(திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 2/6 தொடர்ச்சி)

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 3 / 6

 

 6.1.21.நாடோறும் நாடுக மன்னன்                                             [குறள்.520]

        அறிபொருள்:

             நாள்தோறும் ஆட்சியை ஆராயும் நாடாள்வோர் மனம்

 6.1.22.எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை                     [குறள்.282]

       அறிபொருள்:

       மக்கள் எல்லார்க்கும் எல்லாமும் கிடைத்தலை ஆராயும் மனம்

 6.1.23.உடையர் எனப்படுவ[து] ஊக்கம்                  [குறள்.591]

        அறிபொருள்:

                  ஊக்கம் உள்ள மனம்

 6.1 24.உள்ளுவ[து] எல்லாம் உயர்வு                                         

[குறள்.596]

        அறிபொருள்:

        உயர்ந்தவற்றையே எண்ணும் மனம்

 6.1.25.எண்ணிய எண்ணியாங்கு  எய்துப, எண்ணியார்

       திண்ணியர் ஆகப் பெறின்             

      [குறள்.666]

       அறிபொருள்:

      எண்ணியதை அடைய எண்ணியதையே எண்ணிப் பார்க் கும் திண்ணிய மனம்

 6.1.26.இகல்                                                                                                                         [குறள்.853] 

        அறிபொருள்:

        மாறுபாடு இல்லா மனம்

 6.1.27.உட்பகை                                                                                                  [குறள்.883]

       அறிபொருள்:

       வெளிப்படாது உள்ளிருக்கும் உள்பகை இல்லா மனம்

  

6.1.28.மனத்து எண்ண அளவில் அமைதியை

ஏற்படுத்தும் அமைதியியல் சிந்தனைகள்

தொகுப்பு:

  1. ஒரு நொடியும் சினம் கொள்ளா மனம்
  2. குற்றம் அற்ற தூய மனம்
  3. ஆராவார உணர்வு அற்ற மனம்
  4. பொறாமையும் பேராசையும் அற்ற மனம்
  5. தன் மகனை உயர்பண்பன் எனக் கேட்டு மகிழும் தாயின் மனம்.
  6. குற்றம் அற்றாரது நட்பை மறவா மனம்
  7. ஒருவர் செய்த உதவியை என்றும் மறவா மனம்
  8. கோணல் இல்லாத உறுதிப்பாட்டு மனம்
  9. பிறர் செய்த அளவு கடந்த துன்பத்தைப் பொறுத்தலைவிட அதனை மறக்கும் மனம்
  10. பிறர் குற்றத்தையும் தமது குற்றம்போல் ஆராயும் மனம்
  11. மறந்த நிலையிலும் பிறருக்குக் கேடு எண்ணா மனம்
  12. தமக்கு ஒப்ப எல்லாரையும் ஆராயும் சமன்மை மனம்
  13. தன் உயிர், தான் எனும் செருக்கு முழுமையாக இல்லா மனம்
  14. வஞ்சகம் இல்லா மனம்
  15. பிறர் பொருளைப் பறிக்க எண்ணா மனம்
  16. பிற, பிறர் உயிர்களையும் தமது உயிர்போல் எண்ணும் மனம்
  17. பற்றினை விட்டமையால் அமைந்த துன்பம் அற்ற மனம்
  18. ஐயத்தின் நீங்கிய தெளிந்த மனம்
  19. தற்பெருமை கொள்ளா மனம்
  20. தம்மால் செய்ய முடிந்ததை ஆராயும் மனம்
  21. நாள்தோறும் ஆட்சியை ஆராயும் நாடாள்வோர் மனம்
  22. மக்கள் எல்லார்க்கும் எல்லாமும் கிடைத்தலை ஆராயும் ஆட்சியாளர் மனம்
  23. ஊக்கம் உள்ள மனம்
  24. உயர்ந்தவற்றையே எண்ணும் மனம்
  25. எண்ணியதை அடைய எண்ணிதையே எண்ணிப் பார்க்கும் திண்ணிய மனம்
  26. மாறுபாடு இல்லா மனம்
  27. வெளிப்படாது உள்ளிருக்கும் உள்பகை இல்லா மனம்

 6.2.0.உணர்வு எண்ண அளவில் அமைதியை

      ஏற்படுத்தும் அமைதியியல் சிந்தனைகள்                   

      குறள்கள் — 3

 6.2.1.அறத்தான் வருவதே இன்பம்                                           [குறள்.39]

      அறிபொருள்:

அறமே இன்பம் என்னும் உணர்வு

 6.2.2.நெஞ்சத்துக் கோடாமை                                                     [குறள்.118]

      அறிபொருள்:

     ஒரு பக்கம் சாயாத நடுநிலை உணர்வு

 6.2.3.ஈத்[து உவக்கும் இன்பம்                                                     [குறள்.228]

      அறிபொருள்:

     ஏழைகளுக்குக் கொடுத்துப் பெறும் இன்ப உணர்வு

 6.2.4.உணர்வு எண்ண அளவில் அமைதியை

      ஏற்படுத்தும் அமைதியியல் சிந்தனைகள்                   

      தொகுப்பு:

 

  1. அறமே இன்பம் என்னும் உணர்வு
  2. ஒரு பக்கம் சாயாத நடுநிலை உணர்வு
  3. ஏழைகளுக்குக் கொடுத்துப் பெறும் இன்ப உணர்வு

 

6.3.0.பண்பு அளவில் அமைதியை ஏற்படுத்தும்

      அமைதியியல் சிந்தனைகள் — குறள்கள் 14                 

 

6.3.1.0.அடக்கம் அமரருள் உய்க்கும்                                         [குறள்.121]

         அறிபொருள்:

          தெய்வ நிலைக்கு உயர்த்தும் அடக்கப் பண்பு

 6.3.2.அடக்கம் ஆக்கம் உயிர்க்கு                                                 [குறள்.122]

       அறிபொருள்:

       உயிருக்கு நலம் தரும் அடக்கப் பண்பு

 6.3.3.அறி[வு]அறிந்[து]

       ஆற்றின் அடங்கப்பெறின்                                                   [குறள்.123]

       அறிபொருள்:

       அறிய வேண்டியன அறிந்து அறவழியில் அடங்கும் பண்பு

 6.3.4.நிலையின் திரிய[து] அடங்கி                                             [குறள்.124]

       அறிபொருள்:

      தமது நிலையிலிருந்து தாழாத அடக்கப் பண்பு

 6.3.5.எல்லார்க்கும் நன்[று]ஆம் பணிதல் [குறள்.125]

       அறிபொருள்:

      நன்மை நல்கும் பணிவுப் பண்பு

 6.3.6.ஐந்[து] அடக்கல்                                                                                     [குறள்.126]    

       அறிபொருள்:

  ஐம்புலன்களின் அடக்கப் பண்பு

 6.3.7.நாகாக்க                                                                                                     [குறள்.127]

       அறிபொருள்:

                 நா அடக்கப் பண்பு   

 6.3.8.கற்[று]அடங்கல்                                                                                     [குறள்.130]

       அறிபொருள்:

                 கற்று அடங்கும் பண்பு  

 6.3.9.பிறன்இயலான்

 பெண்மையை நயவாதவன்                                       [குறள்.147]

       அறிபொருள்:

            பிறரது மனைவியை விழையாப் பண்பு  

6.3.10.காட்சிக்[கு] எளியன்                                                        குறள்.386]     

        அறிபொருள்:

        எளிமைப் பண்பு

6.3.11.கண்னோடத்[து] உள்ள[து] உலகியல்           [குறள்.572]

        அறிபொருள்:

        உலகம் சார்ந்த இரக்கப் பண்பு

 6.3.12.நாணும்                                                                                                                      [குறள்.952]

       அறிபொருள்:

                 பழிக்கு நாணும் பண்பு

 6.3.13.அற்றம் மறைக்கும் பெருமை                                          [குறள்.980]

        அறிபொருள்:

        பிறர் குற்றத்தை வெளியில் சொல்லாப் பெருமைப் பண்பு

 6.3.14.மக்கள்பண்பு                                                                                         [குறள்.997].

 அறிபொருள்:

                மாண்பு மிக்க மனித நேயப் பண்பு

 6.3.15.பண்பு அளவில் அமைதியை ஏற்படுத்தும்

        அமைதியியல் சிந்தனைகள் — தொகுப்பு:  

 

  1. தெய்வ நிலைக்கு உயர்த்தும் அடக்கப் பண்பு
  2. உயிருக்கு நலம் தரும் அடக்கப் பண்பு
  3. அறிய வேண்டியன அறிந்து அறவழியில் அடங்கும் பண்பு
  4. தமது நிலையிலிருந்து தாழாத அடக்கப் பண்பு
  5. நன்மை நல்கும் பணிவுப் பண்பு
  6. ஐம்புலன்களின் அடக்கப் பண்பு
  7. நா அடக்கப் பண்பு
  8. கற்று அடங்கும் பண்பு
  9. பிறரது மனைவியை விழையாப் பண்பு
  10. எளிமைப் பண்பு
  11. உலகம் சார்ந்த இரக்கப் பண்பு
  12. பழிக்கு நாணும் பண்பு
  13. பிறர் குற்றத்தை வெளியில் சொல்லாப் பெருமைப் பண்பு
  14. மாண்பு மிக்க மனித நேயப் பண்பு

 6.4.0.அறிவு அளவில் அமைதியை ஏற்படுத்தும்

       அமைதியியல் சிந்தனைகள் — குறள்கள் 3  

 

6.4.1.உலகம் தழீஇய[து] ஒட்பம்                                                 [குறள்.425]

      அறிபொருள்:

                உலகு தழுவிய பரந்த அறிவு

 6.4.2.எதிரதாக் காக்கும் அறிவு                                                    [குறள்.429]

அறிபொருள்:

     பின் வருவதை முன்னரே அறியும் அறிவு

 6.4.3.நன்றின்பால் உய்ப்ப[து] அறிவு[                                       குறள்.422]       

      அறிபொருள்:

      நல்லனவற்றுக்குள் செலுத்தும் அறிவு

 6.4.4.அறிவு அளவில் அமைதியை ஏற்படுத்தும்

       அமைதியியல் சிந்தனைகள் — தொகுப்பு:  

 

  1. உலகு தழுவிய பரந்த அறிவு
  2. பின் வருவதை முன்னரே அறியும் அறிவு
  3. நல்லனவற்றுக்குள் செலுத்தும் அறிவு

 

7.0.0.சொல் அளவில் அமைதியை ஏற்படுத்தும்   

      அமைதியியல் சிந்தனைகள் — 20 குறள்கள்

 7.2.1.நிறைமொழி                                                                                                             [குறள்.28]

      அறிபொருள்:

          நிறைவான சொற்களைப் பேசுதல்

 7.2.2.தம் மக்கள் மழலைச்                                                                            [குறள்.66]

      அறிபொருள்:

           குழந்தைகளின் இனிய மழலைச் சொல்  

 7.2.3.மகன்தந்தைக்[கு] ஆற்றும் உதவி, இவன்தந்தை

       என்நோற்றான் கொல்என்னும் சொல்..?        [குறள்70].

அறிபொருள்:

         இவன் தந்தை என்ன தவம் செய்தானோ..? என மகன் சமுதா யத்தைச் சொல்லவைக்கும் சொல்

(தொடரும்)

  பேரா. வெ.அரங்கராசன்

முன்னாள் தலைவர், தமிழ்த்துறை,

கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரி,கோவிற்பட்டி 628 502