தேவதானப்பட்டிப் பகுதியில் மறைந்து வரும் தமிழர் திருநாள் காட்சிகள்

தேவதானப்பட்டிப் பகுதியில் மறைந்து வரும் தமிழர் திருநாள் காட்சிகள்   பொங்கல் திருநாள் போகிப்பண்டிகை, பெரும்பொங்கல், பட்டிப்பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கொண்டாடப்படுகின்றது. முதல் இரண்டு நாட்களாக போகிப்பண்டிகையை முன்னிட்டு இல்லத்தில் உள்ள பழைய பொருட்களை எரித்துவிட்டுப் புதிய பொருட்களை கொண்டுவருதல் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர் மக்கள்; பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற முறையில் புதிய பொருட்களை வாங்கத் தொடங்கினர். இதில் சூரிய வழிபாடும் உண்டு.   மேலும் தங்களுடைய மூதாதையர் வழிபாடும் ஆன்றோர் வழிபாடும்தான் முதன்மைப் பங்கு வகிக்கின்றன….

மருத்துவர்கள் வராததால் நோயாளிகள் அவதி

தேவதானப்பட்டி தொடக்க நல்வாழ்வு நிலையத்திற்கு மருத்துவர்கள் வராததால் நோயாளிகள் அவதி   தேவதானப்பட்டி, மேல்மங்கலம் முதலான தொடக்க நல்வாழ்வு நிலையங்களுக்கு மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.   பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், செயமங்கலம், சில்வார்பட்டி, புல்லக்காபட்டி முதலான ஊர்களில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். தற்பொழுது பனிக் காலம் என்பதால், மாறிவரும் காலநிலையில் பலவிதமான தொற்று நோய்களுக்கும், சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் மக்கள் ஆளாகின்றனர்.  இதனை உடனடியாகச் சரி செய்யாவிட்டால் பத்து நாட்கள் வரை நோய் நீடிக்கிறது. உடனடி மருத்துவம்…

தேனி : பேருந்துகள் நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம்

தேனிமாவட்டத்தில் இரவு, பகலாக இயங்கும் தனியார் பேருந்துகள் நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம்   தேனி மாவட்டத்தில் இரவு, பகலாக தனியார் பேருந்துகள் இயங்குவதால் மோதல் நேர்ச்சி ஏற்படும் கண்டம் உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி, கம்பம், தேனி, கூடலூர் பகுதிகளில் இருந்து நாள்தோறும் சென்னைக்குத் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் புறப்பட்டு தேவதானப்பட்டியில் உணவருந்த நிறுத்திவிட்டு அதன்பின்னர் புறப்படுகின்றன. புறப்பட்ட பின்னர் வேறு எங்கும் நிற்காமல் சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்தில் நிறுத்தப்படுகின்றன.   மேலும் இப்பகுதியில் விளையும்,…

“தமிழக மக்கள் முன்னணி” தொடக்கம்

“தமிழக மக்கள் முன்னணி” தமிழகத்தில் இயங்கி வரும் பத்துக்கும் மேற்பட்ட இயக்கங்கள் ஒருங்கிணைந்து ”தமிழக மக்கள் முன்னணி” எனும் ஒரு முன்னணி இயக்கம் தொடங்கியிருக்கின்றன. தமிழக மக்கள் புரட்சிக் கழகம் 2.தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலைக் கழகம் 3.தென்மொழி இயக்கம் 4.தமிழக மக்கள் விடுதலை இயக்கம் 5.தமிழர் தன்மானப் பேரவை 6.தமிழர் உரிமை இயக்கம் 7.தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் 8.புரட்சிக் கவிஞர் கலை இலக்கியப் பேரவை 9.தமிழர் விடுதலை கழகம் 10.தமிழ்நாடு விடுதலை புலிகள் 11.அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம் 12.பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம்…

சிறுகதைப் போட்டி – (உ)ரூபன் & யாழ்பாவாணன்

(உ)ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்… சிறுகதைகள் அளிக்க வேண்டிய இறுதி நாள் தை 17, 2046 / 31.01.2015   போட்டியின் நெறி முறைகள்: 1. கொடுக்கப்பட்டுள்ள ஒரு தலைப்பைத் தோ்வு செய்து அதற்கான சிறுகதையை 250-350 சொற்களுக்கு மிகாமல் எழுத வேண்டும். 2. 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். 3. போட்டிக்கான சிறுகதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டி முடிவுகள் வெளிவந்த பின் தங்களின் படைப்புக்களைத் தறவேற்றம் செய்யலாம்….

இந்தியாவில் 32 இணையத்தளங்களுக்குத் தடை – மணி.மணிவண்ணன் கண்டனம்!

32 இணையத்தளங்களை இந்திய அரசு “தடை” செய்தது சரியா? நன்றி : http://www.bbc.co.uk/tamil/india/2015/01/150101_inidiawebsite.shtml இந்தியாவுக்குள் இணையச் சேவை வழங்கும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 32 இணையதளங்களைத் தடை செய்யுமாறு, இந்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக, இணையத் தன்னுரிமைக்கான செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். பெங்களூரைச் சேர்ந்த இணையம் – சமூகத்திற்கான மையம் என்கிற இணையத் தன்னுரிமைக்கான தன்னார்வத் தொண்டு அமைப்பு இந்திய அரசு தடை செய்திருப்பதாக கூறப்படும் 32 இணையத்தளங்களின் பட்டியலை ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தது. அதில் பொதுமக்கள் பரவலாக பயன்படுத்தும் காணொளிகளுக்கான இணையத்தளங்கள் உள்ளிட்ட பல புகழ்வாய்ந்த…

இலக்குவனார் வணங்கும் கடவுள்

இலக்குவனார் வணங்கும் கடவுள்   சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வானாளத் தருவரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்பேம்அல்லேம் மா(த்) தமிழுக்கே அன்பர் அல்லராகில்! எங்குமுள இடமெலாம் சுற்றிஓடி இரந்துண்ணும் இழிவாழ்க்கை உடைய ரேனும் தங்குபுகழ்ச் செந்தமிழ்க்கோர் அன்பராகில் அவர்கண்டீர் யாம்வணங்கும் கடவுளாரே! – பேராசிரியர் இலக்குவனார்! – புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம் 44 தரவு: பாபு கண்ணன்  

தமிழே இலக்குவனாரின் மூச்சு!

  தமிழே இலக்குவனாரின் மூச்சு!     “பேராசிரியர் இலக்குவனார் கூர்த்த அறிவு படைத்தவர்; முறையாக நூல்களைக் கற்றவர்; சிறந்த ஆராய்ச்சியாளர்; சிந்தனையாளர்; கருத்துக் களஞ்சியம் என்றால் மிகையாகாது. தமிழுக்காக எத்தகைய தியாகமும் அவர் செய்யத் தயங்காதவர். சிறந்த தமிழ்க் காவலர். அவர் குறிக்கோள் கொள்கை எல்லாம் தமிழ் வளர்ச்சியே! தமிழே! ஆயுள் முழுவதுமே சிறப்பாகத் தொண்டாற்றியவர்.’’ _ அண்ணலார் பு.அ. சுப்பிரமணியன் – புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம்44 தரவு : பாபு கண்ணன்

இணைய மாநாடு :ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான கடைசி நாள் நீட்டிப்பு

 ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான  கடைசி நாள் நீட்டிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 & சூன்1 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது மாநாட்டில் பங்கு பெறுவதற்கான சுருக்கக் கட்டுரையை அனுப்பும் நாள் தை 1, 2046 /  15.01.2015 என நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கட்டுரையாளர்கள் தத்தம் கட்டுரையை அனுப்பி வைக்க வேண்டப்படுகின்றனர்.

பாலச்சந்தர் – ஒரு சகாப்தம் : நினைவேந்தல்

    அடையாறு கலை இலக்கியச் சங்கம் பாலச்சந்தர் – ஒரு காலக்கட்டம்: நினைவேந்தல் தமிழ்மணம் இலக்கிய மனை, கோட்டூர் தோட்டம் (துரைமுருகன் இல்லம் அருகில்), சென்னை மார்கழி 23, 2045 / சனவரி 7. 2015 மாலை 4.30   அன்புடையீர், தாதாசாகேப் விருதாளர் இயக்குநர் பாலச்சந்தர் நினைவேந்தல் மேற்குறிப்பிட்டவாறு நடைபெற உள்ளது. நடிகர் சாருகாசன், இயக்குநர் இலெனின், இயக்குநர் தமிரா (பாலச்சந்தர் நடித்த இரட்டைச்சுழி படத்தை இயக்கியவர்), (அப்படத்தின் உரையாடலாசிரியர்) தமிழ், எழுத்தாளர் முனைவர் பாரதிபாலன், கல்விக்கடல் முனைவர் ஆனந்த மூர்த்தி…

சிறந்த காதல் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு

ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வதே    சிறந்த காதல் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு – காதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு –          அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் நடைபெற்ற ‘காதல் கவிதை’ நூல் வெளியீட்டு விழாவில், வெறும் உடல் கவர்ச்சிக்கான ஈர்ப்பாக இல்லாமல், ஒருவரையொருவர் மனத்தாலும் புரிந்துகொண்டு வாழ்வதே முன்னெடுத்துக்காட்டான காதல் வாழ்க்கையாகும் என்று கவிஞர் மு.முருகேசு பேசினார்.      இவ்விழாவிற்குத் தொழிலதிபர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். மா.குமரன் அனைவரையும் வரவேற்றார்.    கள்ளக்குறிச்சி கவிஞர் வீ.சிவசங்கர் எழுதிய…

தேவதானப்பட்டிப் பகுதியில் குறைவான அளவு பருப்பு வகைகள் வழங்கல்

தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள உணவுப்பொருள் கடைகளில் உளுந்தம்பருப்பு குறைவாக வழங்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கும் கடை ஊழியர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், செயமங்கலம், மேல்மங்கலம், எருமலைநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள உணவுப்பொருள் கடைகளில் கடந்த மாதம் பருப்பு வகைகள் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெளிச்சந்தையில் வாங்கினார்கள்.   தற்பொழுது தைப்பொங்கல், கிறித்துமசு, ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு உணவுப்பொருட்கள் வழங்குவார்கள் என நம்பி இருந்தார்கள். ஆனால் மாவட்ட நிருவாகத்திடம் இருந்து 50% பொருட்களே வழங்கப்பட்டுள்ளன.. இதில் உழுந்தம்பருப்பு, எண்ணெய் வகைகள் மிகவும் குறைவாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றைக்…