திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – கவிதைகள்

திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – கவிதைகள்   போகும் இடமெல்லாம் எடுத்தேதான் செல்கிறாள்… இன்னும் எழுதாக் கவிதைகளை! +++ ஒப்படைத்து விட்டாள் சொற்களைக் கவிதைகளாக்கி வாசகர் வசம்..! வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்

திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல்

திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல்     வெறும் கூழாங்கற்கள் கிளிஞ்சல்களுடன் அரற்றியது… மணலையிழந்த ஆறு!   பெருங்கூட்டம் எனப் பெயர் வாங்கின… தனித்தனியான விண்மீன்கள்!   யார் ஒளித்து வைத்தது குழலையும் இசையையும்… மூங்கில் வனத்தினுள்?     வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்