paavanar04

 

தமிழ் மாணவன் தன் பெற்றோரை வினவல்

 “கழுகுமலை குருவிகுளம்” என்ற மெட்டு வகை

ப.

            இந்தியை ஏன்கற்க வேண்டும்

என்அம்மா என்அப்பா நான்

(இந்தி)

 

உ.1

            என்கருத்தைத் தெரிவிக்க என்மொழி யொன்றில்லையா

பொன்மணிபோற் சொற்களே பொலியுந்தமிழ் இருக்கையிலே

(இந்தி)

 

2

            அறிவியற்கே ஆங்கிலம் அளவில்லாநூல் அளிக்கவும்

வெறுமையுற்ற கலமென விழுமியநூல் எதுமிலாத

(இந்தி)

 

3

            அடிமைநாளில் அயன்மொழி அறிந்துவந்தோம் என்கின்றார்

உரிமைவந்த பின்னரும் உறவில்லாத வடநிலத்து

(இந்தி)

 

4

            வரவரவே வாழுநாள் வரம்புகுன்றி வருகையில்

அறிவியற்கே நிறைவிலா அரியகாலம் பயனறவே

(இந்தி)

 

5

            ஆரியத்தால் செந்தமிழ் அடைந்ததுபல் கேடுகள்

சீரியநல் எச்சமும் சிதையும்வகை மதியிலாது

(இந்தி)

 

6

            இந்தி யில்லாப் பள்ளியே இந்தநாட்டில் இல்லையேல்

அந்த நாள் வரும்வரை அகத்திருந்தே கற்றிடுவேன்

(இந்தி)

 

7

            மானமும்தன் மானமும் மருவுதமிழ் மாணவர்

தானையிலே சேர்ந்துநான் தண்டமிழைக் காத்திடுவேன்

(இந்தி)

– ஞா. தேவநேயப் பாவாணர் : இசைத்தமிழ்க் கலம்பகம் : பாடல் 203