(தோழர் தியாகு எழுதுகிறார் 122 : குசராத்து இசுலாமியர் இனக்கொலை 2002 தொடர்ச்சி)

அதானியை எதிர்த்து மூன்று முழக்கங்கள்

அதானியுடன் தரவு மையப் புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் தமிழக அரசு கையொப்பமிட்ட கடந்த காலச் செய்தி ஒன்றின் படி, அதானி என்டர்ப்பிரைசசுஎல்&டிஎசுடிடிசுடிசி,சிடிஆர்எல்எசு, பாரதி ஏர்டெல்லுக்குச் சொந்தமான  நெக்சுட்டிரா ஆகிய பெருநிறுவனங்கள் தமிழக அரசுடன் தமிழ்நாட்டில் தரவு மைய மேம்பாடுகளுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் ஒப்பமிட்டுள்ளன.

தரவு மையம் (இரண்டாம் கட்டம்) எனும் இத்திட்டத்துக்காகச் சென்னையில் அதானி எண்டர்ப்பிரைசசு  2,500 கோடி உரூபாய் (336 மில்லியன் தாலர்) முதலீடு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் அதானி குழுமத்திடம் இந்திய அரசு ஒப்படைத்திருக்கும் திட்டப் பணிகள்தமிழ்நாடு அரசு ஒப்படைத்திருக்கும் திட்டப்பணிகள்இரு அரசுகளும் சேர்ந்து ஒப்படைத்திருக்கும் திட்டப்பணிகள் ஆகியவை பற்றிய எல்லாச் செய்திகளையும் திரட்டுங்கள்.

அதானி எனும் மோசடிக் குற்றவாளிக்குத் தமிழ்மண்ணில் இடமிருக்கக் கூடாது. நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் அதானியை எதிர்த்துத் தீவிரமாக முழங்கியுள்ள நிலையில்திமுக நடத்தும் தமிழக அரசு அதானி பெருங்குழுமத்துடனான கூட்டு முயற்சிகளை அறவே முறித்துக் கொள்வதுதான் நியாயமானது.

உத்தரப் பிரதேச மாநில அரசுக்குச் சொந்தமான மத்தியாஞ்சல் வித்யுத்து விக்கிராம் 5,400 கோடி உரூபாய் மதிப்பில் திறன் மின்னளவைகள் வாங்குவதற்கான அதானி குழும நிறுவனத்தின் ஒப்பந்தப் புள்ளியை திடீரென்று நீக்கியிருப்பது தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.

1)      மோதியின் கூட்டாளி மோசடிக் குற்றவாளி அதானியைக் கைதுசெய்!

2)      அதானி குழுமத்தின் சொத்துகளைப் பறிமுதல் செய்!

3)      தமிழக அரசேஅதானியுடனான எல்லா ஒப்பந்தங்களையும் கிழித்தெறி!

இவை தமிழ்நாட்டு பாசிச எதிர்ப்பு ஆற்றல்களின் முழக்கங்கள்!  

(தொடரும்)
தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 97