ்பவர்தாம்   மோகன   ரங்கம் காலத்தை    வெல்கின்ற   கவிதை  நெய்து கவின்வனப்பைத்   தமிழுக்குச்   சேர்க்கும்   பாவோன் கோலத்தில்   எளிமையொடு   அரவ   ணைப்பில் கோப்பெருமான்   பிசிராந்தை   நட்பின்   பண்போன் மூலத்தொல்   காப்பியத்து   நூற்பா   போன்று முத்தமிழைக்   காப்பவர்தாம்   ஆலந்   தூரார் !   கவிதையொடு   நாடகங்கள்   புதினம்   என்று கருத்தான   படைப்புகளை   நாளும்   படைப்போன் நவிலுமாறு   சிறுகதைகள்   குறும்பா   என்று நாட்டோர்கள்   புகழுமாறு   படைத்த  ளிபோன் கவிதையிலே   நாடகத்தைச்   சிறுவர்க்  …