தமிழ்நிதி விருது வழங்கும் விழா
தமிழ்நிதி விருது வழங்கும் விழா கம்பன் கழகமும் இலக்கிய வீதி அமைப்பும் கிருட்டிணா இனிப்பகமும் இனைந்து பாரதீய வித்யாபவனில்மார்கழி 19, 2047 செவ்வாய் சனவரி 03, 2017 அன்று தமிழ்க்கூடல் தனிப்பாடல் நிகழ்ச்சி நடத்தின. இவ்விழாவில் தமிழ்நிதி விருதுவழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தலைமை தாங்கிய மேனாள் அறநிலையத் துறை அமைச்சரும், கம்பன் கழகத் தலைவருமான அருளாளர் திரு.இராம வீரப்பன், புலவர் தி.வே.விசயலட்சுமிக்குத் “தமிழ் நிதி” என்ற விருதை வழங்கிச் சிறப்பித்தார். தலைவர்தம் உரையில் புலவர் தி .வே.விசயலட்சுமி, திருக்குறள்,…
மு.முருகேசு எழுதிய ஐக்கூ நூல்கள் வெளியிடப்பட்டன
தமிழ் ஐக்கூ நூற்றாண்டு விழாவில் மு.முருகேசு எழுதிய ஐக்கூ நூல்கள் வெளியிடப்பட்டன! சென்னை. மார்கழி 09, திசம்.24, பனுவல் புத்தக நிலையமும், தமிழ் ஐக்கூ கவிதை இயக்கமும் இணைந்து நடத்திய தமிழ் ஐக்கூ நூற்றாண்டையொட்டி மு.முருகேசு எழுதிய ஐக்கூ நூல்கள் வெளியீட்டு விழா திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்குக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையேற்றார். கவிஞர் நாகா அதியன் அனைவரையும் வரவேற்றார். சப்பானிய ஐக்கூ கவிதைகள் மாக்கவி பாரதியாரால் 1916-ஆம் ஆண்டு தமிழில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது….
பாரதி பெண்கள் சிறுவர் இல்லச் சிறார்களுக்குக் கற்றல் துணைக்கருவிகள்
பாரதி பெண்கள் சிறுவர் இல்லச் சிறார்களுக்கு உரூ. 20, 000 பெறுமதியான கற்றல் துணைக்கருவிகள் திருநேல்வேலி சேர்ந்த வில்வராசன் சுதாகரனின் முதலாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் கார்த்திகை 24, 2047 / 09.12.2016 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள சிறார்களுக்கு உரூ. 20,000 பெறுமதியான கற்றல் துணைக்கருவிகள் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன. இல்லச் சிறார்களின் கல்வியில் ஆர்வம் கொண்டு கற்றல் துணைக்கருவிகள் அன்பளிப்பாக வழங்கிய வி.சுதாகரனின் குடும்பத்தினருக்கு நன்றிகளைக் கூறிக்கொள்ளும் தருணம் அமரர் சுதாகரனின் …
பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தினருக்குப் புதுத்துணி வழங்கல்
பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 108 சிறார்களுக்குப் புத்தாடைகள் தைப்பதற்காகத் துணிகள் வழங்கல் புலம்பெயர் உறவான இலண்டன் நாட்டை சேர்ந்த பரஞ்சோதி சிறிக்காந்து தனது பிறந்த நாளை முன்னிட்டு முள்ளியவளையில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 108 சிறார்களுக்குப் புத்தாடைகள் தைப்பதற்காகப் துணிகள், காவிக்கண்டு(சொக்லேட்-Kandos) என்பவற்றை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக கார்த்திகை 24, 2047 / 09.12.2016 அன்று வழங்கி வைத்துள்ளார். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
இந்து இளைஞர் சங்கம் கம்பளி ஆடைகள் நன்கொடை
இந்து இளைஞர் சங்கம் கம்பளி ஆடைகள் நன்கொடை குளிர் காலத்தை முன்னிட்டு இனிய வாழ்வு இல்லச் சிறார்களுக்குக் கம்பளி ஆடைகள் தந்துதவுமாறு அதன் பொறுப்பாளர்கள் வேண்டினர். வேண்டுகோளுக்கு அமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உரூ.38300 பெறுமதியான 50 கம்பளி ஆடைகள் கார்த்திகை 18, 2047 / 3.12.2016 சனிக்கிழமை இனிய வாழ்வு இல்லச் சிறார்களிடம் கையளிக்கப்பட்டன. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] athangav@sympatico.ca
மாவீரர் நாள், வவுனியா : ஒளிப்படங்கள்
தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ இல், விழி ஊறி நதியாகிய வவுனியா உறவுகள்! [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்]
தமிழ்த்தேசியத் தலைவர் 62 ஆவது பிறந்தநாள் விழா – நாம் தமிழர் கட்சி
தமிழ்த்தேசியத் தலைவர் 62 ஆவது பிறந்தநாள் விழா – நாம் தமிழர் கட்சி தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாளையொட்டி கார்த்திகை 11, 2047 / 26-11-2016 சனிக்கிழமை, மாலை 5 மணியளவில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமைஅலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்சீமான் தலைமையில் தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் முதன்மைப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். முன்னதாக அனைவருக்கும் இனிப்பும் பொங்கலும் வழங்கப்பட்டன, இவ்விழாவில், குழந்தைகளுக்கு அழகு தமிழில் பெயர் சூட்டுவதற்காக ஆட்சிமொழிப்பாசறைப் புலவர் மறத்தமிழ்வேந்தன் எழுதிய 62000 தமிழ்ப் பெயர்கள் கொண்ட ‘அகரமுதலி’ என்ற புத்தகத்தை சீமான் வெளியிட்டார்; ‘தமிழன்’ தொலைக்காட்சி…
உலகத் தமிழர் பேரவை சார்பில் மாவீரர்களுக்கு வீர வணக்கம்
உலகத் தமிழர் பேரவை சார்பில் மாவீரர்களுக்கு வீர வணக்கம் உலகத் தமிழர் பேரவை சார்பில் தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது! http://worldtamilforum.com/forum/forum_news/maaveerar_naal_27112016/ உலகம் முழுக்க உள்ள தமிழர்கள், தங்கள் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகம் செய்தோரை நினைக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளை கடைப்பிடித்து வருகின்றனர். அவ்வகையில் (கார்த்திகை 12, 2047/27.11016 காலை 11 மணியளவில்,) சென்னையில் அண்ணா சாலையில் உள்ள உலகத் தமிழர் பேரவையின் அலுவலகத்தில் தமிழறிஞர் அரு. கோபாலன் தலைமையில் உறுதி மொழியும், உரையும் நிகழ்த்தப்பட்டன. ஈகை…
குழந்தை இலக்கிய விருதாளர்களுக்குப் பாராட்டு விழா!
குழந்தை இலக்கிய விருதாளர்களுக்குப் பாராட்டு விழா! திருச்சிராப்பள்ளி: கார்.12 / நவ.27: திருச்சி சுருதி அரங்கில் நந்தவனம் அமைவம், கோவிந்தம்மாள் தமிழ்மன்றம் இணைந்து குழந்தை இலக்கியத்திற்காக விருது பெற்ற கவிஞர் மு. முருகேசு, கவிஞர் மு. பாலசுப்ரமணியன் ஆகியோருக்குப் பாராட்டு விழாவினை நடத்தின. கல்வியாளர் எமர்சன் செய்சிங்கு இவ்விழாவிற்குத் தலைமை வகித்தார். ’இனிய நந்தவனம்’ ஆசிரியர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில், கவிஞர் பொன்னிதாசன், விருதுபெற்ற மு.முருகேசு எழுதிய ‘பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி இராசாவும்’ எனும் சிறுவர் கதை நூலை…
உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி! இந்திய நாட்டின் விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கேற்று, வெள்ளையனுக்கு எதிராகக் கப்பல் ஓட்டி, வெள்ளையனின் பொருளாதார அடி மடியை அசைத்த தமிழன் செக்கிழுத்த செம்மல் நமது பெரும் பாட்டன் வ.உ.சிதம்பரம்(பிள்ளை). அவரின் நினைவு நாளை உலகத் தமிழர் பேரவை தமிழகத்தின் நான்குமுதன்மை நகரங்களிலும், ஈழத்தின் முல்லைத் தீவிலும் கடந்த கார்த்திகை 03, 2047 / 18-11-2016 வெள்ளி அன்று வெகு சிறப்பாகநடத்தியது. கோவை : கோவை மத்திய சிறைச்சாலை…
முகிலை இராசபாண்டியனின் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு
முகிலை இராசபாண்டியனின் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு ஐப்பசி 28, 2047 / நவம்பர் 13, 2016 அன்று மாலை, வண்டலூரிலுள்ள தலைநகரத் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளைச்சாமி அரங்கத்தில் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு நடைடபெற்றது. தொடக்கத்தில், என்.ஆர்.கே.மூர்த்தி, பொதிகை செல்வராசு, சீனத்து நித்திகா நிசா, செம்பியன் நிலவழகன், பாலு.தண்டவபாணி, குலோத்துங்கன், செந்தமிழ்ச்சித்தன், முகில்சன், சீதரன் ஆகிய கவிஞர்கள், தத்தம் கவிதைகள் வாசித்தனர். பின்னிருவரும் சிறுகதைகளும் கூறினர். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இலக்கியங்களில் முப்பது, முப்பது சொற்பொழிவுகள் ஆற்றிய செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுனப் பதிவாளர் பேராசிரியர் முகிலை…
செல்வி முல்லை அமுதன் கார்த்திகாவின் நூல் அறிமுகமும் இசைப் படையலும்
‘சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்‘ நூல் அறிமுகமும் இசைப் படையலும் தமிழும் இசையும் இணைந்து அரங்கேறிய இனிமையான நிகழ்வு ஒன்று 22/10/2016 சனிக்கிழமை மாலை ஈசுட்டுஃகாமிலுள்ள அட்சயா மண்டபத்தில் நிறைவேறியது. எழுத்தாளர் முல்லைஅமுதன் – செயராணி இணையரின் மூத்த புதல்வி கார்த்திகா, “சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்” என்ற நூலை அரங்கேற்றியதுடன், இசைக்கலைமணி, கலாவித்தகர்..திருமதி.சேய்மணி சிறிதரன் அவர்களிடம் தான் கற்றுத் தேர்ந்த இசையையும் படையலிட்டார். முற்பகுதியில் நூல் அறிமுகம், பிற்பகுதியில் இசைப்படையலும் இடம்பெற்றது. தொடக்கத்திலிருந்து நிகழ்ச்சி முடியும் வரை அவையோர் இருந்து களித்து மகிழ்ந்தமை…
