சாரணர் பயிற்சி பெற்றவர்களுக்குத் தொடர்வண்டித்துறையில் வேலைவாய்ப்பு

சாரணர் பயிற்சி பெற்றவர்களுக்குத் தொடர்வண்டித்துறையில் வேலைவாய்ப்பு செகந்திராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்-நடுவண் தொடர்வண்டித்துறையில் காலியாக உள்ள குழு – இ, குழு – ஈ (Group – C & Group – D) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. [விளம்பர எண்: SCR/R-HQ/128/S&G/2015-16] மொத்தக் காலியிடங்கள்: 14 பணி: குழு – இ (Group-C) பணியிடங்கள் (சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகள்) (Scouts & Guides). காலியிடங்கள்:  02. அகவை வரம்பு: 18 – 29க்குள் இருக்க வேண்டும். தகுதி: மேனிலைப்பள்ளி இறுதி…

தேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி

தேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி   ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் அளிக்கப்படவுள்ள தொழில்பயிலுநர் (apprentice) பயிற்சிக்குப் பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தேசிய விண்வெளித் தொலையுணர்வு மையம் (National Remote Sensing Centre) இடம்: ஐதராபாத்து பணி: ஓர் ஆண்டு பயிலுநர் பயிற்சி காலியிடங்கள்: 42 தகுதி: பொறியியல் துறையில், தொடர்புடைய பிரிவில் 65 விழுக்காட்டு (percentage) மதிப்பெண்களுடன் பட்டயம் (Diploma) அல்லது இளநிலைப் பொறியியல் (B.E), இளநிலைத் தொழில்நுட்பப் (B.Tech)…

இந்தியக் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு

  இந்தியக் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.1/2016/MRDPC பணி: தொழில்நுட்பர் (Technician T-1) – 102 பணி: தொழில்நுட்பர் (Technician T-1) ஓட்டுநர் (KVK) – 01 பணி: முதன்மைத் தொழில்நுட்ப உதவியாளர் (Senior Technical Assistant T-4) – 01 பணி: தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant T-3) – 03 பணி: தொழில்நுட்ப உதவியாளர் (T-3) – 01 பணி: முதன்மைத் தொழில்நுட்ப உதவியாளர் (T-4)…

நடுவண் புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் தொழில்நுட்பர், தொழில்நுட்ப உதவியாளர் பணிகள்!

நடுவண் புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் தொழில்நுட்பர், தொழில்நுட்ப உதவியாளர் பணிகள்  ஆந்திரப்பிரதேசம் இராசமுந்திரியில் செயல்பட்டு வரும் நடுவண் புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் நிரப்பப்பட உள்ள தொழில்நுட்பர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவற்றுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தக் காலியிடங்கள்: 34 பணி: தொழில்நுட்பர் (Technician: T-1) – 16   தகுதி: பள்ளி இறுதி வகுப்புத் (+2) தேர்ச்சி. பணி: தொழில்நுட்ப உதவியாளர் (களவயல் / ஆய்வகம்) (Technical Assistant: T-3) (Field Farm/Lab) – 18 தகுதி:…

முழுமையாக முடங்கியது வட மாகாணம்

இலங்கை முழு அடைப்புப் போராட்டம் – முழுமையாக முடங்கியது வடக்கு மாகாணம்   வவுனியாவில் மாணவி அரிசுணவி படுகொலையைக் கண்டித்தும், இந்தக் கொடிய நிகழ்வுக்கு நீதி வழங்கக் கோரியும், ஏற்பாடு செய்யப்பட்ட பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணம் பிப்ரவரி 24, 2016 அன்று முழுமையாக முடங்கியது.  பல்வேறு பொது அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ் வணிகர் கழகம் ஆகியவற்றின் அழைப்பின் பேரில் இன்றைய பணிப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.  இந்தப் போராட்டத்தினால், வடக்கு மாகாணத்தில் உள்ள…

வணிகச் சட்ட வாரியத்தில் 109 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    வணிகச் சட்ட வாரியத்தில் காலியாக உள்ள 109 பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி – காலியிடங்கள் விவரம்: பணி: துணைப் பதிவாளர் (Deputy Registrar) – 09 பணி: உதவிப் பதிவாளர் (Assistant Registrar) – 07 பணி: நீதிமன்ற அலுவலர் (Court Officer) – 13 பணி: அணுக்கச் செயலர் (Private Secretary) – 33 பணி: கணக்கு அலுவலர் (Accounts Officer) – 02 பணி: முதன்மைக் கணக்காளர் (Senior Account)…

கப்பல் கட்டும் நிறுவனத்தில் இளநிலை மேலாளர் பணி

கப்பல் கட்டும் நிறுவனத்தில் இளநிலை மேலாளர் பணி  கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் கப்பல் கட்டுமானர் – பொறியாளர் நிறுவனம் (Garden Reach Shipbuilders & Engineers Limited) எனும் குழுமத்தில் 20 இளநிலை மேலாளர் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தக் காலியிடங்கள்: 20 பணி: இளநிலை மேலாளர் [Junior Manager (E-0)] தகுதி: பொறியியல் துறையில் இயந்திரவியல் (Mechanical), மின்னியல் (Electrical), மின்னணுவியல் (Electronics) பிரிவுகளில் பட்டயத் (Diploma) தேர்ச்சி பெற்று 8 ஆண்டுகள் பணியறிவு(அனுபவம்) பெற்றிருக்க வேண்டும். தேர்வு…

எங்கள் கைகள் யாருடைய குருதியிலும் நனைக்கப்படவில்லை – நளினி

ஒவ்வொரு நாளையும் கழிப்பது பெரும் கொடுமையாக இருக்கிறது! – நளினி வேதனை      “சிறையில் ஒவ்வொரு நாளையும் கழிப்பதே மிகக் கொடுமையாக இருக்கிறது. அதனால், எங்களை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு அதைச் செய்யும் என்று நம்புகிறோம்” என்று அரைநாள் காப்பு விடுப்பில்(parole) தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த நளினி வேதனையுடன் தெரிவித்தார். இந்தியச் சிறைகளிலேயே, தண்டனை அடைந்துள்ள பெண் கைதிகளில், மிகுதியான காலம் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளவர் நளினி.   முன்னாள் தலைமையமைச்சர் (பிரதமர்) இராசீவு காந்தி…

இலங்கைச் சிறையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வரும் ஐவரின் உடல்நிலை கவலைக்கிடம்

  இலங்கையில், தங்கள் விடுதலையை வலியுறுத்திச் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்ச் சிறைவாசிகளில் ஐவருடைய நிலைமை பாதிப்புக்குள்ளாகி யிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, போராட்டம் நடத்தியவர்களில் மூவர் சிறைப்பிரிவு மருத்துவமனையில் பிப்பிரவரி 25 அன்று சேர்க்கப்பட்டனர். உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் இசைவான மறுமொழி அரசிடமிருந்து கிடைக்கும் வரை தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தமிழ்ச் சிறைவாசிகளில் தெரிவித்துள்ளனர்.   கொழும்பு மகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல்  சிறைவாசிகள் பதினைந்து பேரும், அநுராதபுரச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் சிறைவாசிகள் இரண்டு பேரும் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்திச்…

சா.வி.கூட்டுறவு வங்கியில் (S.V.Co-op.Bank) பணிவிண்ணப்பங்கள் வரவேற்பு

  மும்பையிலுள்ள சா.வி.கூட்டுறவு வங்கியில் (S.V.Co-op.Bank) எழுத்தர், அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!   மும்பையில் உள்ள சா.வி.கூட்டுறவு வங்கியில் நிரப்பப்பட உள்ள 104 எழுத்தர் (Clerk), அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: வாடிக்கையாளர் சேவை அலுவலர் (இளநிலை மேலாண்மைத் தரம்) [Customer Service Officer (Junior Management Grade)] – 24 அகவை (வயது) வரம்பு: 31.03.2016 நாள்படி அகவை 32க்குள் இருக்க வேண்டும். தகுதி: 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்….

தமிழுக்காக வாதாடினால் சிறையா? வழக்குகளைத் திரும்பப் பெறுக! – திருமாவளவன்

  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ் வழக்குமன்ற மொழியாகப் போராடி வரும் வழக்குரைஞர் பீட்டர் இரமேசு குமாருக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர். இராமசுப்பிரமணியன், கே.இரவிசந்திரபாபு ஆகியோர்,  6 மாதச்சிறைத்தண்டனையும் நீதிமன்ற அவமதிப்புச்சட்டத்தின்கீழ்த் தண்டனை பெற்றவர்கள் எந்த நீதிமன்றத்திலும் வழக்குரைஞராகச் செயல்படமுடியாது என்பதன் அடிப்படையில்  வழக்குரை உரிமைப் பறிப்பும் விதித்துள்ளனர். எனினும் மேல் முறையீட்டிற்காக இத் தண்டனையை 15 நாள் நிறுத்தி வதை்துள்ளனர். இது குறித்து, விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் உயர்நீதி மன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு…

படை நீக்கமே நல்லிணக்கம் – ஒப்புக்கொண்ட சிங்கள அமைச்சர்

படைகளைத் திரும்பப் பெறுவது நல்லிணக்கத்துக்கு இன்றியமையாதது – ஒப்புக் கொண்டார் இலங்கை வெளியுறவு அமைச்சர்   படைகளைத் திரும்பப் பெறுவது என்பது நல்லிணக்கத்தின் முதன்மையான ஒரு பகுதி என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஏற்றுக் கொண்டுள்ளார்.   இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்குப் பின்னும் தமிழர் பகுதிகளில் இலங்கைப் படைகள் குவிக்கப்பட்டிருந்தது பன்னாட்டு அளவில் தொடர்ந்து கண்டனத்துக்கு உள்ளாகி வந்தது.   இந்நிலையில், வாசிங்டனில் உள்ள அமைதிக்கான அமெரிக்க நிறுவனத்தில் நடந்த கருத்தரங்கில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு விடையளித்த இலங்கை…