pongal vaazhthu01

குறள்நெறி     ஓங்கி         குடியர              சுயர்ந்து
பசியும்           பிணியும்        பகையும்   நீங்கி
வசியும்      வளனும்             சுரந்து            வாழியர்
வையகம்      வாழ்க;        வான்தமிழ்     வெல்க
உழைப்பே   உயிரென      உலகுக்    குணர்த்தும்
பொங்கற்   புதுநாள்        பொலிவுடன்     சிறக்க
எங்கும்           இன்பம்      இனிதே      பொலிகவே.

–  செம்மொழிச்சுடர் பேராசிரியர்     முனைவர் சி.இலக்குவனார்
       (குறள் நெறி பொங்கல் ஆண்டு மலர் 15-01-1965)