தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 34 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 35 தன்வாழ்வைத் தொண்டாக்கித் தமிழ்நாட்டைவளமாக்கத் தகுஞ்செயல்கள்நன்றாற்றி நம்பெரியார் ஈ.வெ.ராமுதுமைதனைக் கண்ட போதில்தென்னாட்டில் தமிழகத்தில் இந்திஎனும்புன்மொழியைத் தேசப் பேரால்சென்னைமுதல் அமைச்சரவர் கட்டாயம்ஆக்கிவிடத் திட்டம் செய்தார்! (1) தாய்மீதில் விருப்பற்ற ஓரிளைஞன்தன்னுழைப்பைத் தாய்நாட்டிற்கேஈயென்றால் மதிப்பானா? எதிரிமொழிமதித்துயிரவைத் திருப்பான் பேடி!தூயதமிழ் நாட்டில்செந் தமிழ்மொழியைமன்றத்திந்தி தோன்றின் நாடேதாயென்ற நிலைபோகும்! தமிழ்சாகும்!இந்தியெனும் கனிமே லாகும்! (2) ஈதறிந்த ஈரோட்டுத் தத்தாதாம்ஓயாமல் எழுத்தி னாலும்மோதியுணர் வலையெழுப்பி மக்களைத்தம்வயப்படுத்தும் மொழியி னாலும்தீதுவரும் இந்தியினால்! முன்னேற்றம்தடையாகும்! தீந்த மிழ்க்கும்ஆதரவு கிடைக்காமல் அழிவுவரும்!இந்திஉயர் வாகும்…

தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 33 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 34 (எ) இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நம்நாட்டு மகளிர் மனத்தையும் கொள்ளை கொண்டது. அவர்களும் மொழிப்போரில் ஈடுபட்டனர். 1938 நவம்பர் 13-இல் சென்னையில் மகளிர் மாநாடு நடைபெற்றது. திருவாட்டி நீலாம்பிகை அம்மையார் (மறைமலையடிகளின் திருமகளார்) மாநாட்டுத்தலைவர். இம்மாநாட்டில் தந்தைபெரியார் ஆற்றிய சொற்பொழிவு தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்தது; உரிமை உணர்ச்சியை எழுப்பிவிட்டது. இம்மாநாட்டில்தான் ஈ. வெ. இராமசாமி பெயருக்கு முன் பெரியார் என்னும் அடைமொழி கொடுத்து அழைக்க வேண்டும் என முடிவு செய்தனர். (ஏ) பெரியார் மீது வழக்கு: இம்மாநாடு முடிந்தபின் பல பெண்கள் மறியல்…

தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 32 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 33  4.  இந்தி எதிர்ப்பு “உலக வாழ்க்கையில் ஓர் ஒடிந்து போன குண்டூசிக்கும் பயன்படாத மொழியாகிய இந்திக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்பெற்று வருகிறது. என்பது வெகுநாளாகத் தமிழ் மக்கள் கவனித்து வரும் சங்கதியாகும்” என்று எழுதிய ஐயா அவர்கள் இந்தி எதிர்ப்புக்காக மேற்கொண்ட பணி மிகப் பெரியது. இவற்றை விவரமாக ஈண்டு எடுத்துக்காட்டுவேன். 1926-ஆம் ஆண்டு முதலே பெரியார் தமிழ்நாட்டில் இந்தி நுழைக்கப்பபெறுவதை எதிர்த்து வருகின்றார். “இந்தியைப் பொதுமொழியாக்குவதால் நாட்டிற்கு நன்மை…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ) – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌ை) – தொடர்ச்சி)   தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ)  ‘பேராசிரியர் இலக்குவனாரே மொழிப்போர்த் தந்தை’ என்பதை எடுத்தியம்பி ஆய்வுசெய்துள்ள திருவாட்டி து.சுசீலா பின் வருமாறு தம் ஆய்வேட்டில் குறிப்பிட்டுள்ளார்:   தி.மு.க. கை விட்டுவிட்ட பிறகும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மாணவர்கள் தொடர்ந்து நடத்திய செய்தி இப்போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியவர்கள் மாணவர்கள் என்பதை வலியுறுத்துகிறது. அத்தகைய மாணவர்களின் பங்களிப்பிற்கு மூலக் காரணமாகவும் விலைவாசிப் போரில் ஈடுபட்டிருந்த தி.மு.க. கழகத்தினரை இந்தி எதிர்ப்புப்போரில் ஈடுபடுத்திய கோட்பாட்டாளராகவும் (Theoretician) இலக்குவனார் தமிழ்உரிமைப்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌‌‌ை) – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌ே) –  ‌தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌‌‌ை)  பேராசிரியர் இலக்குவனாரின் மொழிப்போர்த் தலைமை குறித்த நல்லாவணமாகப் பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற்பொழிவொன்றைக் குறிப்பிடலாம். பேராசிரியர் இலக்குவனாரின் 55 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழாவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு: பேராசிரியரை(இலக்குவனாரை)ச் சிறைப்படுத்தியதால், வேலையிலிருந்து நீக்கி வாழ்வில் தொல்லை விளைவித்ததனால், தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டதாகத் தவறாகக் கணக்கு போடுகிறார்கள். முப்பதாண்டு காலமாகப் பேராசிரியர் இலக்குவனார் ஊட்டிய தமிழ்  உணர்ச்சி நூறாயிரக்கணக்கான தமிழர்களைத் தமிழுணர்வு கொண்ட…

பாவேந்தரும் பொதுவுடைமையும் 3/4 – முனைவர் நா.இளங்கோ

  (பாவேந்தரும் பொதுவுடைமையும் 2/4 தொடர்ச்சி) பாவேந்தரும் பொதுவுடைமையும் 3/4 1940 தொடங்கிப் பாவேந்தர் தம்மை முழுமையான திராவிட இயக்கக் கவிஞராக, தமிழ்த் தேசியம் நாடும் கவிஞராக, தனித் தமிழ்நாடு அல்லது தனித் திராவிடநாடு கோரும் கவிஞராகத் தம்மை அடையாளப் படுத்திக்கொண்டார். ஆனாலும் தாம் சார்ந்த தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்கம் காண விரும்பும் குமுகாயமாக அவர் சமத்துவக் குமுகாயத்தைக் காட்டத் தவறியதே இல்லை. பாவேந்தர் பாடல்கள் வழி ஊற்றம் பெற்ற திராவிட இயக்கத்தினர் அனைவரும் பொதுவுடைமைச் சமூகமே, திராவிட இயக்கத்தின் குறிக்கோள் என்பதாக உணர்ந்தார்கள். ஆனால்…

புரட்சி எண்ணமும் செயலும் கொண்ட இலக்குவனார் – இரவி இந்திரன்

புரட்சி எண்ணமும் செயலும் கொண்ட இலக்குவனார் அஞ்சா நெஞ்சும் அதிஉயர் கல்விச் செறிவும் வரலாற்றுத் தெளிவும் ஒருங்கே உருவான அறிஞரின் கதை. (17.11.1909 – 03.09.1973)   1965, இந்தி எதிர்ப்புப் போராட்ட காலம். உளவுத்துறைக்கு ஒரு செய்தி வருகிறது. தமிழகமெங்கும் போராட்டத் தீ பரவிக்கொண்டிருக்கிறது. மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைக் எரிக்கப் போகிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.   உடனே விழிப்படைந்த உளவுத்துறையினர் அறிஞர் அண்ணாவிடம் வருகிறார்கள். மாணவர்கள் போராட்டத்தை நிறுத்திக்கொள்ளும்படி அறிக்கை விடும்படி கேட்கிறார்கள். மாணவர்களின்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 06: ம. இராமச்சந்திரன்

     (அகரமுதல 103 ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி) 6   1959ஆம் ஆண்டு மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணிபுரிய வருமாறு அழைப்புக் கிடைத்தவுடன் மதுரை சென்றார். கலைத்தந்தை தியாகராசச் செட்டியாரின் அரவணைப்பில் 1965 தொடக்கம் வரை மிகச் சிறப்பாகப் பணிபுரிந்தார். புலவர் விழா நடத்தி, மாணவர்களிடம் தமிழ் உணர்வையும் தமிழ்ப்பற்றையும் வளர்த்தார். தொல்காப்பிய ஆராய்ச்சி’16 என்னும் மிகச் சிறந்த ஆராய்ச்சி நூலையும் பழந்தமிழ்’17 என்னும் நூலையும் எழுதினார்.   மேலும் ‘குறள்நெறி’ என்னும் பெயரில்…

இந்தி எதிர்த்திட வாரீர் – பாரதிதாசன்

இந்தி எதிர்த்திட வாரீர் இந்தி எதிர்த்திட வாரீர் — நம் இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர்        (இந்தி) முந்திய காலத்து மன்னர் நம் முத்தமிழ் நாட்டினில் தொத்திடு நோய்போல் வந்தவட மொழிதன்னை — விட்டு                                                                                 (5) வைத்ததனால்வந்த தீமையைக் கண்டோம்.  (இந்தி) செந்தமிழ் தன்னில் இல்லாத — பல சீமைக் கருத்துக்கள் இந்தியில் உண்டோ? எந்த நலம்செய்யும் இந்தி — எமக்கு இன்பம் பயப்பது செந்தமிழன்றோ.         (இந்தி)                                                      (10) தென்னாடு தான்எங்கள் நாடு — நல்ல செந்தமிழ் தான்எங்கள்…

இந்தியை ஏன் கற்க வேண்டும் ? – பாவாணர்

  தமிழ் மாணவன் தன் பெற்றோரை வினவல்  “கழுகுமலை குருவிகுளம்” என்ற மெட்டு வகை ப.             இந்தியை ஏன்கற்க வேண்டும் என்அம்மா என்அப்பா நான் (இந்தி)   உ.1             என்கருத்தைத் தெரிவிக்க என்மொழி யொன்றில்லையா பொன்மணிபோற் சொற்களே பொலியுந்தமிழ் இருக்கையிலே (இந்தி)   2             அறிவியற்கே ஆங்கிலம் அளவில்லாநூல் அளிக்கவும் வெறுமையுற்ற கலமென விழுமியநூல் எதுமிலாத (இந்தி)   3             அடிமைநாளில் அயன்மொழி அறிந்துவந்தோம் என்கின்றார் உரிமைவந்த பின்னரும் உறவில்லாத வடநிலத்து (இந்தி)   4             வரவரவே…

சனவரி 25 கதை – முனைவர் ம.நடராசன்

சனவரி 25 கதை – முனைவர் ம.நடராசன்   அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய தமிழ் அறிஞர், தன்மானத் தமிழ் மறவர் பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளும் அற்புதமான வாய்ப்பு எனக்குக் கிட்டியது.   சான்றோர்களும், புலவர்களும், அறிஞர் பெருமக்களும் கலந்துகொண்ட அவ்விழாவில் நான் பகிர்ந்துகொண்ட என் உணர்வுகளை வாசகர்களுக்காக இங்கே தருகிறேன்.   அமெரிக்காவில் இருக்கின்ற உலகத் தமிழர் அமைப்பு இலக்குவனார் அவர்களுக்கு நூற்றாண்டு விழாவை நடத்தினார்கள். அந்தச் செய்திகள் எனக்கு மின் அஞ்சலில் வந்து சேர, அதைப்…

1 2 4