தலைப்பு- நான்கு காசு சேரப்பதற்காம், செல்லையா ;thalaippu_naangukaasu_serppatharkaam_sellaia

நான்கு காசு சேர்ப்பதற்காம்!

 

ஆட்டிப் படைப்பதை ஆட்சி என்றார்;

அதைத்தான் விரும்பும் காட்சி என்றார்.

காட்டிக் கொடுப்பதைத் திறமை என்றார்;

கயமை கொள்வதும் உரிமை என்றார்.

நாட்டில் நன்மை செய்வதெல்லாம்,

நான்கு காசு சேர்ப்பதற்காம்;

ஊட்டிக் கொடுக்கும் இந்நஞ்சை,

ஒழிக்கும் வழிதான் இறையரசாம்!

– கெர்சோம் செல்லையா