பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 16 வழி நடத்தித் தலைமை தாங்கு! – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 15 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 16 வழி நடத்தித் தலைமை தாங்கு!   வாழ்வியல் கடமைகளாகப் பலவற்றைக் கூறும் மாபெரும் கவிஞர் பாரதியார் தலைமைப் பண்பையும் வலியுறுத்துகிறார்.         “உன்னைக் கோடிமுறை தொழுதேன் – இனி                 வையத் தலைமையெனக்கு அருள்வாய்” (பக்கம் 133 | யோக சித்தி) என்பதன் மூலம் கல்வி, தொழில், பண்பு முதலானவற்றில் சிறந்திருக்க வேண்டிய நம் இலக்கு ‘வையத் தலைமையே’ என்பதை அடையாளம் காட்டுகிறார். எனவே, பொறுப்பு கண்டு அஞ்சக்கூடாது என்பதற்காகச் ‘சுமையினுக்கு…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 14 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 13 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 14    நாமே தெய்வம்! நன்கறிக! தன்மதிப்புடன் வாழத் தன்னம்பிக்கை வேண்டும். அதனால் ‘நாம் அனைவருமே தெய்வம்’ எனப் பல இடங்களில் கூறுகிறார்.         “வீரர்தம் தோளினிலும் – உடல்         வியர்த்திட உழைப்பவர் தோள்களிலும்” (பாரதியார் கவிதைகள்: பக்கம் 154 | திருமேகனைச் சரண் புகுதல்) தெய்வம் இருப்பதாகக் கூறுகிறார். “செல்வம் என்றொரு செய்கை எடுப்போர்         செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்         கைவருந்தி உழைப்பவர் தெய்வம்” (பாரதியார் கவிதைகள்:…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 13 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 12 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 13 13. தன்மதிப்பைப் பொன் போல் போற்று!  அனைத்திலும் ஒருவருக்கு அடிப்படையான தேவை தன்மானம் பேணித் தன்மதிப்புடன் வாழ்வது. சாதிப் பிரிவுகள் மக்களைத் தன்மதிப்பிழக்கச் செய்து தாழ்வுபடுத்துகின்றன. எனவேதான் பாரதியார், “சாதிப்பிரிவுகள் சொல்லி – அதில் தாழ்வென்றும் மேலென்றும்” கொள்ளும் போக்கைக் கண்டித்துச் “சாதி நூறு சொல்லுவாய் போ போ போ” என விரட்டுகிறார். சில வகுப்பார் அடிமையாய் உழைப்பதற்கே பிறந்தவர் என்றும், ஒரு வகுப்பார் அவர் உழைப்பில் தாம் பிழைக்கப் பிறந்தவர்…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 12 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 11 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 12   பயனில நீக்கிப் பண்புடன் வாழ்க! “அன்பு சிவம்! உலகத்துயர் யாவையும் அன்பினில் போகும்” (பாரதியார் கவிதைகள் :பக்கம் 26 | பாரதமாதா) என்று புத்தர் மொழியாக அன்பை வற்புறுத்துபவர் பாரதியார். “பொலிவிலா முகத்தினாய் போ போ போ … … … … … … … … … … … … … … சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ ஒளி படைத்த கண்ணினாய்…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 11 – இலக்குவனார் திருவள்ளுவன்

  (பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 10  தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 11 ஈந்து மகிழ்க!  இவ்வாறு பலநூல் கற்று, வினைத்திட்பத்துடன் தொழில் ஆற்றிப் பணத்தைப் பெருக்குவது எதற்காக? ‘மாநிலம் பயனுற வாழ்வதற்கே’ (பக்கம் 112 | நல்லதோர் வீணை) அன்றோ – எனவே “ஈகைத்திறன்” (4) கொண்டு வாழுமாறு கூறுகிறார். ‘சிறுதுளி பெரு வெள்ளம்’ என்பதால் சேமிக்க வேண்டி ‘(இ)லவம் பல வெள்ளமாம்’ (97) என்கிறார். ‘ஞிமிரென இன்புறு’ (39) ‘ஞெகிழ்வது அருளின்’ (40) ‘ஞேயங் காத்தல் செய்’ (41) ‘வருவதை மகிழ்ந்துண்’…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 10 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 09 தொடர்ச்சி)   பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 10. முயற்சியால் துன்பம் வென்று இன்பம் காண்க!   பணத்தினைப் பெருக்கி வாழ்வில் உயர என்ன செய்ய வேண்டும்? கல்வியறிவும், தொழில் ஈடுபாடும் இருந்தால் மட்டும் போதுமா? “நல்லன எண்ண வேண்டும்”, “எண்ணிய முடிய சோம்பலை நீக்க வேண்டும்”, முயற்சி வேண்டும்; காலம் அறிந்து செயல்பட வேண்டும்; முடியும் மட்டும் வினையாற்ற வேண்டும் அல்லவா? இவற்றைப் பல பாடல்கள் வழி வலியுறுத்துபவர்தானே பாரதியார்! “எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும்…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 09 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 08 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 09.  பணத்தினைப் பெருக்கு! தொழில் நோக்கமும், தொழிலுக்கு அடிப்படைத் தேவையும் என்ன?  பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை அன்றோ? “பொருளில்லார்க்கிலை யிவ்வுலகு என்றநம் புலவர்தம்மொழி, பொய்ம்மொழி யன்றுகாண் பொருளி லார்க்கின மில்லை, துணையில்லை                 பொழு தெலாமிடர் வெள்ளம்வந் தெற்றுமால் பொருளி லார்பொருள் செய்தல் முதற்கடன்” (பக்கம் 255 / சுயசரிதை) எனும் பொய்யாமொழிப் புலவரைப் போன்று ‘செய்க பொருள்’ என்கிறார். பொருள் எதற்கு? “இல்லாமையை இல்லாமல் ஆக்குக இல்லை என்ற கொடுமை…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 08 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 07 தொடர்ச்சி) 08 தொழிலில் மேம்படுக! கல்வியுடன் தொழிலும் தேவையன்றோ? உழவுக்கும்தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில் உண்டுகளித்திருப்போரை நிந்தனை செய்வோம் (பக்கம் 57 / சுதந்திரப்பாட்டு) ஆயுதம் செய்வோம்! நல்ல காகிதம் செய்வோம்! ஆலைகள் வைப்போம்! கல்விச்சாலைகள் வைப்போம்! (பக்கம் 22 / பாரத தேசம்) பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் (பக்கம் 206 / முரசு) இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே! இயந்திரங்கள் வகுத்திடு வீரே! (பக்கம் 213 / தொழில்) கூடும் திரவியத்தின் இவைகள் – திறன் கொள்ளும்…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 07 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 06 தொடர்ச்சி) 07 கல்வியைத் தேடு!     உடல்நலத்துடன் கூடிய வலிமை எதற்குத் தேவை? அயலவரை அழிக்கவா? அல்ல அல்ல! நம்மைக் காத்துப் பயன்பாட்டுடன் திகழ! இதற்கு அடிப்படை கல்வி கற்றலும் கற்றபடி நிற்றலும். கல்வித்தேவையையும் கல்விக்கண்களை அனைவரும் பெறவேண்டும் என்பதையும் பாரதியார் பல பாடல்களில் வலியுறுத்தியுள்ளார். திறமை கொண்ட தீமையற்ற தொழில்புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே (பக்கம் 56 / விடுதலை) தேடுகல்வியிலாத தொரூரைத் தீயினுக்கிரை யாக மடுத்தல் (பக்கம்…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 06 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 05 தொடர்ச்சி) 06 உடல்நலன் பேணுக! வீரத்துடனும் வலிமையுடனும் திகழ அடிப்படைத் தேவை உடல்நலம் அல்லவா? எனவே, அதனையும் பாரதியார் வலியுறுத்துகிறார். பொலிவிலா முகத்தினாய் போ போ போ பொறியிழந்த விழியினாய் போ போ போ ஒலியிழந்த குரலினாய் போ போ போ ஒளியிழந்த மேனியாய் போ போ போ கிலி பிடித்த நெஞ்சினாய் போ போ போ என நலமற்ற தன்மையை விரட்டியடித்து நோய்களற்ற உடலினாய் வா வா வா (பக்கங்கள் 38-39 / போகின்ற பாரதமும் வருகின்ற…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 05 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 04 தொடர்ச்சி) 05 நாடு காப்பாய்!   வீரம், வலிமை, துணிவு எல்லாம் எவற்றுக்காக? உலக உயிர்களின் துயர்துடைக்கவும் புவியைக் காக்கவுமதானே! பாரதவீரர் மலிந்த நன்னாடு மாமுனிவர் பலர் வாழ்ந்த பொன்னாடு (பக்கம் 23 / எங்கள்நாடு) என்றும் உயர்வீரம் செறிந்த தமிழ்நாடு(பக்கம் 45 / செந்தமிழ்நாடு) என்றும் வீரம் நிறைந்த நாடு எனக் கூறுவதன் நோக்கம் என்ன? எங்கள் பொன்னுயர் நாட்டை ஒற்றுமையுடைத்தாய்ச் சுதந்தரம் பூண்டதுவாகி இன்னுமோர் நாட்டின் சார்விலதாக்கிக் கு டியரசு இயன்றதாய் இலக (பக்கம் 84…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 03 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 2 – தொடர்ச்சி) 03     ஆண்மை கைக் கொள்!   உலகில் இன்பம் பெற வழி அச்சத்தை விரட்டுவதுதான். அச்சத்தை விரட்ட ஆண்மையைக் கைக் கொள்ள வேண்டும்.   அச்சத்தை விட்டிடடா – நல் ஆண்மையைக் கைக் கொள்ளடா இச்சகத்தினிமேலே நீ – என்றும் இன்பமே பெறுவையடா என்கிறார் பாரதியார்.   அச்சம் நீங்கினாயோ – அடிமை ஆண்மைத் தாங்கினாயோ (பக்கம் 63 / தொண்டு செய்யும் அடிமை) என்று அச்சம் நீங்க ஆண்மையைத் தாங்க வலியுறுத்துகிறார்….