சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 166-170

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 161-165- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 166-170 166. Abrogate (வினைச்சொல்)   வழக்கொழியச் செய்  வழக்கறு;  அழி ; நீக்கு ; திரும்பப்பெறு முடிவு கட்டு   நடைமுறையிலுள்ள விதியையோ சட்டத்தையோ பயன்முறையையோ செயல்பாட்டிலுள்ள எதையோ வழக்கொழியச் செய் அல்லது அதற்கு முடிவு கட்டு           167. Abrogation (பெயர்ச்சொல்) தவிர்த்தல் வழக்கொழித்தல்சட்ட நீக்கம் சட்டத்திருத்தம்   அதிகார பூர்வமாக இரத்து செய்(தல்) என்பர். இரத்து தமிழ்ச்சொல்லல்ல. இரத்து செய் என்னும் இரு கலப்புச் சொற்களுக்கு…

தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பாராட்டு – இலக்குவனார் திருவள்ளுவன்

  தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பாராட்டு நடிகர் விசய் அரசியலில் முழுமையாக ஈடுபட முடிவெடுத்துத் தனக்கான கட்சியைத் தொடங்கி  அறிவிப்பையும் வெளியிட்டார். அவர் தொடங்கியுள்ள கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்தையும் “தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகள்” என ‘அகரமுதல’ இதழுரை வாயிலாகத் தெரிவித்து இருந்தோம். அதில், “தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் வெற்றி, கழகம் ஆகிய சொற்கள் இடையே ஒற்று மிகுந்து வர வேண்டும். முதல் கோணல் முற்றும் கோணல் ஆகிவிடக்கூடாது. எனவே, தொடக்கத்திலேயே இதனைத் திருத்திப் பயன்படுத்த வேண்டுகிறோம்.  முகவரியைத்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 37 : பூங்கொடிக்கு வரவேற்பு

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 36 : கோமகன் மறுமொழி – தொடர்ச்சி) பூங்கொடி பூங்கொடிக்கு வரவேற்பு அழகிய அல்லி மலையுறை யடிகள் அருண்மொழி முதலோர் அன்புடன் விடைதரச்             சுருளலை எழுப்பும் கருநிறக் கடலுள், பகைபிளந் தோடும் பான்மையன் போல மிகுபுனல் பிளந்து மிதந்து விரையும் மரக்கலம் ஏறி, மணிநீர்க் கடல்தன் புறத்தினில் சூழ்தரல் போன்று மடமை      45           அகத்தினில் சூழ்தர அல்லற் பாடுறும் கடல்நகர்த் துறைமுகம் கண்டனள்; ஆயிடை மடமை துடைக்கும் மனமுளோர் குழுமி   50 பூங்கொடிக்கு வரவேற்பு          …

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1066-1070

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1061-1065 – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1066-1070 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) தொகுப்பு : ஏ. கே. செட்டியார்★ (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 161-165

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 156-160 – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 161-165 161. Abridged edition சுருக்கப் பதிப்பு   புத்தகத்தின் சுருக்கப்பட்ட பதிப்பாகும். இது முழுமையான நூலல்ல. எனினும் படிக்க நேரமில்லாவிட்டாலும் புத்தகத்தைப் படிக்க ஆர்வம் உள்ளவர்களுக்குச் சுருக்கப்பட்ட பதிப்பு உதவியாக இருக்கும். கதையோ புதினமோ கட்டுரையோ நாடகமோ நூலின் சுருக்கமாக இருப்பினும் நூலின் அடிப்படைக் கருத்துகள் வெட்டப்படாமலும் நூலோட்டம் சிதையாமலும் இருக்கும். ( அல்லது இருக்க வேண்டும்.) 162. Abridged form சுருங்கிய வடிவம்  …

பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 6/7 – – இலக்குவனார் திருவள்ளுவன்

(பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 5/7 – இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம் சென்னை வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 6/7 Act Of Legislature – சட்டமன்றச் செயன்மை மாநிலங்களின் சட்டப் பேரவைகளால்(சட்டமன்றக்கீழவை, மேலவைகளால்) இயற்றி ஏற்கப்பெறும் செயன்மைகளைக் குறிக்கும். இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயன்மை என்பதாகும். Act of misconduct – தீய நடத்தை தனித்தோ பிறருடன் சேர்ந்தோ…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 75 : அன்னபூரணி

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 74 : புலமையும் அன்பும் – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-45 தொடர்ச்சி அன்னபூரணி ஆசிரியரது அன்பைப் பற்றி நினைத்துக் கொண்டே இராமையருடன்அவர் அழைத்துச் சென்ற வீட்டுக்குள் நுழைந்தேன். “அன்னபூரணி” என்றுஇராமையர் தம் தமக்கையை அழைத்தார். பலசமயங்களில் சாதாரணமாகத் தோற்றும் சில நிகழ்ச்சிகள் முக்கியமான சில சமயங்களில் மனத்தில் நன்றாகப் பதிந்து விடுகின்றன. என் நிலையையும் என் பசியறிந்து உணவுக்கு ஏற்பாடு செய்யும் என் ஆசிரியர் அன்பையும் நினைத்தபடியே மற்ற விசயங்களை மறந்திருந்த எனக்கு “அன்னபூரணி” என்ற அப்பெயர் ஏதோ நல்ல…

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 3 : இசைக்கருவிகள்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 2 : தமிழர் படைத்திறம் – தொடர்ச்சி) தமிழர் வீரம் இசைக்கருவிகள் போர்க்களத்தில் வீர வெறியூட்டும் இசைக்கருவிகள் பல இருந்தன. பறையும் பம்பையும், திட்டையும் தடாரியும், முழவும் முருடும், கரடிகையும் திண்டியும் அத்தகைய கருவிகள்.12 அவற்றின் பெயர்கள் ஒலிக் குறிப்பால் அமைந் தனவாகத் தோன்றுகின்றன. பம்பம் என்று ஒலிப்பது பம்பை; முர்முர் என்று ஒலிப்பது முருடு; கரடிபோல் கத்துவது கரடிகை. இவ்விசைக் கருவிகள் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் பொழுது வீரரது தலை கறங்கி ஆடும்; நரம்புகளில் முறுக்கேறும்; போர்…

வள்ளுவர் சொல்லமுதம் 7 : அன்பும் அறமும். 2 : அ. க. நவநீத கிருட்டிணன்

(வள்ளுவர் சொல்லமுதம் 6 : அன்பும் அறமும் : அ. க. நவநீத கிருட்டிணன் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் ரு. அன்பும் அறமும்.02 “முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்தற்காய் உதிர்தலும் உண்டு”என்பது அம் முனிவர் மொழி. குழந்தை பிறந்த வுடனே இறந்து போதலும் உண்டு. தக்க இளம் பருவத்தில் இறத்தலும் உண்டு. முறையே முதுமை பெருகி மறைதலும் உண்டு. ஆதலின், “யாம் இளை யம் என்னது கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்‘ என்று மக்களே ஏவினர். இவ் அறத்தை ஆற்றும் முறைமையை விளக்கப்…

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 156-160

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:151-155 தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம்  156-160 156. Above standard தரத்திற்கு மேலான   அளவு அல்லது தரம் அல்லது இரண்டும்  மேலான நிலையில் இருப்பதைக் குறிக்கிறது.   ஆளுமையில் இயல்பு மீறிய திறமையை வெளிப்படுத்தும் தலைமைத்துவ நிலையைக் குறிக்கிறது.   நிதியியலில் கடனாளி வலுவான நிதிக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. 157. Above the rank of பதவி நிலைக்கு மேலான   ஒரு பதவி நிலையை விட மேலான உயர் பதவியைக் குறிப்பது….

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 36 : கோமகன் மறுமொழி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 35 : 7. கடல்நகர் புக்க காதை –  தொடர்ச்சி) பூங்கொடி கோமகன் மறுமொழி வேம்பென வெறுப்பவள், வியனுல கதனில் மேம்படு தமிழே மேவிய மூச்சாய் வாழும் குறிக்கோள் வாழ்வினள்; அம்மகள் சூழும் தொழிற்குத் துணைசெயல் இன்றி             ஊறுகள் இயற்றல் ஒவ்வுமோ?’ என்றனள்; 25 கோமகன் மறுமொழி           `ஊறுகள் இயற்ற ஒருப்படேன் தாயே! துணைசெய நினைந்தே தோகை அவட்குத் துணைவன் ஆகத் துணிந்தேன்’ எனலும்,     மீண்டும் இடித்துரை           `செல்வ! நன்றுரை செப்பினை! அறிவைக்           …

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1061-1065

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1048-1060 – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1061-1065 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்