(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 31-40 தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 41-50

(குறள்நெறி)

  1. நாளை வீணாக்காமல் நன்றாக்கி வாணாள் காக்கும் அணையாக்கு!
  2. அற வழியில் உண்மை இன்பம் அடை!
  3. அறம் செய்! பழிச்செயல் விடு!
  4. சார்ந்தோர்க்குத் துணையாக இரு!
  5. துறந்தார், துய்க்க இயலார், காப்பிலார்க்குத் துணை நில்!
  6. பிறருடன் உன்னையும் காத்திடு!
  7. பழிக்கு அஞ்சிப் பகுத்துண்டு வாழ்!
  8. இல்வாழ்வின் பண்பும் பயனுமான அன்பையும் அறனையும் கடைப்பிடி!
  9. இல்வாழ்வே அறவாழ்வு, பிற வாழ்வில் ஒன்றுமில்லை. என உணர்!
  10. முயற்சியுடையாருள் தலைசிறந்து விளங்கு!இலக்குவனார்திருவள்ளுவன்

(தொடரும்)

இலக்குவனார்திருவள்ளுவன்