உன்னிதழில் என் சொற்கள்! – ஆரூர் தமிழ்நாடன்

உன்னிதழில் என் சொற்கள்!   உன்காட்டு முட்களினால் பாதந் தோறும் உண்டாகும் பரவசத்தை என்ன வென்பேன்! உன்னம்பு  துளைக்கின்ற இதயத் திற்குள் உயிர்க்கின்ற காதலினை என்ன  வென்பேன்! உன்மூலம் வருகின்ற மரணம் என்றால் உயிர்கசிய வரவேற்றுப் பாட்டி சைப்பேன்! இன்னும்நீ வெறுமையினைக் கொடுப்பா யானால் என்னுலகை நலமாக முடித்துக் கொள்வேன்!   வரையாத சித்திரமாய் வந்தாய்; எந்தன் வாழ்வினது சுவரெல்லாம் ஒளிரு கின்றாய்! கரையோரம் கதைபேசும் அலைகள் போலக் கச்சிதமாய் உயிர்ப்பாகப் பேசு கின்றாய்! அரைஉயிராய்க் கிடக்கின்ற போதும்; என்னை அரைநொடிநீ நினைத்தாலும் பிழைத்துக்…

பிணம் மிதக்கும் கங்கையிடம் இரக்கமா? – ஆரூர் தமிழ்நாடன்

பிணம் மிதக்கும் கங்கையிடம் இரக்கமா?   உழவர்களின் கண்ணீரில் கரைந்துகொண்டிருக்கிறது தேசத்தின் மீதான நம்பிக்கை. இங்கே அதிகாரத்தில் பாலை. அதனிடம் நீதிகேட்டுப் போராடுகிறது எங்கள் வண்டல். கழனிகளுக்குப் பாலூட்டும் கருணைக் காவிரி பிணம் மிதக்கும் கங்கையிடம் இரக்கத்தை  எதிர்பார்க்கலாமா?  வடக்கத்தி கோதுமை தெற்கத்தி அரிசியை எள்ளி நகையாடுவது உயிரியல் அவமானம். வேளாண் தோழனே! பசிக்குச் சோறிடும் உன்னைப் பசியோடு அலையவைக்கிறது தேசம். கதிர் அறுக்கும் உன் அரிவாளைப் பிடுங்கி உன் கழுத்தை அறுக்கிறது தேசம் நாட்டின் மானம் காக்கப் பருத்தி கொடுக்கும் உன்னை அம்மணமாக்கி…

குடிப்பீரா உழவனின் கண்ணீர்? – ஆரூர் தமிழ்நாடன்

குடிப்பீரா உழவனின் கண்ணீர்?    அதிகார மேடையில் சதிராடும் பேய்களே அநியாயம் செய்யலாமா? – உங்கள் அலட்சிய வேள்விக்கு வேளாண் தோழர்கள் விறகாக எரியலாமா?   விதியற்றுக் கதியற்று உழவனும் துயரிலே வெந்துபோய்க்  கதறலாமா? -எங்கள் வேளாண் தோழர்கள் படும்பாட்டை இன்னமும் வேடிக்கை பார்க்கலாமா?   நதிநீரைக் கேட்பதும் கடன்நீக்கச் சொல்வதும் நாட்டோரின்   உரிமைதானே! -தீய நரிகளே உழவனின் கண்ணீரைக் குடிக்கவா நாற்காலி ஏறினீர்கள்?   சதிகாரக் கும்பலே கதியற்ற உங்களைச் சடுதியில் விரட்டுவோமே! -சற்றும் வெட்கமே இல்லாத வேதாந்தக் கூட்டமே விரட்டியே துரத்துவோமே!…

பாரதிதாசனுக்கு மணிமண்டபம் வேண்டும் பாரதி – ஆரூர் தமிழ்நாடன்

பாரதிதாசனுக்கு மணிமண்டபம் வேண்டும் பாரதி “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” – என்று முரசறைந்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.  ஏப்பிரல் 29-இல் அவரது 127-ஆவது பிறந்தநாள் வருகிறது. இதைத்தொடர்ந்து, அவர் பிறந்த மாநிலமான புதுவையில், மாநில அரசு அவருக்கு மணிமண்டபம்  அமைக்கவேண்டும் என்றும், அவருக்கு மேலும் சிறப்புகளைச் சேர்க்கவேண்டும் என்றும் கோரிக்கைக்குரல், தமிழன்பர்கள் மத்தியில் வலுவாக எழுந்திருக்கிறது.   தமிழுக்கு வளமும் நலமும் சேர்த்தவர் கனக சுப்புரத்தினம் என்னும் இயற்பெயரைக் கொண்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். மொழிப்பற்றையும் இனப்பற்றையும் தன் உணர்ச்சிமிகும்…

பிச்சைப் பாத்திரத்திடம் கையேந்தலாமா? – ஆரூர் தமிழ்நாடன்

பிச்சைப் பாத்திரத்திடம் கையேந்தலாமா? உழவர்களே! நாட்டின் அட்சயப் பாத்திரமான நீங்கள் பிச்சைப் பாத்திரத்திடம் கையேந்தலாமா? தாய் வீடான  தமிழகம் திரும்புங்கள்! நீங்கள் இதுவரை வடித்த கண்ணீரைக் கொண்டே இருபோகச் சாகுபடியை இங்கே முடித்திருக்கலாம். அழுகிய காயங்களிடம் மருந்து கேட்காதீர்கள்! வெளிச்சத்தின் புத்திரர்களே! விழி ஈரம் துடைத்துத் தாய் வீடான தமிழகம் திரும்புங்கள்! அதிகாரப் பசியெடுத்த ஆதிக்கக் கழுகுகளுக்கு இதயம் இல்லை. செவிகளும் கூடச் சேர்ந்தாற்போல் செத்துவிட்டன அவற்றின் கண்களும் கல்லறைக்குப் போய்விட்டன இறக்கத்தில் கிடக்கும் அவற்றிடம் இனியும் இரக்கத்தை எதிர்பார்க்கலாமா? தாய் வீடான தமிழகம்…

இனிப்புத் தோப்பே! – ஆரூர் தமிழ்நாடன்

 இனிப்புத் தோப்பே கனவுகளின் தாயகமே… கவிதைகளின் புன்னகையே வைரத் தேரே!.. கண்வளரும் பேரழகே… கால்முளைத்த சித்திரமே இனிப்புத் தோப்பே.. . நினைவுகளை அசைக்கின்றாய்… நெஞ்சுக்குள் நடக்கின்றாய்… தேவ தேவி… நின்றாடும் பூச்செடியே… உன்பார்வை போதுமடி அருகே வாடி. பார்வைகளால் தீவைத்தாய்; பரவசத்தில் விழவைத்தாய்; தவிக்க வைத்தாய்! ஊர்வலமாய் என்னுள்ளே கனவுகளைத் தருவித்தாய் சிலிர்க்க வைத்தாய். நேர்வந்த தேவதையே நிகரில்லா என்நிகரே உயிர்க்க வைத்தாய். யார்செய்த சிற்பம்நீ? எவர்தந்த திருநாள்நீ? மலைக்க வைத்தாய். உன்பிறப்பை உணர்ந்ததனால் நீ பிறக்கும் முன்பாக நான் பிறந்தேன்; என் நோக்கம்…

நான்தான் கடவுள்! – ஆரூர் தமிழ்நாடன்

நான்தான் கடவுள்! நான்தான் கடவுள்; நான்தான் கடவுள்; நான்தான் பூமியை நடத்தும் கடவுள்! நம்ப மறுக்கும் நண்பர்க ளேஎனைக் கூர்ந்து பார்த்தால் கும்பிடு வீர்கள்! எங்கும் நான்தான் இல்லா திருக்கிறேன்; எங்கும் ஆசையாய் இறைந்து கிடக்கிறேன்; மழையோ வெயிலோ மயக்கும் பொழுதோ மனமொன் றாமல் மரத்துத் திரிகிறேன்; வாழ்வின் மகிழ்வை வசீகர சுகத்தை உணர்ந்து நெகிழ ஒருபொழு தில்லை; வலிகள் என்று வருந்திய தில்லை; நிறைவென நெஞ்சம் நெகிழ்ந்ததும் இல்லை; நான்தான் கடவுள்; நான்தான் கடவுள்; நான்தான் பூமியை நடத்தும் கடவுள்! இசைக்கென உயிரும்…

கருப்பினப் போராளி அலி! -ஆரூர் தமிழ்நாடன்

  முகமது அலி, உலகக்குத்துச்சண்டை உலகில் சுற்றிச் சுழன்ற கறுப்புச் சூறாவளி.  அமெரிக்காவில் நிலவும் நிறவெறிக் கொடுமைகளுக்கு எதிராகத் தொடர்ந்து மிகுவலுக் குத்துகளை விட்டுகொண்டிருந்த மாவீரர் அவர். நடுக்குவாத (Parkinson) நோயோடு 30 ஆண்டுகளுக்கும் மேலாய், மல்யுத்தம் நடத்திகொண்டிருந்த அந்த மாவீரர், தனது 74-ஆவது  அகவையில், கடந்த 3-ஆம்நாள் தன்  நேயர்களிடமிருந்து  நிலையாக விடைபெற்றுக்கொண்டார். உலகைப் போட்டிகளில் அழுத்தமான குத்துகளால் எதிராளிகளை மிரட்டிய அவரது கைகள், அசைவற்ற  அமைதியில் அமிழ்ந்துவிட்டன.     அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் 1942- இல் பிறந்த அலியின் இயற்பெயர்,…

அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும்! – செயபாசுகரன்

  தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர்  நா.அருணாசலம், வாழ்வின் விளிம்புக்குப் போனதையறிந்த தமிழ்ச்சுற்றங்கள், கவலையோடு அவர் இல்லத்தில் குழும… தேனிசை செல்லப்பா, புட்பவனம் குப்புசாமி போன்ற பாவாணர்கள், ஆனாரூனாவுக்குப் பிடித்த இன எழுச்சிப் பாடல்களை, அவர் காதுபடப் பாடினர். புட்பவனம்,  ஆனாரூனா அவர்களைப்பற்றி  செயபாசுகரன் எழுதிய “தமிழ்மொழியின் வேரில் பாயும்’’  எனத்தொடங்கும்  பாடலைத்,   தேம்பலுடன் பாடியபோது, அதைக் கேட்டபடியே ஆனாரூனா அவர்களின் இதயத் துடிப்பு கரைந்துவிட்டது. அப்பாடல் வருமாறு: அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும்!   தமிழ் மொழியின் வேரில் பாயும் தஞ்சை…