
நான்கு காசு சேர்ப்பதற்காம்!
ஆட்டிப் படைப்பதை ஆட்சி என்றார்;
அதைத்தான் விரும்பும் காட்சி என்றார்.
காட்டிக் கொடுப்பதைத் திறமை என்றார்;
கயமை கொள்வதும் உரிமை என்றார்.
நாட்டில் நன்மை செய்வதெல்லாம்,
நான்கு காசு சேர்ப்பதற்காம்;
ஊட்டிக் கொடுக்கும் இந்நஞ்சை,
ஒழிக்கும் வழிதான் இறையரசாம்!
– கெர்சோம் செல்லையா
Leave a Reply