
திருப்பூர் தேவியின் குறும்பாக்கள்
– விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல்
வெறும் கூழாங்கற்கள் கிளிஞ்சல்களுடன்
அரற்றியது…
மணலையிழந்த ஆறு!
பெருங்கூட்டம்
எனப் பெயர் வாங்கின…
தனித்தனியான விண்மீன்கள்!
யார் ஒளித்து வைத்தது
குழலையும் இசையையும்…
மூங்கில் வனத்தினுள்?
- வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்
Leave a Reply