தேனிப் பகுதியில் வேகமாகப் பரவி வரும் சென்னைக்கண்நோய்

தேனிப் பகுதியில் வேகமாகப் பரவி வரும் சென்னைக்கண்நோய் தேனிப்பகுதியில் வேகமாக சென்னைக்கண்நோய் (madras-eye)   வேகமாகப் பரவி வருகிறது. தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டி, கெங்குவார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, செயமங்கலம், போடி, கம்பம், காமயகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் அண்டை மாநிலமான கேரளா, கருநாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். இதே போலத் தொழில் நகரங்களான திருப்பூர், கோயம்புத்தூர், சென்னை போன்ற நகரங்களுக்கு வேலைநிமிர்த்தம் காரணமாகச் சென்றுள்ளனர். பண்டிகைகளையொட்டி அனைவரும் தங்களுடைய ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கண்நோய் பாதிப்படைந்தவர்கள் இப்பகுதியில் வருகை…

வராகநதியில் வெள்ளம்-பொதுமக்கள் மகிழ்ச்சி

பல ஆண்டுகளுக்கு பின் வராகநதியில் வெள்ளம்-பொதுமக்கள் மகிழ்ச்சி     தேனி அருகே உள்ள மேல்மங்கலம், செயமங்கலம் பகுதியில் கூவமாக மாறிய ஆறு தற்பொழுது தண்ணீருடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு பாய்ந்தோடுகிறது. கொடைக்கானல் மலையில் இருந்து வரும் இந்த ஆறு வராகநதி, கேழல் ஆறு, ஏனம் ஆறு, பன்றியாறு என்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டது. மேற்குமலைத்தொடர்ச்சியில் ஏறத்தாழ 28 அயிரைக்கல்(கி.மீ) தொலவு வரை பாய்ந்து வைகை அணை அருகே உள்ள குள்ளப்புரம் வரை செல்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீர் குடிக்கவும், ஓடிவிளையாடும்…

தேனிப் பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மணல்கடத்தல்

தேனிப் பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மணல்கடத்தல் தேனி அருகே உள்ள செயமங்கலம், மேல்மங்கலம், வடுகப்பட்டி, குன்னூர், உத்தமபாளையம் பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மணல் கடத்தல் நடைபெறுகிறது. கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் மழை பொழிந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகள் ஆகியவற்றில் ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் மணல் அதிகமாக வருகிறது. இதனைப்பயன்படுத்திப் பொறிஉழுவை, மாட்டுவண்டிகளில், மணல் கடத்தல் நடைபெறுகிறது. மாட்டுவண்டி ஒரு வண்டி மணல் உரூ.600க்கும் உழுவைகளில் மணல் உரூ.2000 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு வருவாய்த்துறை…

கொடைக்கானல் மலைச்சாலையில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

தேவதானப்பட்டி அருகே உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் மரம் சாய்ந்ததால்; போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தேவதானப்பட்டி அருகே உள்ள   மலைச்சாலையிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் மழை பொழிந்தால் அவ்வப்போது பாறைகள் உருளுவதும், மரங்கள் சாய்வதும் வாடிக்கையாக இருக்கும். இந்நிலையில் கடந்த 1 வார காலமாகத் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொடைக்கானல் பகுதியில் நிலச்சரிவும் மண்சரிவும் ஏற்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மழைக்காலங்களில் சாலைகளில் விழும் கற்களையும் மரங்களையும் அப்புறப்படுத்த உலவூர்தி (ரோந்து வாகனம்) அமைக்கவேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை…

மஞ்சளாறு அணை : கால்வாய்கள் தூர்வாரப்படாததால் உழவர்கள் அல்லல்

தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் உழவர்கள் அல்லல்பட்டு வருகின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் மொத்தம் 13 மடைகள் உள்ளன. இவற்றுள் ஒன்று முதல் எட்டுவரையுள்ள மடைகள் தூர்வாரப்பட்டன. அதன்பின்னர் 8 இலிருந்து 13வது வரை உள்ள மடைகள் தூர்வாரப்படவில்லை. இந்த மடையில் இருந்து வரும் தண்ணீரை நம்பி ஏறத்தாழ 1,800 காணி நிலம் உள்ளது. இந்த 1,800 காணியில் நெல், பருத்தி, மக்காச்சோளம், கடலை, தட்டப்பயிறு முதலான பயிர்வகைகள் பயிரிடப்படுகின்றன.. இப்பகுதியில் குறைந்தது 40 நாட்களாது தண்ணீர்…

விளைச்சல் நிலம் குறைந்ததால் விற்பனைக்கு அனுப்பபடும் கால்நடைகள்

தேனிப் பகுதியில் விளைச்சல் நிலங்கள் குறைந்ததால் நல்ல நிலையுள்ள மாடுகள் அடிமாட்டிற்காகக் கேரளாவிற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. தேவதானப்பட்டி பகுதியில் கடந்த சில வருடங்களாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் நீர்நிலைகள் வற்றியும் குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் நீரின்றி வறண்டும் காணப்பட்டன. இதனால் கால்நடைகளான ஆடு மாடுகளின் மேய்ச்சல் பரப்பு குறைந்தது. இதனால் உழவர்கள் தங்கள் கால்நடைகளுக்கு வேண்டிய தீவனத்தை வாங்கிக்கொடுக்க முடியாமல் தவித்தனர். மேலும் கால்நடைத் தீவனங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் வைக்கோல், தீவனப்புல் போன்றவை கிடைப்பது அரிதானது. இதனால்…

தேனி மாவட்டத்தில்; தொடர்மழையால் செங்கல் தொழில் பாதிப்பு

தேனிப் பகுதியில் தொடர்மழை காரணமாகச் செங்கல் செய்யும் தொழில் பாதிப்படைந்துள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, இலெட்சுமிபுரம், குன்னூர் முதலான பகுதிகளில் ஏராளமான செங்கல் தொழிற்சாலை உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் செங்கல் திருச்சி, கேரளா போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. செங்கல் தயாரிக்க தனியாகச் சேலம், தருமபுரி பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்து வந்து செங்கல் தொழிலை நடத்துகின்றனர். மேலும் செங்கல் தொழிலுக்கு மூலதனமாக மண், மணல், விறகு போன்றவை வாங்கி எரிப்பதில் பல விதக் கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும் தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை,…

எழுத்தாளர் இராசம் கிருட்டிணன் மறைவு – தமிழ்ப்படைப்பிலக்கியத்திற்குப் பேரிழப்பு

    எழுத்தாளர் இராசம் கிருட்டிணன் மறைவு – தமிழ்ப்படைப்பிலக்கியத்திற்குப் பேரிழப்பு   சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் இராசம் கிருட்டிணன் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு மிகப்பெரிய இழப்பாகும். தமிழ் படைப்பிலக்கியத்தில் அண்மைக்கால வரலாற்றில் தனித்த முத்திரை பதித்த மிகச்சிறந்த எழுத்தாளர்இராசம் கிருட்டிணன் அவர்கள். களஆய்வு செய்து தொடர்புடைய அந்தப் பட்டறிவுகளைத் தன்னுடைய புதினங்களில் உயிரோட்டமாகப் பதிவு செய்தவர். உப்பளத் தொழிலாளர்கள், மீனவர் சிக்கல்கள் ஆகியவற்றைக் களஆய்வுசெய்து இவர் எழுதிய ‘கரிப்பு மணிகள்’ மற்றும் ‘அலை வாய்க்கரையில்’ புதினங்களும் பீகார் கொள்ளைக்…

‘பாரதஇரத்தினா’வை இழிவுபடுத்தும் சுப்பிரமணியசாமி: தா.பாண்டியன் கண்டனம்

  இலங்கை அதிபர் இராசபக்சேவுக்குப் பாரதஇரத்தினா விருது அளிக்க வேண்டும் என்று சுப்பிரமணியசாமி கோரியிருப்பது, ‘பாரதஇரத்தினா’ விருதை இழிவுபடுத்தும் செயல் என்று தா.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், “பாசகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, இலங்கை அதிபர் இராசபக்சேவுக்குப் பாரதஇரத்தினா விருது அளிக்க வேண்டும் எனக் கோரியிருப்பது, அவரது நெடுங்கால, நிலைத்த தமிழ் மக்களுக்கு எதிரான வெறுப்பைக் காட்டுகிறது. தமிழ் மக்களைக் கொன்று குவித்த குற்றத்திற்காகப் போர் விதி மீறல்களை மீறிய…

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் – வைகோ அறிக்கை

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு இருண்ட வானத்தில் ஒளிக்கீற்று வைகோ அறிக்கை தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து இலக்சம்பெர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு 2011 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் புலிகளின் சார்பில், நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த வழக்கறிஞர் விக்டர்கோப்பு வாதாடினார். இலக்சம்பெர்க்கு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 2014 பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது. விடுதலைப்புலிகள்…