சிறாருக்கான குறள் விருந்து மின்னிதழ்

சிறுவர் சிறுமியர் குறள்நெறி வழி நடைபோட வந்துள்ள திங்கள் மின்னிதழ் குறள் விருந்து.

உலகத்திருக்குறள் இணையக் கல்விக்கழகத்தால் இலவச இணைய இதழாக வெளியிடப்பெறுகிறது.

இதன் ஆசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார். பொறுப்பாசிரியர் முற்போக்குப்பாவலர் திருவாட்டி தாமரை சீனிவாசராவு. முனைவர் முரசு நெடுமாறன் சிறப்பாசிரியராக உள்ளார். பொறி தி.ஈழக்கதிர் இணை ஆசிரியராக உள்ளார்.

கம்போடியா அங்கோர் தமிழ்ச்சங்கப் பொருளாளராகவும் உள்ள இதன் பொறுப்பாசிரியர் திருவாட்டி தாமரை சீனிவாசராவு எழுதிய தலைமைப்பண்பிற்கு உயிர்நேயம் தேவை என வலியுறுத்தும் வகுப்பறை-சிறுவர் கதை விருந்து முதல் இதழில் இடம் பெற்றுள்ளது.

 மாணவ எழுத்தாளர் செல்வன் செ.குருபரன் எழுதியுள்ள புலவரை வென்ற தெனாலிராமன் என்னும் சிறுகதையும் விருந்து படைத்துள்ளது.

இரு கதைகளுமே திருக்குறள் நெறியை வலியுறுத்துவன.

முகப்புப்பக்கம் குறளைக் கற்போம் குழந்தைகளே என்னும் பாடல் இடம் பெற்றுள்ளது.

 நீங்களும் குறள் விளக்கக் கதைகள், கட்டுரைகள்,கவிதைகள்  அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்வரி: anjal@kuralvirtual.com

சிறாரிலக்கியத்திற்கும் குறள்நெறிக்கும் வலிவும் பொலிவும் சேர்க்கும் குறள் விருந்து பல்சுவை பரப்பி நிலைப்பதாக!