periyar04

பெரியார்

ஒருகுலத்துக் கொருநீதி உரைத்து நிற்கும்

உயர்வில்லார் தலைசாயப் புரட்சி செய்த

ஒரு தலைவர்; தென்னாட்டின் உயர்வைக் கூறும்

உயர்கதிரோன்; சாதியென்னும் கொடிய காட்டுள்

வருகின்ற இன்னலதை எதிர்த்துப் போக்கி

வாளேந்தி முதற்பயணம் செய்த வீரர்;

இருளகற்றும் பணிபுரிந்து நிற்கும் செம்மல்,

எம் தலைவர் தமிழ்ப் பெரியார் என்றும் வாழ்க!

– கவிஞர் கதி.சுந்தரம்