திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் 

 

மது அருந்தாமலே வாழ்ந்து முடித்தவனை

மது நிரம்பிய மலர்களால் போர்த்தி இருந்தனர்

அவன் அந்திமத்தில்!

++

பூவாங்கக் காசு போதாததால்

அதை விற்கும் வேலையை

வாங்கிக் கொண்டாள்

ஏழைச் சிறுமி!

++

சிதைந்து உடன்கட்டை ஏறின

இறந்தவருடன்…

சாலையில் இறைக்கப்பட்ட

மலர்கள்…!

++

 

 

 

 

 

வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்