(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 07 தொடர்ச்சி)

தலைப்பு-பாரதியார் வாழ்வியல் கட்டளைகள் : thalaippu_bharathiyaarin_vaazhviyal kattalaikal02

08

தொழிலில் மேம்படுக!

கல்வியுடன் தொழிலும் தேவையன்றோ?

உழவுக்கும்தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில்

உண்டுகளித்திருப்போரை நிந்தனை செய்வோம் (பக்கம் 57 / சுதந்திரப்பாட்டு)

ஆயுதம் செய்வோம்! நல்ல காகிதம் செய்வோம்!

ஆலைகள் வைப்போம்! கல்விச்சாலைகள் வைப்போம்!

(பக்கம் 22 / பாரத தேசம்)

பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் (பக்கம் 206 / முரசு)

இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே!

இயந்திரங்கள் வகுத்திடு வீரே! (பக்கம் 213 / தொழில்)

கூடும் திரவியத்தின் இவைகள் – திறன்

கொள்ளும் கோடிவகைத் தொழில்கள்

– இவை

நாடும்படிக்கு வினை செய்து – இந்த

நாட்டோர் கீர்த்தி யெங்கும் ஓங்கக் – கலி

சாரும் திறனெனக்குத் தருவாய் (பக்கம் 132 / யோகசித்தி)

எனத் தொழிலை வலியுறுத்தியும் தொழிலாளரை உயர்த்தியும் பாரதியார் பல பாடல்களில் பாடியுள்ளார். எனவே,

கைத்தொழில் போற்று (82)

கூடித்தொழில் செய் (18)

மேழி போற்று (82)

விதையினத் தெரிந்திடு (105)

இலாகவம் பயிற்சி செய் (98)

எனக் கைத்தொழில், உழவு, இயந்திரத் தொழில், ஈடுபாட்டிற்காகக் கட்டளையிடுகிறார்.

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 09)