கொடுமை செய்வோர் வாழ்கின்றார்!

 

கொன்று, திருடி, ஏமாற்றி,

கொடுமை செய்வோர் வாழ்கின்றார்!.

இன்று இவரைப் பாராட்டி

ஏற்போர் நாட்டில் ஆள்கின்றார்.

அன்று இறைவன் உரைத்திருந்தும்,

அவற்றை மறப்போர் வீழ்கின்றார்.

நன்று எதுவென உணர்பவர்தான்,

நன்மை வழியில் மீள்கின்றார்!

 

கெருசோம் செல்லையா