weedfrnt01
களை யெடுக்கின்றாள்-அதோ
கட்டழகுடையாள் சிற்றிடையாள் அதோ
களையெடுக்கின்றாள்!
வளையல்தனில் மங்கைமாருடன்
இளங் கரும்பிடைச் செங்கரும்பு போல்
களை யெடுக்கின்றாள்!
கவிழ்ந்த தாமரை
முகம் திரும்புமா? -அந்தக்
கவிதை ஓவியம்
எனை விரும்புமா?
அவிழ்ந்து வீழ்ந்த கருங்கூந்தலாம்
அருவிநீரில் எப்போது முழுகலாம்?- களை
செந்நெல் காப்பது
பொதுப்பணி செய்யல்!-ஆம்.
என்ற நினைவினால்
என்னருந் தையல்,
மின்னுடல் வளைய வளையல்கள் பாட
விரைவில் செங்காந்தள் விரல்வாட- களை

weed02