பருவமழை பொய்த்துப் போனதால் பட்டுப்போன வாழை மரங்கள்

  தேனிப் பகுதியில் பருவமழை பொய்த்துப் போனதால் வாழை மரங்கள் கருகத்துவங்கியுள்ளன.   தேனி அருகே உள்ள குள்ளப்புரம், மருகால்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, செயமங்கலம் முதலான பகுதிகளில் நுhற்றுக்கணக்கான காணி(ஏக்கர்) பரப்பளவில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை, சாகுபடி செய்யப்படுகிறது. பச்சை வாழை, மொந்தை, செவ்வாழை, கற்பூரவல்லி எனப் பலவகையான வாழைகள் பயிரிடப்பட்டு, தமிழகத்திற்குள்ளும் அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதனால் இப்பகுதி உழவர்கள் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருந்தனர்.   கடந்த இரண்டு வருடகாலமாகப் போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர், வாய்க்கால் தண்ணீர்…

ஒரே இடத்தில் பல்வேறு பயிர்த்தொழில் செய்து வரும் உழவர்கள்

  தேனிப் பகுதியில் தண்ணீர்ப் பற்றாக்குறையினால் ஒரே நிலத்தில் பல்வேறு பயிரிடுதலில் கவனம் செலுத்தி வருகின்றனர்.   தேனிப் பகுதியில் கடந்த சில வருடங்களாக போதிய மழை பொழியவில்லை. இதனால் உழவிற்குரிய வேளாண்பகுதி நாளுக்குநாள் சுருங்கி வருகிறது. இந்நிலையில் கிடைக்கின்ற நீரை வைத்துக் கரும்பு, தக்காளி, முட்டைக்கோசு எனப் பல்வேறு பயிரிடுகையை ஒரே இடத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.   இதன் தொடர்பாக உழவர்களிடம் கேட்டபோது, “மழை கடந்த இரண்டு வருடகாலமாக சரிவரப் பெய்யவில்லை. இதனால் நெல் முடிந்த பின்பு வாழை அதன் பின்னர் கரும்பு…

தேனி மாவட்டத்தில் காட்சிப்பொருளான பத்தாயங்கள்

  தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு நீர் வளமும் நிலவளமும் மிகுந்த பகுதி.   அண்டை மாநிலமான கேராளவில் மழை பொழிந்து இருப்பதால் எப்பொழுதும் சாரல் மழை பொழிந்து கொண்டே இருக்கும். இதன் அண்மையில் வருடம் முழுவதும் மழை பொழிவதால் வருசநாடு என்ற பெயரும் உண்டு. இவை தவிர முல்லைப்பெரியாறு அணை, மஞ்சளாறு – வைகை அணை பாய்கின்ற பகுதியாகும். இதனால் இப்பகுதியில் கடந்த காலங்களில் மும்மாரி மழை பொழிந்தும் ஆற்றுப்பாசனங்களில் நெல் விளைச்சல் எப்போதும் இருக்கும். எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்று நெல்…

பரிதியன்பனுக்குத் தமிழ்நிதி விருது

  புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர்   பரிதியன்பன் என்னும் பாலசுப்பிரமணியனுக்குத் ‘தமிழ்நிதி’ விருது விருதாளர் பரிதியன்பன் மேலும் பல விருதுகளும் சிறப்புகளும் பெற ‘அகரமுதல’ வாழ்த்துகிறது.

“தமிழ்த் தேசியப் பேரியக்கம்” – தீர்மானங்கள் (தொடர்ச்சி) – ஙி

(ஆவணி 15, 2045 / ஆக.31,2014 தொடர்ச்சி) தீர்மானம் – 3:காவிரி மேலாண்மை வாரியம்உடனடியாக அமைக்க வேண்டும்! தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் பாசன நீராகவும், 19 மாவட்டங்களில்குடிநீராகவும் பயன்பட்டுத் தமிழ்த் தேசிய ஆறாக விளங்குகிறது காவிரி. காவிரித்தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புப்படி, 192 ஆ.மி.க. (டி.எம்.சி.) நீரைகருநாடகம் தமிழகத்திற்குத் திறந்து விட வேண்டும். ஆனால், கருநாடகம்தமிழகத்திற்குரியத் தண்ணீரைத் திறந்துவிடாமல், திருட்டுத் தனமாக கருநாடகஅணைகளில் தேக்கி வைத்துக் கொள்கிறது.   கருநாடகத்தின் இந்தத் திருட்டுத்தனத்தைத் தடுத்து, இறுதித் தீர்ப்பைத்தவறாமல் செயல்படுத்துவதற்காகத் தீர்ப்பாயம் கூறிய தீர்வு தான் ‘காவிரிமேலாண்மை…

வெளியாரை வெளியேற்று! – தாயகத்தோர் வாழ்வுரிமை மாநாடு

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்!! 1956ஆம் ஆண்டு ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் ஒரு மாநிலம் என்ற வகையில் தமிழ்நாடு பிறந்தது. ஆனால், இன்று, அச்சட்டத்தை மதிக்காமல் தமிழ்நாட்டில் அதிகளவில் வெளி மாநிலத்தவர்கள் நுழைந்து கொண்டுள்ளனர். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 10 ஆண்டுகளில் மட்டும் 43 இலட்சம் பேர் இவ்வாறு குடியேறியுள்ளனர். இதன் காரணமாகத், ‘தமிழ்நாடு- தமிழர்களின் தாயகம்’ என்ற அடிப்படை நிலையே மாறிவருகின்றது. மேலும், தமிழகத்தில் உள்ள நடுவண் அரசு நிறுவனங்கள் அனைத்தின் தலைமைப் பொறுப்புகளிலும், பணியாளர்கள் எண்ணிக்கையிலும் அயல் இனத்தாரே…

தேனிப் பகுதியில் நிறம் மாறும் கிணறுகள் – அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

  தேனிப் பகுதியில் நிறம் மாறும் கிணறுகளினால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டி, குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டி, எழுவனம்பட்டி, புல்லக்காபட்டி பகுதிகளில் கிணறுகளில் உள்ள தண்ணீர் நிறம் மாறிவருகிறது. இப்பகுதியில் சாயத்தொழிற்சாலை, சருக்கரைத் தொழிற்சாலை,  காழிலை(காப்பி)த்தொழிற்சாலை எனப் பல தொழிற்சாலைகளும்  பாறைகளை உடைத்துத் தூசு எடுக்கும் தொழிற்சாலைகளும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இதனால் சாயத்தொழிற்சாலையின் கழிவு நீர், சருக்கரைத்தொழிற்சாலையின் கழிவு நீர், இரவு நேரங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ச் சுமையுந்துகளிலும் இழுபொறிகளின் மூலமும் எடுத்துச்செல்லப்பட்டுக் கொட்டப்படுகின்றன. இவ்வாறு கொட்டப்படும் கழிவுநீர்கள் …

தேனிப் பகுதியில் நீரின்றிக் கருகிய கரும்புகள் – துயரீட்டுத்தொகை வழங்குக!

தேனிப் பகுதியில் நீரின்றிக் கருகிய கரும்புகளால்  உழவர்கள் கவலை அடைந்துள்ளனர். தேவதானப்பட்டி பகுதி அருகே உள்ள  ஊர், தே.வாடிப்பட்டி. இப்பகுதியில் நெல்,  கரும்பு  ஆகிய பயிரிடல் முதன்மை உழவாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் மஞ்சள் ஆறு நீரை நம்பி  உழவுத்தொழில்  நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள கிணறுகள், கண்மாய்கள், குளங்கள் அனைத்தும் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. மேலும் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து விட்டது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள  உழவர்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி இப்பகுதியில் உள்ள  பயிர்த்தொழிலைக் காப்பாற்றி வந்தனர். இப்பொழுது தண்ணீர்…

“தமிழ்த் தேசியப் பேரியக்கம்” – தீர்மானங்கள் (தொடர்ச்சி) -ஙா

(ஆவணி 08, 2045 / ஆகத்து 24, 2014 இதழின் தொடர்ச்சி) “தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி” – இனித் “தமிழ்த் தேசியப் பேரியக்கம்”   சிறப்புப் பொதுக்குழு தீர்மானங்கள் (தொடர்ச்சி) -ஙா 2.1. நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வெளிமாநிலத்தவர் வந்து குடியேறுவதை அனுமதிப்பதற்கு அல்லது மறுப்பதற்கு அந்தந்தமாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்திற்குஉள்நாட்டு அனுமதி உரிமம் (Inner line permit) என்று பெயர். அதே அதிகாரத்தை, தமிழக அரசுக்கு இந்திய அரசு வழங்க வேண்டும். 2.2. தமிழ் பேசும்…

“பணிந்து போகத் தமிழன் என்ன நனைந்த கோழியா?” – (இ)லீ குவான் (இ)யூ

“பணிந்து போகத் தமிழன் என்ன நனைந்த கோழியா?” – சிங்கப்பூர் முன்னாள் தலைமையர் (இ)லீ குவான் (இ)யூ உணர்ச்சிப்பெருக்கம்!     “சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடி ஒழிந்து விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத்தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் சிங்களவர்கள், தமிழர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்” எனக் குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரின் முன்னாள் தலைமையர் (இ)லீ குவான் (இ)யூ, “தமிழர்களுக்குத்தனி நாடே தீர்வாகும்!” எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அதிபர் மகிந்த ராஜபக்ஷவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்….

மோடி சொல்லிவிட்டார் – கட்டியிருக்கும் கோவணத்தையும் உருவிப்போட்டுஇருங்கள்!

“ஒருங்கிணைந்த இலங்கையில் போதிய அதிகாரங்களுடன் தமிழர்கள் வாழ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக உள்ள நிலையில், நாட்டைப் பிரித்துத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோர முடியாது.” இது எப்படி இருக்கிறது? சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் சம்பந்தன் தெரிவித்த கருத்து இது உங்கள் எல்லோருக்கும் இதில் உடன்பாடு தானா? இப்போது விளங்குகிறதா ஏன் ஈழத்தின் உணர்ச்சிக் கவிஞர் அண்ணன் காசி ஆனந்தன் அவர்கள் ”சுத்த வீணான மனுசர் சம்பந்தன்” என்று ஒருமுறை வெளிப்படையாக மதிப்பிட்டார் என்று? இந்தியா சொல்லும்,” கட்டியிருக்கிற கோவணத்தையும் உருவிப்…