தலைப்பு-கேளேன், செல்லையா ;thalaippu_kealean_chellaiah

நீர் காண்பதுபோல் நான் காண ….

ஊர் முழுதும் சொத்தும் கேளேன்;

உணவு, உடை, வீடும் கேளேன்;

பார் புகழும் பேரும் கேளேன்;

பரிசு, பொருள் என்றும் கேளேன்.

நீர் காணும் காட்சியைத்தான்,

நான் காண விரும்புகின்றேன்.

நேர்மையாய் பார்க்கும் இறையே,

நெஞ்சில் உம் ஆவி கேட்டேன்.

-கெர்சோம் செல்லையா.