ஏழு வண்ணங்கள்

 

அத்தைநேற்று வீட்டில்

ஆக்கிவைத்த சாம்பார்!

கத்திரிக்காய்! ஊதா!

கண்சிமிட்டு தாம்பார்!

மொட்டைமாடி மேலே

முட்டிநிற்கும் வானம்!

கொட்டுதங்கே நீலம்!

குளிக்கவேண்டும் நானும்!

 – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன்

புன்னகைப் பூக்கள் : பக்கம் 37