nepal_earthquake

இமயத் தொட்டிலில் ஆட்டமடா !

 இயற்கை அன்னை சீற்றமடா !

 பூமாதேவி சற்று தோள சைத்தாள் !

 பொத்தென வீழும் மாளிகைகள்

 பொடி ஆயின குடி வீடுகள் !

 செத்து மாண்டவர் எத்தனை பேர் ?

 இமைப் பொழுதில்

எல்லாம் இழந்தவர் எத்தனை பேர் ?

 கட்டிய இல்லம், சேமித்த செல்வம்

 பெட்டி, படுக்கை, உடுப்பு,

 உணவெல்லாம் மண்ணாய்ப் போச்சு !

 அந்தோ !

 வேனிற் கால வாடைக் காற்றில்,

அழும் சேய்க ளோடு

 தெரு மேடையில் தூங்குகிறார் !

 வானமே கூரை !

 சுவரில்லை ! கதவில்லை !

 போர்த்திக் கொள்ள

 துணி யில்லை !

 மானம் போனது, மதிப்பு போனது !

 தானம், தருமம் நாடி

 வானம் நோக்கித் துதிக்கிறார் !

 கடவுளுக்குக்

 கண்ணில்லை; காதில்லை !

 கருணையும் இல்லை !

 எண்ணிலா நேபாளியர் புதைபட்டார்

 உயிரொடு !

 இடிந்த வீடுகள் புதை காடாயின !

 எங்கெங்கு வாழினும்

 இன்னலடா!

 ஏழு பிறப்பிலும் தொல்லையடா !

 சூழ்வெளி மட்டும்

 பாழாக வில்லை யடா!

 ஆழ் பூமிக் குள்ளும்

 புற்று நோய் தொற்றுமடா

 – சி. செயபாரதன், கனடா