(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.16. தொடர்ச்சி)

தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram

மெய்யறம்

மாணவரியல்

17. பொய்ம்மை விலக்கல்

  1. நிகழா ததனை நிகழ்த்துதல் பொய்ம்மை.

நடக்காததைச் சொல்வது பொய் ஆகும்.

  1. நிகழ்வதை யங்ஙன நிகழ்த்துதல் வாய்மை.

நடந்ததை அவ்வாறே சொல்வது உண்மை ஆகும்.

  1. தீமையைத் தருமெனின் வாய்மையும் பொய்ம்மையாம்.

தீய விளைவைத் தரும் எனில் உண்மை என்பது பொய்க்குச் சமம் ஆகும்.

  1. புரைதீர் நலந்தரின் பொய்ம்மையும் வாய்மையாம்.

குற்றமில்லாத நன்மையைத் தரும் எனில் பொய்யும் உண்மைக்குச் சமம் ஆகும்.

  1. வாய்மையைத் தருவதே வாயென வறிக.

வாய்மை(உண்மை)யைப் பேசுவதால் மட்டுமே “வாய்” என்ற உறுப்பு “வாய்” என்று அறியப்படும்.

  1. மற்றவை யெலாம்வெறும் வாயிலென் றறிக.

வாய்மை(உண்மை)யைப் பேசாதபோது “வாய்”, உணவு உண்ணுவதற்கான ஒரு வழி மட்டுமே ஆகும்.

  1. வாய்மை யகத்தது தூய்மையை வளர்க்கும்.

உண்மை மனத் தூய்மையை வளர்க்கும்.

  1. பொய்ம்மை யகத்தது புரையினை வளர்க்கும்.

பொய்ம்மை, மனத்தில் குற்றத்தினை வளர்க்கும்.

  1. பொய்ம்மையை யாள்பவர் புன்னர காழ்வர்.

பொய் பேசுபவர்கள் நரகத்தில் விழுந்து துன்பம் அடைவார்கள்.

170.பொய்ம்மை யொரீஇயவர் புகழ்வீ டடைவர்.

பொய்யினை நீக்கியவர்கள் புகழுக்கு உரிய இடமான சொர்க்கத்தை அடைந்து இன்பம் அடைவார்கள்.

வ.உ.சிதம்பரனார்