malarkal

மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்கள்

அரும்பு – அரும்பும் தோன்றுநிலை

நனை – அரும்பு வெளியில் நனையும் நிலை

முகை – நனை முத்தாகும் நிலை

மொக்குள் – “முகை மொக்குள் உள்ளது நாற்றம்” – திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)

முகிழ் – மணத்துடன் முகிழ்த்தல்

மொட்டு – கண்ணுக்குத் தெரியும் மொட்டு

போது – மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை

மலர்- மலரும் பூ

பூ – பூத்த மலர்

வீ – உதிரும் பூ

பொதும்பர் – பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை

பொம்மல் – உதிர்ந்து கிடக்கும் புதுப் பூக்கள்

செம்மல் – உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை