(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 41-50 தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்

(குறள்நெறி)

  • 51. தவமிருப்போரின் பணியினும் சிறந்த இல்லறத்தானாக விளங்கு!
  • 52. பழிக்காகா இல்வாழ்வை மேற்கோள்!
  • 53. வானவர்க்கு ஒப்பாக, வாழ்வாங்கு வாழ்!
  • 54. மனைக்குத் தக்க மாண்பு கொண்டுவளத்திற்கேற்ப நட! .
  •  55. பிற மாட்சியைவிடச் சிறந்த மனைமாட்சியுடன் திகழ்!.
  • 56. இல்லாதது ஒன்றுமில்லை என ஆக்கும் பெருமைமிகு துணைவராக இரு!
  • 57. நின்னிலும் பெருமை யாதுமில்லை எனக் கலங்கா கற்பு நிலையில் வாழ்!
  • 58. பெய்யெனப் பெய்யும் மழை போன்று துணைவர் வழி நட!
  • 59. தன்னையும் துணையையும் காத்துக் கடமையாற்று!
  • 60. பண்பினைச்சிறந்த காவலாகக் கொள்

(தொடரும்)

இலக்குவனார்திருவள்ளுவன்