குடிப்பீரா உழவனின் கண்ணீர்? 

 

அதிகார மேடையில் சதிராடும் பேய்களே

அநியாயம் செய்யலாமா? – உங்கள்

அலட்சிய வேள்விக்கு வேளாண் தோழர்கள்

விறகாக எரியலாமா?

 

விதியற்றுக் கதியற்று உழவனும் துயரிலே

வெந்துபோய்க்  கதறலாமா? -எங்கள்

வேளாண் தோழர்கள் படும்பாட்டை இன்னமும்

வேடிக்கை பார்க்கலாமா?

 

நதிநீரைக் கேட்பதும் கடன்நீக்கச் சொல்வதும்

நாட்டோரின்   உரிமைதானே! -தீய

நரிகளே உழவனின் கண்ணீரைக் குடிக்கவா

நாற்காலி ஏறினீர்கள்?

 

சதிகாரக் கும்பலே கதியற்ற உங்களைச்

சடுதியில் விரட்டுவோமே! -சற்றும்

வெட்கமே இல்லாத வேதாந்தக் கூட்டமே

விரட்டியே துரத்துவோமே!

 

– ஆரூர் தமிழ்நாடன்