இனிமைத் தமிழில் இருக்கின்ற ” மை ” விகுதிக்

      கனிவான மூவெழுத்துச் சொற்கள் எவையெனஎன்

கருத்தாய்வில் முனைந்து பொருத்தத் தேடினேன்

     திருத்தச் சொற்களைக் குருத்தாய்க் கூறுகிறேன்.

அண்மை யோடருமை அடிமை இம்மை

இனிமை இருமை இளமை இறைமை

இன்மை இலாமை யோடுஆளுமை ஆடுமை

ஆண்மை ஆணுமை ஆடாமை ஆளாமை

ஆணிமை ஆகாமை ஈகாமை உரிமை

     உடைமை உண்மை உம்மை உவமை

உறாமை ஊராமை ஊர்மை ஊதாமை

     ஊதுமை ஊடாமை ஊடுமை எண்மை

எளிமை எருமை எம்மை எழுமை

     எலாமை ஏவாமை ஏகுமை ஒருமை

ஒன்மை ஓதுமை ஓதாமை ஓடுமை

     ஓர்மை ஓடாமை கடமை கடுமை

கருமை கதிமை கருமை கயமை

     கண்மை காய்மை காயாமை காடாமை

கிழமை கீழ்மை கூடுமை கூடாமை

     கூர்மை கூறாமை கூகாமை கூவாமை

கொடுமை கொடாமை கெடுமை கெடாமை

கெழுமை கேண்மை கேளாமை கொண்மை

கொம்மை கோடுமை கோடாமை கோன்மை

கோராமை குறுமை குளுமை குரிமை

குடிமை குருமை கூர்மை கூடுமை

      கூடாமை சிறுமை சின்மை சீர்மை

சுடுமை சுடாமை சும்மை செம்மை

     செழுமை சேர்மை சேராமை சேய்மை

தகைமை தாய்மை திண்மை திருமை

     தீய்மை தீயாமை துணைமை தேய்மை

தேயாமை தூய்மை துவாமை தூவுமை0

      தொம்மை தொன்மை தோன்மை தோழமை

நறுமை நன்மை நீர்மை நீன்மை

      நீடுமை நீடாமை நீவுமை நீவாமை

நெடுமை நேர்மை நேராமை நேரிமை

     நோன்மை நோனாமை நோலாமை பசுமை

படிமை பன்மை பதுமை பகைமை

     பாலமை பாவுமை பாவாமை பான்மை

பிரமை புதுமை புன்மை புலமை

      பெருமை பெண்மை பெறாமை பெருமை

பொதுமை பொறுமை பொய்மை மகமை

     மடமை மறுமை மிடிமை முதுமை

மும்மை முகமை மெய்மை மென்மை

     மேன்மை மேவுமை மோதுமை மோதாமை

வன்மை வண்மை வலிமை வளமை

      வறுமை வராமை வாதுமை வாடாமை

வாளாமை வாழாமை வாய்மை வாலாமை

      வான்மை வெண்மை வெம்மை வெறுமை

எழுபத் தொன்பதுடன் தழுவும்நூறு சொற்கள்நான்

     உழுததில் கிடைத்தது; வழுவிய சொல்ஒன்று

தொழுது வணங்கும் தொல்தமிழில் தொல்லைமிகும்

     பழுதானதென நான்எண்ணும் பழுவான சொல்அது!

முப்பருவ காலத்திலும் தப்பாமல் இடம்பெறும்

     எப்போது காண்போம் முப்போதும் காக்கும்தாயை

 செப்பவழி காணாது செவ்விதழ் திறந்துமூடி

     எப்போது வருவாளென ஏங்கும்குழந்தைப் பருவத்துச்சொல்!

இளமை முறுக்குடன் வளமைக்காதலில் வீழ்ந்தார்

     தளர்ந்த மனத்துடன் தளராக்காதல் வளர்க்க

அரும்பு மலர்ந்து சுரும்பின்வரவு காணல்போல்

     இரும்பில் அரைபட்ட கரும்பானஇளமை பருவச்சொல்!

வாழும் வாழ்க்கையிலே பாழும்பிரிவு ஒன்று

     சூழும்நிலை காணும்போது வீழ்ந்தழும் நெஞ்சம்

கடலில்எழும் கதிரவன் மலைமறைவு காண்பதுபோல்

      உடலினுயிர் பிரிந்தபோது விடமாகும் முதுபருவச்சொல்!

கடுமை யானசொல் இடும்பை பலதரும்

     கொடுமையான சொல்லது விடுவிக்க முடியுமா?

இனிமைத் தமிழில் இப்படி ஒருசொல்லா?

     கனிவாகக் கூறுகிறேன்” தனிமை” யே அச்சொல்

– இளையவன்–செயா, மதுரை