தலைப்பு-பிறமொழி எழுத்தொலிகள், மறைமலையடிகள் ; thalaippu_piraoli_thamizhilinmai_maraimalaiadigal

பிறமொழி எழுத்தொலிகள் தமிழில் இன்மை அதன் சிறப்பே!

  முதலில் பிறந்த மொழி தமிழ்.  அதனால் தமிழ் அழிந்து  போகாமல் இருக்கிறது. தமிழ் மரபியல் கண்ட மொழி. தமிழ் வழிவழியாக  இளமையோடு வழங்கிவருகிறது. மலையாளம் 700 ஆண்டுகளுககு முன்னர்த் தமிழாக இருந்தது. கன்னடமும் துளுவும் கூட தமிழாகத்தான் இருந்தன. 1000 ஆண்டுகளுக்கு முன் கன்னடம் தமிழாக இருந்தது. மக்கள் பழகிப் பழகி வேறு மொழியாகிவிட்டது. ஆனால் தமிழ் மட்டும் இன்றும் தனித்து இயங்குகிறது. தமிழ் எந்தக் காலத்துக்கும் அழியாது. தமிழை அழிப்பதற்குக் கங்கணம் கட்டுவர்கள் தாமாகவே அழிந்து போவார்கள். இயற்கையிலே பிறந்து வளர்ந்தது தமிழ். ஆதலால் இயற்கையை யாரும் அழிக்க முடியாது. ஆகவே தமிழையும் அழிக்க முடியாது.

 -மறைமலை அடிகள்