நல்வாழ்வுத்திட்டச் செயற்பாட்டில் தமிழகம் முன்னோடி – தெலங்கானா குழு பாராட்டு

நலவாழ்வுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்றும், முதலமைச்சர் செல்வி  செயலலிதா நிறைவேற்றி வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், அம்மா குழந்தைகள் நலப் பரிசுப்பெட்டகம், மகப்பேறு உதவித் திட்டம்  முதலான  நல்வாழ்வுத் திட்டங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்றும் தெலங்கானா மாநில  நலவாழ்வுத்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநில  நலவாழ்வுத்துறை அமைச்சர்  மரு. கே. லட்சுமி தலைமையிலான 18 பேர் அடங்கிய குழுவினர்,  (26.02.16 அன்று) சென்னை வந்தனர். ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை…

காவல்துறையில் முதல் திருநங்கை சார் ஆய்வாளர்

இந்தியக் காவல்துறையின் முதல் திருநங்கை பிரித்திகா யாசினி!   இந்திய வரலாற்றில் முதல் முறையாக காவல்துறையில் சார்ஆய்வாளராகத் திருநங்கை ஒருவர் சேர்ந்துள்ளார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாசினி என்பவரே அவர். ஆனால், எளிதில் இந்தப் பதவி இவருக்குக் கிடைக்கவில்லை. ஆதலின் காவல்துறையையோ அரசையோ பாராட்ட ஒன்றுமில்லை. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்தாம் பாராட்டிற்குரியவர்கள்.   திருநங்கை பிரித்திகா யாசினி சேலம் மாவட்டம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர். இவர் முதலில் காவல் சார் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்தபொழுது மூன்றாம் பால் என மறுக்கப்பட்டார். விண்ணப்பத்தை ஏற்பது…

சன்தொலைக்காட்சியின் சூரிய வணக்கத்தில் பேரா. மறைமலை

  சன் தொலைக்காட்சியில் மாசி 10, 2047 / பிப். 22.02.2016 திங்கட்கிழமை ஒளிபரப்பாகும் சூரிய வணக்க நிகழ்ச்சியில் காலை 8.00 மணிக்குப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் செவ்வி / பேட்டி ஒளிபரப்பாகிறது.   http://www.sunnetwork.in/ இணையத் தளத்திலும் காணலாம்.

ஈ.வெ.இராமசாமி என்கிற நான் -நூலறிமுகம்

பெரியாரின் எழுத்துகள். தோழர் பசு கவுதமன் தொகுப்பில் பாரதி புத்தகாலய வெளியீடாக மூன்றாம் பதிப்பு. ஈ.வெ.இராமசாமி என்கிற நான். (மூன்று பாகங்கள் இரண்டு புத்தகங்கள்) விலை: 850 பக்கங்கள்: 1364   நூலிலிருந்து…. எங்கள் மதத்தில் சீர்திருத்தமுண்டு என்பர். ஆனால் எங்களைப்போல் வேடம் போட்டுக்கொள்ள வேண்டும், எங்கள் வேதத்தை நம்பவேண்டும், எங்கள் சாமிகளையும்,தூதனையும் வணங்க வேண்டும் என்று சொல்லுவார்கள். மற்றொருவர் எங்கள் சமயத்தில் சீர்திருத்தம் உண்டு. ஆனால் எங்களைப்போல் வேடம் போட்டுக்கொண்டு எங்கள் சாமிகளையும், புராணங்களையும் நம்ப வேண்டுமென்பார்கள். நம்பாவிட்டால் நாத்திகர், அஞ்ஞானி, பாவிகள்,…

நிலந்தரு திருவின் பாண்டியன், பனம்பாரனார், உருவ ஓவியப்போட்டி – பரிசு உரூபாய் பத்தாயிரம்

நிலந்தரு திருவின் பாண்டியன், பனம்பாரனார், உருவ ஓவியப்போட்டி – பரிசு உரூபாய் பத்தாயிரம்   புலவர் த.சுந்தரராசன் அறிவிப்பு   தலைநகரத் தமிழ்ச்சங்கம் குமரி மாவட்டம் காப்பிக்காட்டில் தொல்காப்பியர் சிலை அமைக்க உள்ளது. வரும் சித்திரை முதல் வாரம் இதற்கான விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் தொல்காப்பியம் அரங்கேறிய அவையை – தமிழ்ச்சங்கத்தை – நடத்திய வேந்தர் நிலந்தரு திருவின் பாண்டியன் படமும், தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய புலவர் பனம்பாரனார் படமும் திறக்கப்பட வேண்டும் எனச் சிலையமைப்புக் குழு முடிவெடுத்துள்ளது. எனவே, தமிழன்பர்களும் ஓவியர்களும்…

தொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு குடும்பத்திற்கு உதவ வேண்டுகோள்!

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு தொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு குடும்பத்திற்கு உதவ வேண்டுகோள்!   தொல்லியல், மாந்தரியல், கல்வெட்டியல், முதலான துறைகளின் ஆய்வாளரும் ‘அகரமுதல’ முதலான பல இதழ்கள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் செய்தியாளரும் கட்டுரையாளரும் ஆன வைகை அனீசு மறைந்து 3 திங்கள் ஆகின்றது. அவர் பிரிந்ததை இன்னும் உணராச் சூழலில் குடும்பத்தினர் இன்னலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.   வரும் கல்வியாண்டிற்கு ஐந்தாம் வகுப்பு பயிலப்போகும் மகனுக்கு [செல்வன் அகமது இன்சமாம் உல் அக்கு – Ahmed Inzamam-ul-Haq] உரூபாய் 28.000,…

சமூக ஆர்வலர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு! – நாமக்கல் ஆட்சியர்

குமுக (சமூக) ஆர்வலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு   நாமக்கல் மாவட்டக் சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள சமூகஆர்வலர் பணியிடத்திற்கு வரும் பிப்பிரவரி 25-ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:   குழந்தைகள் தத்தெடுப்பு மாநில ஆதார மையத்தின் மூலம் தத்தெடுக்க விரும்பும் பெற்றோரின் இல்லம் குறித்த நிலையை ஆய்வு செய்து அறிக்கை ஒப்படைக்கும் பணியிடம் காலியாக உள்ளது.   இப்பணியிடத்திற்குக் சமூகச் சேவை, குமுகவியல் (சமூகவியல்), உளவியல், குழந்தை வளர்ச்சி, மனையியல் ஆகிய ஏதேனும்…

வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி மாநிலம் முழுவதும் தொடக்கம்

வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி மாநிலம் முழுவதும் தொடக்கம்   தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தும் சிறப்புத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம்  பிப்பிரவரி 15  முதல் 29–ஆம் நாள் வரை 234 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர் விவரங்களை உறுதிப்படுத்துதல், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளைக் களைதல், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள், ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளவர்கள் பெயர்களையும் இறந்தவர்கள் பெயர்களையும் நீக்குதல் ஆகியவை இத்திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.  …

மாணவர் பதிப்பகத்தின் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்  – மூன்று தொகுதிகள் – 1135 உரூ – நாலடியார் – நான்மணிக்கடிகை – கார் நாற்பது – களவழி நாற்பது – இன்னா நாற்பது – இனியவை நாற்பது – ஐந்திணை ஐம்பது -ஐந்திணை எழுபது – திணைமாலை நூற்றைம்பது – திணைமொழி ஐம்பது – திருக்குறள் – திரிகடுகம் – ஆசாரக்கோவை – பழமொழி நானூறு – சிறுபஞ்சமூலம் – கைந்நிலை – முதுமொழிக்காஞ்சி – ஏலாதி வேண்டுவோர் தொடர்பு கொள்க: 9444 83 83 89…

அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான சரக்குஅஞ்சல் – தூது அஞ்சல் (கார்கோ-கூரியர்)

அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான  சரக்குஅஞ்சல் – தூது அஞ்சல் (கார்கோ-கூரியர்)   துபாயில் செயல்பட்டு வரும்  தூதஞ்சல் நிறுவனமான எம்ஃச்டார் (EMSTAR COURIER & CARGO LLC) அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான சரக்குஅஞ்சல் தூது அஞ்சல் சேவையினை வழங்கி வருகிறது. சரக்கு(கார்கோ)க்கு அயிரைக்கல்(கிலோ) ஒன்றுக்கு 10 திர்ஃகாம்  கட்டணமாகப் பெறப்படுகிறது.   பொதிவுச்சிப்பம் (packing).வான்வழிக் கட்டணம் தனி. அமீரகம், வளைகுடா, இந்தியா முதலான உலகின் பல்வேறு பகுதிகளுக்கும்  தூதஞ்சல் பணி இருந்து வருகிறது. மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள எம்ஃச்டார்  தூதஞ்சல் பணியூழியத்தில் உங்கள் குடும்பத்தினருக்கு வேண்டிய…

பா.ம.க. மாநில மாநாடு 27- ஆம் நாளுக்கு ஒத்திவைப்பு: இராமதாசு

வண்டலூரில் நாளை நடைபெற இருந்த பா.ம.க. மாநில மாநாடு 27- ஆம் நாளுக்கு ஒத்திவைப்பு: இராமதாசு அறிவிப்பு பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-     தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான பா.ம.க. மாநில மாநாடு 14-ஆம் நாள் சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இம்மாநாட்டை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்ற நோக்கத்துடன் மாநாட்டுக்கு உயர்நீதுிமன்றம் அளித்த இசைவை எதிர்த்து உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் அ.தி.மு.க. அரசு மேல்முறையீடு செய்தது….

தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை நிறைவேற்றுக! – கி. வெங்கட்ராமன்

    தென்பெண்ணை கிளைவாய்க்கால் திட்டத்தை  இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி – நிறைவேற்றுக! தமிழக உழவர் முன்னணி அறிவுரைஞர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!  கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூரில், மாசி02, 2047/12.02.2016  காலை, செய்தியாளர்களைச் சந்தித்த, தமிழக உழவர் முன்னணி அறிவுரைஞர்தோழர் கி. வெங்கட்ராமன், வரும் பிப்பிரவரி இறுதியில்  தமிழ்நாடுஅரசுஅளிக்கவுள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கையில், தென்பெண்ணைக்கிளைவாய்க்கால் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கி, அத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட அறிக்கை:…