Maraimalai_adigal04

இறைவன் கண்ட பொருள்வரம்பு அறிந்து

சொல்நெறி மாட்சியும் பொருள் நெறிமாட்சியும்

அளவையின் விளைவும் தெளிவுற விரித்து

சுவைபெற உரைத்த நவையில் புலமையும்

மறைப்பொருள் குறிப்பு நெறிப்பட ஆய்ந்து

சிவனையே முதல் எனச் சிவணிய காட்சியும்

சீரிதின் இயைந்த கீரன்

-தமிழ்க்கடல் மறைமலையடிகள்:

திருவொற்றியூர் மும்மணிக்கோவை: 55-61